under review

எஸ்.ஏ. கணபதி: Difference between revisions

From Tamil Wiki
(Moved template to bottom of article)
No edit summary
Line 1: Line 1:
[[File:Ganapathy.jpg|thumb|455x455px|எஸ்.ஏ. கணபதி]]
[[File:Ganapathy.jpg|thumb|455x455px|எஸ்.ஏ. கணபதி]]
[[File:Malaya-ganapathi-endra-tamilganapathi FrontImage 870.jpg|thumb|மலேயா கணபதி. ராசின்]]
[[File:Malaya-ganapathi-endra-tamilganapathi FrontImage 870.jpg|thumb|மலேயா கணபதி. ராசின்]]
[[File:தம்பிக்கோடை கல்வெட்டு.png|thumb|தம்பிக்கோடை கல்வெட்டு 1986]]
[[File:தம்பிக்கோடை கல்வெட்டு.png|thumb|தம்பிக்கோட்டை கல்வெட்டு 1986]]
[[File:தம்பிக்கோடை புதிய கல்வெட்டு.png|thumb|தம்பிக்கோடை புதிய கல்வெட்டு]]
[[File:தம்பிக்கோடை புதிய கல்வெட்டு.png|thumb|தம்பிக்கோட்டை புதிய கல்வெட்டு]]
[[File:Periyar-on-ganapathy.png|thumb|பெரியார் கண்டனம்]]
[[File:Periyar-on-ganapathy.png|thumb|பெரியார் கண்டனம்]]
[[File:Ganapathy3.jpg|thumb|இந்தியா கண்டனம்]]
[[File:Ganapathy3.jpg|thumb|இந்தியா கண்டனம்]]
Line 12: Line 12:
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில், ஜப்பானிய ஆதரவுடன், சுபாஷ் சந்திர போஸ் 1942-ல் இந்திய தேசிய ராணுவம் (Indian National Army) என்னும் விடுதலைப்படையை அமைத்தார். அதில் எஸ். ஏ. கணபதி ஓர் அதிகாரியாகவும், பயிற்றுநராகவும் சேவை செய்தார்.
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில், ஜப்பானிய ஆதரவுடன், சுபாஷ் சந்திர போஸ் 1942-ல் இந்திய தேசிய ராணுவம் (Indian National Army) என்னும் விடுதலைப்படையை அமைத்தார். அதில் எஸ். ஏ. கணபதி ஓர் அதிகாரியாகவும், பயிற்றுநராகவும் சேவை செய்தார்.
====== மலாயா கம்யூனிஸ்டுக் கட்சி ======
====== மலாயா கம்யூனிஸ்டுக் கட்சி ======
எஸ்.ஏ.கணபதி மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினராக இருந்தார் ( Malaya Communist Party .MCP)  அக்கட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த 'முன்னணி' எனும் இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார்.
எஸ்.ஏ.கணபதி மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினராக இருந்தார் ( Malaya Communist Party MCP). அக்கட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த 'முன்னணி' எனும் இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார்.
====== இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ======
====== இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ======
[[File:எஸ்.ஏ.jpg|thumb|எஸ்.ஏ.கணபதி]]
[[File:எஸ்.ஏ.jpg|thumb|எஸ்.ஏ.கணபதி]]
Line 25: Line 25:
1946-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ராபின்சன் பூங்காவில் தொழிலாளர்களது போராட்டத்தை ஒருங்கிணைத்தார். அதில் மலேயா கணபதி, வீரசேனன், சம்சுதீன் ஆகியோர் உரையாற்றினார்கள். அவர்களை அரசு கைது செய்ய முயற்சி செய்தபோது, ஆங்கிலேய காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. அதில் இரண்டு சீனத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அப்பேரணியின் விளைவாக தொழிலாளர்களின் கோரிக்கைகள் பல அரசால் நிறைவேற்றப்பட்டன.
1946-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ராபின்சன் பூங்காவில் தொழிலாளர்களது போராட்டத்தை ஒருங்கிணைத்தார். அதில் மலேயா கணபதி, வீரசேனன், சம்சுதீன் ஆகியோர் உரையாற்றினார்கள். அவர்களை அரசு கைது செய்ய முயற்சி செய்தபோது, ஆங்கிலேய காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. அதில் இரண்டு சீனத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அப்பேரணியின் விளைவாக தொழிலாளர்களின் கோரிக்கைகள் பல அரசால் நிறைவேற்றப்பட்டன.
[[File:வீரசேனனுடன்.jpg|thumb|வீரசேனனுடன் எஸ்.ஏ. கணபதி]]
[[File:வீரசேனனுடன்.jpg|thumb|வீரசேனனுடன் எஸ்.ஏ. கணபதி]]
[[File:Ganpathy-with-comrades.png|thumb|கணபதி தோழர்களுடன்]]
[[File:Ganpathy-with-comrades.png|thumb|கணபதி தோழர்களுடன்]]
1947-ஆம் ஆண்டு வாரத்துக்கு இரண்டு நாள் வேலைநிறுத்தம் என்ற கணக்கில் அந்த ஆண்டு மட்டும் 89 தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் நடத்தப்பட்டன. 1946,1947,1948 ஆம் ஆண்டுகளில் தொழிலாளர்களால் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தொழிலாளர் உரிமைகளை முன் வைத்து மலேயா கணபதி தலைமை தாங்கிய தொழிற்சங்க அமைப்பினர் எட்டு மணி நேர வேலை - எட்டு மணி நேர ஓய்வு - எட்டு மணி நேர தூக்கம் எனும் கோரிக்கையை முன் வைத்தார்கள். மேலும் தொழிலாளர்களைக் கூலி என அழைக்கக் கூடாது, மேநாளில் சம்பளத்துடன் கூடிய விடுதலை, சம்பள உயர்வு போன்ற போராட்டங்களை முன்னெடுத்து அதிலும் வெற்றியும் கண்டார். 1948-ஆம் ஆண்டு கணபதி மலாயாவின் அனைத்து இனங்களின் விடுதலைப் படையில் இணைந்தார். மலேயக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆதரவு அமைப்பான இதில் அவர் நேரடியாக அரசை எதிர்த்து போரிட்டார்.  
1947-ஆம் ஆண்டு வாரத்துக்கு இரண்டு நாள் வேலைநிறுத்தம் என்ற கணக்கில் அந்த ஆண்டு மட்டும் 89 தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் நடத்தப்பட்டன. 1946,1947,1948 ஆம் ஆண்டுகளில் தொழிலாளர்களால் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தொழிலாளர் உரிமைகளை முன் வைத்து மலேயா கணபதி தலைமை தாங்கிய தொழிற்சங்க அமைப்பினர் எட்டு மணி நேர வேலை - எட்டு மணி நேர ஓய்வு - எட்டு மணி நேர தூக்கம் எனும் கோரிக்கையை முன் வைத்தார்கள். மேலும் தொழிலாளர்களைக் கூலி என அழைக்கக் கூடாது, மேநாளில் சம்பளத்துடன் கூடிய விடுதலை, சம்பள உயர்வு போன்ற போராட்டங்களை முன்னெடுத்து அதிலும் வெற்றியும் கண்டார். 1948-ஆம் ஆண்டு கணபதி மலாயாவின் அனைத்து இனங்களின் விடுதலைப் படையில் இணைந்தார். மலேயக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆதரவு அமைப்பான இதில் அவர் நேரடியாக அரசை எதிர்த்து போரிட்டார்.  
Line 33: Line 32:
1946-ல் மலேசியா, சிங்கப்பூரில் இயங்கிய தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்தது. சங்கத்தினை பதிவு செய்வதற்காக தொழிற்சங்க சம்மேளனம் (Federation of Trade Union) இரண்டு ஆண்டுகள் காத்திருந்தது. இருப்பினும், தொழிற்சங்க சம்மேளனம் பதிவு செய்ய அனுமதிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.  
1946-ல் மலேசியா, சிங்கப்பூரில் இயங்கிய தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்தது. சங்கத்தினை பதிவு செய்வதற்காக தொழிற்சங்க சம்மேளனம் (Federation of Trade Union) இரண்டு ஆண்டுகள் காத்திருந்தது. இருப்பினும், தொழிற்சங்க சம்மேளனம் பதிவு செய்ய அனுமதிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.  


1947-ல் புதுடில்லியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மாநாட்டில் மலாயாப் பேராளர்களில் ஒருவராக எஸ். ஏ. கணபதி கலந்து கொண்டார். இம்மாநாட்டிற்கு ஜவர்ஹலால் நேருவின் தலைமை தாங்கினார்.  
1947-ல் புதுடில்லியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மாநாட்டில் மலாயாப் போராளிகளில் ஒருவராக எஸ். ஏ. கணபதி கலந்து கொண்டார். இம்மாநாட்டிற்கு ஜவர்ஹலால் நேரு தலைமை தாங்கினார்.  


இறுதியில், ஜூன் 13, 1948-ல் கணபதி தலைமை தாங்கிய தொழிற்சங்க சம்மேளனம் மலேசியாவில் ஒட்டு மொத்தமாக தடை செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது..
இறுதியில், ஜூன் 13, 1948-ல் கணபதி தலைமை தாங்கிய தொழிற்சங்க சம்மேளனம் மலேசியாவில் ஒட்டு மொத்தமாக தடை செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.
== ஒடுக்குமுறை ==
== ஒடுக்குமுறை ==
எஸ். ஏ. கணபதியின் உரிமைப் போராட்டங்கள் பிரித்தானியர்களின் நலன்களுக்குப் பெரும் இடையூறுகளாக அமைந்தன. உலகமெங்கும் அன்று உருவாகிக்கொண்டிருந்த கம்யூனிசக் கிளர்ச்சிகள் ஆட்சியாளர்களை அச்சுறுத்தின. ஆகவே பிரிட்டானியா அரசு கடுமையான ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் இறங்கியது.  
எஸ். ஏ. கணபதியின் உரிமைப் போராட்டங்கள் பிரித்தானியர்களின் நலன்களுக்குப் பெரும் இடையூறுகளாக அமைந்தன. உலகமெங்கும் அன்று உருவாகிக்கொண்டிருந்த கம்யூனிசக் கிளர்ச்சிகள் ஆட்சியாளர்களை அச்சுறுத்தின. ஆகவே பிரிட்டானியா அரசு கடுமையான ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் இறங்கியது.  
Line 52: Line 51:
இந்தியப் பிரதமர் நேரு மலேசியாவுக்கான இந்தியத் தூதர் ஜான்திவி அவர்களுக்குக் கடிதம் எழுதி, மலேசியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசுக்கு கடிதத்தை நேரில் தந்து, கணபதி அவர்களை கருணை அடிப்படையில் விடுவிக்கக் கேட்டுக் கொள்ளும்படிச் செய்தார். இம்முயற்சியைப் பற்றி இந்திய தூதர் ஜான்திவி அவர்கள், புடு சிறையிலிருந்த கணபதியைச் சந்தித்து விடுதலைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார்.  
இந்தியப் பிரதமர் நேரு மலேசியாவுக்கான இந்தியத் தூதர் ஜான்திவி அவர்களுக்குக் கடிதம் எழுதி, மலேசியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசுக்கு கடிதத்தை நேரில் தந்து, கணபதி அவர்களை கருணை அடிப்படையில் விடுவிக்கக் கேட்டுக் கொள்ளும்படிச் செய்தார். இம்முயற்சியைப் பற்றி இந்திய தூதர் ஜான்திவி அவர்கள், புடு சிறையிலிருந்த கணபதியைச் சந்தித்து விடுதலைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார்.  


தமிழகம் முழுக்க கணபதியை விடுவிக்கக் கோரி போராட்டங்கள் நடந்தன. திராவிட இயக்கத் தலைவர்கள் ஈ.வெ.ராமசாமிப் பெரியார், சி. என்.அண்ணாத்துரை மற்றும் கம்யூனிஸ்டுக் கட்சித்தலைவர்கள் ப.ஜீவானந்தம், இராமமூர்த்தி, கல்யாணசுந்தரம், ஏ.எஸ்.கே.அய்யங்கார் போன்றவர்களும் கண்டனங்கள் தெரிவித்தனர்
தமிழகம் முழுக்க கணபதியை விடுவிக்கக் கோரி போராட்டங்கள் நடந்தன. திராவிட இயக்கத் தலைவர்கள் ஈ.வெ.ராமசாமிப் பெரியார், சி. என்.அண்ணாதுரை மற்றும் கம்யூனிஸ்டுக் கட்சித்தலைவர்கள் ப.ஜீவானந்தம், இராமமூர்த்தி, கல்யாணசுந்தரம், ஏ.எஸ்.கே.அய்யங்கார் போன்றவர்களும் கண்டனங்கள் தெரிவித்தனர்
====== தூக்குத்தண்டனை ======
====== தூக்குத்தண்டனை ======
கணபதி ஏப்ரல் 22, 1949-ல் மேல் முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அத்துடன் அவரை விடுதலை செய்யக்கோரி வந்த மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பரிசீலனை மற்றும் விசாரணைக்குப் பின்னர் மலாயா கணபதிக்கு 23.04.1949-ல் மீண்டும் மரணத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.  
கணபதி ஏப்ரல் 22, 1949-ல் மேல் முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அத்துடன் அவரை விடுதலை செய்யக்கோரி வந்த மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பரிசீலனை மற்றும் விசாரணைக்குப் பின்னர் மலாயா கணபதிக்கு 23.04.1949-ல் மீண்டும் மரணத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.  
Line 66: Line 65:
ஈ.வெ.ராமசாமிப் பெரியார் மலாயா கணபதியின் உயிரைக் காக்க இந்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்தியாவில் கம்யூனிஸ்டுக்கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் மலேசிய பிரிட்டானிய அரசுக்கு கண்டனங்களையும், மலாயா கணபதிக்கு அஞ்சலிகளையும் தெரிவித்தனர்.
ஈ.வெ.ராமசாமிப் பெரியார் மலாயா கணபதியின் உயிரைக் காக்க இந்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்தியாவில் கம்யூனிஸ்டுக்கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் மலேசிய பிரிட்டானிய அரசுக்கு கண்டனங்களையும், மலாயா கணபதிக்கு அஞ்சலிகளையும் தெரிவித்தனர்.


பாரதிதான் எழுதிய அஞ்சலிக் கவிதையில்
பாரதிதாசன் எழுதிய அஞ்சலிக் கவிதையில்(அடிகள் 168 - 175 வரை)


''‘மாமனிதர் கணபதிக்கு மறைவு ஏது?''
''‘மாமனிதர் கணபதிக்கு மறைவு ஏது?''

Revision as of 16:45, 28 November 2022

எஸ்.ஏ. கணபதி
மலேயா கணபதி. ராசின்
தம்பிக்கோட்டை கல்வெட்டு 1986
தம்பிக்கோட்டை புதிய கல்வெட்டு
பெரியார் கண்டனம்
இந்தியா கண்டனம்

எஸ். ஏ. கணபதி (மார்ச் 23, 1912 - மே 4, 1949)  மலாயா கணபதி என்றே பலராலும் அறியப்பட்டவர்.  இவர் மலாயாவைச் சேர்ந்த தொழிற்சங்கப் போராட்டவாதி. சமூக நீதி செயல்பாட்டாளர். இந்திய தேசிய இராணுவத்தில் சேவை செய்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர். அன்றைய மலாயாவின் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து தூக்கிலிடப்பட்டவர்.

பிறப்பு, கல்வி

எஸ். ஏ. கணபதி தமிழ்நாட்டில் பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் தம்பிக்கோட்டை கிராமத்தில் 1912-ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையாரின் பெயர் ஆறுமுக தேவர். தாயாரின் பெயர் வைரம்மாள். எஸ். ஏ. கணபதிக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது சிங்கப்பூருக்கு வந்தார். தம் தொடக்கக் கல்வியை சிங்கப்பூரில் பெற்றார்.  தனது தாய்மாமன் சுப்பிரமணியம் வழிகாட்டலில் வளர்ந்த கணபதிக்கு இள வயதிலேயே அரசியல் தீவிரம் இருந்தது

அரசியல் வாழ்க்கை

இந்திய தேசிய ராணுவம்

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில், ஜப்பானிய ஆதரவுடன், சுபாஷ் சந்திர போஸ் 1942-ல் இந்திய தேசிய ராணுவம் (Indian National Army) என்னும் விடுதலைப்படையை அமைத்தார். அதில் எஸ். ஏ. கணபதி ஓர் அதிகாரியாகவும், பயிற்றுநராகவும் சேவை செய்தார்.

மலாயா கம்யூனிஸ்டுக் கட்சி

எஸ்.ஏ.கணபதி மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினராக இருந்தார் ( Malaya Communist Party MCP). அக்கட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த 'முன்னணி' எனும் இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்
எஸ்.ஏ.கணபதி

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் மலாயாவைக் கைப்பற்றியது. எஸ்.ஏ. கணபதியின் கவனம் தொழிலாளர் நலன் குறித்து திரும்பியது. தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். வீரசேனன் முதலானோர்களோடு இணைந்து செயலாற்றினார்.

தொண்டர் படை

ஐஎன்ஏ (INA) படையின் முக்கிய பொறுப்புகளில் கல்வி கற்ற நகர்புற இந்தியர்கள்தான் அதிகம் நியமிக்கப்பட்டனர்.  ஆனாலும் மலாயா தோட்டப்புற பாட்டாளி மக்களின் மனதில் போராட்ட உணர்வை ஐஎன்ஏ தோற்றுவித்தது. 1948-ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸின் மரணத்திற்குப் பிறகு அப்படையில் பணியாற்றிய முக்கிய பொறுப்பாளர்கள் சிலரும் தொண்டர்களும் தங்களை மக்கள் சேவையில் இணைத்துக்கொண்டு ‘தொண்டர் படை’ என்ற அமைப்பின் வழி செயல்பட்டனர்.

தொண்டர் படையின் செயல்பாடுகள் சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராகவும், முதலாளித்துவத்துக்கு எதிராகவும் இருந்தது. அக்காலகட்டத்தில் சமூகச் சீர்கேட்டு எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு போன்ற அடிப்படை கொள்கைகளோடு ஒத்துபோகும் அமைப்பாக கம்யூனிஸ இயக்கம் இருந்தது. ஆகவே ஆங்கிலேய முதலாளிகள் தோட்டப்புறங்களில் இருந்து தொண்டர் படையை முற்றாக ஒழிக்க முடிவெடுத்து புதிய சட்டங்களின் வழி அவ்வமைப்பைத் தடைசெய்தனர்.

போராட்டங்கள்

1946 முதல் 1948 வரை மலாயாவில் காலனித்துவம் ஒழிய வேண்டும்; மலாயாவுக்குத் தன்னாட்சி - விடுதலை வேண்டும் என்பதே எஸ்.ஏ. கணபதியின் போராட்டமாக இருந்தது. அவருக்கு மலேய கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆதரவுப் பின்புலம் இருந்தது.

1946-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ராபின்சன் பூங்காவில் தொழிலாளர்களது போராட்டத்தை ஒருங்கிணைத்தார். அதில் மலேயா கணபதி, வீரசேனன், சம்சுதீன் ஆகியோர் உரையாற்றினார்கள். அவர்களை அரசு கைது செய்ய முயற்சி செய்தபோது, ஆங்கிலேய காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. அதில் இரண்டு சீனத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அப்பேரணியின் விளைவாக தொழிலாளர்களின் கோரிக்கைகள் பல அரசால் நிறைவேற்றப்பட்டன.

வீரசேனனுடன் எஸ்.ஏ. கணபதி
கணபதி தோழர்களுடன்

1947-ஆம் ஆண்டு வாரத்துக்கு இரண்டு நாள் வேலைநிறுத்தம் என்ற கணக்கில் அந்த ஆண்டு மட்டும் 89 தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் நடத்தப்பட்டன. 1946,1947,1948 ஆம் ஆண்டுகளில் தொழிலாளர்களால் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தொழிலாளர் உரிமைகளை முன் வைத்து மலேயா கணபதி தலைமை தாங்கிய தொழிற்சங்க அமைப்பினர் எட்டு மணி நேர வேலை - எட்டு மணி நேர ஓய்வு - எட்டு மணி நேர தூக்கம் எனும் கோரிக்கையை முன் வைத்தார்கள். மேலும் தொழிலாளர்களைக் கூலி என அழைக்கக் கூடாது, மேநாளில் சம்பளத்துடன் கூடிய விடுதலை, சம்பள உயர்வு போன்ற போராட்டங்களை முன்னெடுத்து அதிலும் வெற்றியும் கண்டார். 1948-ஆம் ஆண்டு கணபதி மலாயாவின் அனைத்து இனங்களின் விடுதலைப் படையில் இணைந்தார். மலேயக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆதரவு அமைப்பான இதில் அவர் நேரடியாக அரசை எதிர்த்து போரிட்டார்.

மலாயா பொதுத்தொழிலாளர் சங்கம்

1946-ல் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் எஸ்.ஏ.கணபதி. இந்தச் சங்கம் பின்னர் அகில மலாயா தொழிலாளர் சம்மேளனம் (Pan - Malayan Federation of Trade Unions -PMFTU)   எனப் பெயர் மாற்றம் கண்டது.

1946-ல் மலேசியா, சிங்கப்பூரில் இயங்கிய தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்தது. சங்கத்தினை பதிவு செய்வதற்காக தொழிற்சங்க சம்மேளனம் (Federation of Trade Union) இரண்டு ஆண்டுகள் காத்திருந்தது. இருப்பினும், தொழிற்சங்க சம்மேளனம் பதிவு செய்ய அனுமதிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.

1947-ல் புதுடில்லியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மாநாட்டில் மலாயாப் போராளிகளில் ஒருவராக எஸ். ஏ. கணபதி கலந்து கொண்டார். இம்மாநாட்டிற்கு ஜவர்ஹலால் நேரு தலைமை தாங்கினார்.  

இறுதியில், ஜூன் 13, 1948-ல் கணபதி தலைமை தாங்கிய தொழிற்சங்க சம்மேளனம் மலேசியாவில் ஒட்டு மொத்தமாக தடை செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.

ஒடுக்குமுறை

எஸ். ஏ. கணபதியின் உரிமைப் போராட்டங்கள் பிரித்தானியர்களின் நலன்களுக்குப் பெரும் இடையூறுகளாக அமைந்தன. உலகமெங்கும் அன்று உருவாகிக்கொண்டிருந்த கம்யூனிசக் கிளர்ச்சிகள் ஆட்சியாளர்களை அச்சுறுத்தின. ஆகவே பிரிட்டானியா அரசு கடுமையான ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் இறங்கியது.

நெருக்கடி நிலை

ஜூன் 16, 1948-ல் பிரிட்டிஷ் அரசு மலாயாவிலும் சிங்கப்பூரிலும் நெருக்கடி (Emergency) நிலையை அறிவித்தது. அதன் மூலம் தொழிற்சங்கங்களை முடக்கியது. மலாயா கம்யூனிஸ்டுக் கட்சிகளும் அதன் துணையமைப்புகளும் வேட்டையாடப்பட்டன. மலாயா கம்யூனிஸ்டுக் கட்சி தலைமறைவு அமைப்பாக மாறி அரசுக்கு எதிரான ஆயுதப்போராட்டத்தில் இறங்கியது.

எஸ்.ஏ. கணபதி கைது
புடு சிறையில் எஸ்.ஏ. கணபதி

கம்யூனிசக் கட்சி உறுப்பினர்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு மலேயா தொழிற்சங்க சம்மேளனத்தின் அலுவலகத்தில் தொடர் சோதனைகளை காவல்துறை நடத்தியது. அரசுக்கு எதிரான தலைவர்களையும் தொழிலாளர் தலைவர்களையும், கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பிருப்பவர்கள் என்று கூறி கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியது அரசு. இதனால், மலேயா கம்யூனிச கட்சியினைச் சேர்ந்தவர்கள் காடுகளில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து போராட்டங்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினர். மலேயா கணபதியும் காடுகளில் தலைமறைவாகி, தொழிலாளர் போராட்டங்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் ரவாங், பத்து ஆராங் என்னும் இரு நகரங்களுக்கு மத்தியில் உள்ள வாட்டர்பால் எனும் தோட்டத்தில் (Waterfall Estate) 1948-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மலேயா கணபதி ஆங்கிலேய காவல் துறையால் கைது செய்யப்பட்டார். கைத்துப்பாக்கியும் ஆறு சுற்றுத் துப்பாக்கிக் குண்டுகளையும்  வைத்திருந்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. உடனடியாக, அவர் அங்கிருந்து கோலாலம்பூருக்கு கொண்டு வரப்பட்டார்.

விசாரணை

கோலாலம்பூர் நீதிமன்றத்தை ஒட்டிய ஒரு தனி கட்டிடத்தில் மிக விரைவாக விசாரணை நடைபெற்றது. சில மாதங்களில் விசாரணை முடிந்து கோலாலம்பூர் நீதிமன்றம் கணபதிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

கண்டனங்கள்

இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தொழிற்சங்க இயக்கங்கள் மற்றும் உலகத் தொழிலாளர் சம்மேளனம் (World Federation of Trade Unions) எஸ்.ஏ. கணபதிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. மலேசிய - இந்திய தலைவர்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர், அகில இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.கோபாலன், ஹிரேன் முகர்ஜி, பி.ஜி.ஜோஷி, பி.டி.ரணதிவே, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் ஆகியோர் கணபதியை விடுதலை செய்யக் கோரி பொதுக்கூட்டங்கள் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி இந்தியப் பிரதமர் நேருவுக்கும், பிரிட்டிஷ் பிரதமர் அட்லிக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்தியப் பிரதமர் நேரு மலேசியாவுக்கான இந்தியத் தூதர் ஜான்திவி அவர்களுக்குக் கடிதம் எழுதி, மலேசியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசுக்கு கடிதத்தை நேரில் தந்து, கணபதி அவர்களை கருணை அடிப்படையில் விடுவிக்கக் கேட்டுக் கொள்ளும்படிச் செய்தார். இம்முயற்சியைப் பற்றி இந்திய தூதர் ஜான்திவி அவர்கள், புடு சிறையிலிருந்த கணபதியைச் சந்தித்து விடுதலைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார்.

தமிழகம் முழுக்க கணபதியை விடுவிக்கக் கோரி போராட்டங்கள் நடந்தன. திராவிட இயக்கத் தலைவர்கள் ஈ.வெ.ராமசாமிப் பெரியார், சி. என்.அண்ணாதுரை மற்றும் கம்யூனிஸ்டுக் கட்சித்தலைவர்கள் ப.ஜீவானந்தம், இராமமூர்த்தி, கல்யாணசுந்தரம், ஏ.எஸ்.கே.அய்யங்கார் போன்றவர்களும் கண்டனங்கள் தெரிவித்தனர்

தூக்குத்தண்டனை

கணபதி ஏப்ரல் 22, 1949-ல் மேல் முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அத்துடன் அவரை விடுதலை செய்யக்கோரி வந்த மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பரிசீலனை மற்றும் விசாரணைக்குப் பின்னர் மலாயா கணபதிக்கு 23.04.1949-ல் மீண்டும் மரணத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

மே 24, 1949-ல், காலை மணி 5 மணிக்கு கணபதி தூக்கிலிடப்படுவார் எனச் சிங்கப்பூர் வானொலி அறிவித்தது. அன்றைய மாலை 7 மணி செய்தியில், சிங்கப்பூர் வானொலி மலாயா கணபதிக்கு எதிரான தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவித்தது.

ஆனால் ஏப்ரல் 30, 1949 அன்று பிற்பகல் 3 மணிக்கு சிறை கண்காணிப்பாளர் தலைவர் கணபதியைச் சந்தித்து, தங்களை 04.5.1949 அன்று காலை 5 மணிக்குத் தூக்கிலிடும்படி உத்தரவு வந்துள்ளது என்று தெரிவித்தார்.

மே 04, 1949-ல் எஸ். ஏ. கணபதி கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். தனது 37-வது வயதில் அவர் மரணமடைந்தார். விசாரணை செய்யப்பட்ட இரண்டே மாதங்களில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எஸ். ஏ. கணபதி தூக்கிலிடப்பட்ட செய்தியைப் பிரித்தானிய அரசாங்கத்தின் காலனி ஆட்சிகளுக்கான அமைச்சர் வில்லியம்ஸ் டேவிட் ரீஸ், நாடாளுமன்ற மக்களவையில் அறிவித்தார். எஸ். ஏ. கணபதியின் வழக்கில் நீதி மதிப்பீட்டாளர்களாக இருந்த ஓர் ஐரோப்பியரும் ஓர் இந்தியரும் ஒரு சேர தூக்குத் தண்டனைக்கு முடிவு எடுத்தனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அஞ்சலிகள்

ஈ.வெ.ராமசாமிப் பெரியார் மலாயா கணபதியின் உயிரைக் காக்க இந்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்தியாவில் கம்யூனிஸ்டுக்கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் மலேசிய பிரிட்டானிய அரசுக்கு கண்டனங்களையும், மலாயா கணபதிக்கு அஞ்சலிகளையும் தெரிவித்தனர்.

பாரதிதாசன் எழுதிய அஞ்சலிக் கவிதையில்(அடிகள் 168 - 175 வரை)

‘மாமனிதர் கணபதிக்கு மறைவு ஏது?

காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?

கரைசேற்றால் தாமரையின் வாசம் போமோ?

பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாமோ?

பிறர் சூழ்ச்சி செந்தமிழை அழிப்பதுண்டோ?

நேர் இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையில் போட்டால்

நிறை தொழிலாளர்களுணர்வு மறைந்த போமோ?’

என்று பாடினார்

நூல்கள்

  • மலேயா கணபதி - ராசின்
  • மாவீரன் மலேயா கணபதி - இரா. உதயசங்கர்(1998)

நினைவுத்தூண்

மலாயா கணபதியின் நினைவாக அவர் பிறந்த தம்பிக்கோட்டையில் ஜூலை 6,1986-ல் ஒரு நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. அந்தத் தூண் சாலைவிரிவாக்கத்தின் பொருட்டு அகற்றப்பட்ட பின் மீண்டும் நிறுவப்படவில்லை. அங்கிருந்த நினைவுக் கல்வெட்டு 31 ஆண்டுகளாக ஒருவரின் பாதுகாப்பில் இருந்தது. 2017-ல் அந்த நினைவுத்தூண் மீண்டும் நிறுவப்பட்டது.

வரலாற்று இடம்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகம் முழுக்க ஜனநாயகத்திற்காகவும், அடிப்படை உரிமைகளுக்காகவும் மக்கள் போராட்டங்கள் உருவாயின. ஐரோப்பிய ஜனநாயக தாராளவாதச் சிந்தனைகளும், ருஷ்யப்புரட்சியை முன்னுதாரணமாகக் கொண்ட இடதுசாரிச் சிந்தனைகளும் அவற்றுக்கு தூண்டுதலாக அமைந்தன. மக்கள் அனைவருக்கும் சமமான அரசியல் மற்றும் சட்ட உரிமைகள், தொழிற்சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமை, வெளிப்படையான சட்டத்தின் ஆட்சி, மக்களுக்கு அதிகாரமுள்ள அரசு போன்ற உரிமைகள் அப்போராட்டம் வழியாகவே வெல்லப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் ஒருங்கிணைந்த மலாயாவில் மக்களுரிமைகளுக்காக போராடி, உயிர்துறந்த முன்னணிப் போராளி மலாயா கணபதி. அந்தக்காலகட்டத்தில் உலகம் முழுக்க மானுட உரிமைகளுக்காக போரிட்டு மாய்ந்த வீரநாயகர்களில் ஒருவர் என கருதப்படுபவர். மலேசியாவிலும் இந்தியாவிலும் அவருடைய தியாகம் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான இலட்சியவாத அலையை உருவாக்கியது. மலாயாவின் மக்கள் தலைவராக மலாயா கணபதி அறியப்படுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page