அ.கி. பரந்தாமனார்
1.வாழ்க்கைக் குறிப்பு
தமிழ்ப்பேராசிரியர், எழுத்தாளர், கவிஞர், வரலாற்று ஆசிரியர் மற்றும் சொற்பொழிவாளராகவும் வாழ்ந்த அ.கி. பரந்தாமனாரின் முழுப்பெயர் அல்லிக்குழி கிருட்டிணசாமி பரந்தாமனார்.
பிறப்பு
இவர் ஜூலை 15, 1905 ஆம் ஆண்டு சென்னையில் கிருஷ்ணசாமி முதலியார் சிவனாத்தி அம்மாள் தம்பதியினருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார்.
கல்வி
சென்னை வேப்பேரியில் உள்ள செயின்ட் பால் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிவரை பயின்றார். பின்பு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இடைநிலை படிப்பை முடித்தார். பின்பு ஓராண்டு சென்னை கர்னாடிக் பஞ்சாலையில் எழுத்தராகப் பணியாற்றினார். பின்பு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அரசியல், வரலாறு ஆகியவற்றைச் சிறப்புப் பாடங்களாகப் பயின்று இளங்கலை பட்டத்தையும், 1949 ஆம் ஆண்டில் முதுகலை பட்டத்தையும் பெற்றார்.
பணி
தம் முதுகலைப் படிப்பை முடித்த உடன் சென்னை வேப்பேரியில் உள்ள செயின்ட் பால் உயர்நிலைப் பள்ளியில் ஏறத்தாழ 24 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
அதன் பின்னர் 1950 ஜனவரியில் மதுரையில் தியாகராசர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதும் அங்கு தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு 17ஆண்டுகள் பணியாற்றி 1967 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
2. பங்களிப்பு
- வரலாறு
பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர் 1917-21ல் ஆங்கிலத்தில் எழுதிய ‘மதுரைநாயக்கர் வரலாறு’ நூலை அடியொற்றியும், க.அ.நீலகண்ட சாஸ்திரியாரின் ‘தென்னிந்திய வரலாறு’ டாக்டர் அ.கிருஷ்ணசாமிப்பிள்ளை எழுதிய ‘விஜயநகரத்தின் கீழ் தமிழகம்’ [Tamil Country under Vijayanagara] முதலிய நூல்களை கணக்கில் கொண்டும் அ.கி.பரந்தமனார் தமிழில் எழுதிய ‘மதுரை நாயக்கர் வரலாறு’ தெளிவாகவும் சுருக்கமாகவும் நாயக்கர்களின் ஆட்சியையும் வீட்சியையும் சொல்லும் வரலாற்று நூலாகும்
- இதழியல்.
இவர் தமிழ்நாடு பத்திரிக்கையில் சுமார் 13 வருடங்கள் வரலாற்று சம்பந்தமான களஆய்வு செய்த கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார்.
- தமிழ் வளர்ச்சி
தமிழ் வளர்ச்சியின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தனித்தமிழ் வளர்ச்சி நடவடிக்கைகளிலும், அதற்கான நூல்களை உருவாக்குவதிலும் முனைப்பு கொண்டவராக அறியப்படுகிறார்
- உரைநடை
இன்றைய தமிழ் உரைநடைக்கு நெருக்கமான இலக்கணம் உள்ள ‘நல்லதமிழ் எழுதவேண்டுமா?’ ஒரு முக்கியமான வழிகாட்டி நூலாகும்.
3.படைப்புகள்
காதல்நிலைக் கவிதைகள் (1954)
எங்கள் தோட்டம் (1964) - சிறுவர் பாடல்
பரந்தாமனார் கவிதைகள்
கவிஞராக
நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
தமிழ் இலக்கியம் கற்க
திருக்குறளும் புதுமைக் கருத்துக்களும் (1963)
பன்முகப் பார்வையாளன் பாரதி
பேச்சாளராக
மதுரை நாயக்கர் வரலாறு
திருமலை நாயக்கர் வரலாறு
தலைசிறந்த பாண்டிய மன்னர்கள்
வரலாற்றுக் கட்டுரைகளும் பிறவும்
வாழ்க்கைக்கலை
கோமஸ்
4. விருதுகள்
"பைந்தமிழ்ப் பாவலர்" - மதுரை எழுத்தாளர் மன்றம். (மதுரை திருவள்ளுவர் கழகம் அவருக்கு கொண்டாடிய மணிவிழாவில்)
"திரு.வி.க. விருது"- தமிழக அரசு (தஞ்சையில் 1981ஆம் ஆண்டில் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டபோது)
5.இலக்கிய முக்கியத்துவம்.
இவர் எழுதிய ‘மதுரை நாயக்கர் வரலாறு’ நூலுக்காகவும், தமிழ் உரைநடை இலக்கணங்களை கற்க ‘நல்லதமிழ் எழுதவேண்டுமா?’ எனும் நூலுக்காகவும் இலக்கிய உலகில் மேற்கோள் காட்டப்படுகிறார்.
6.மறைவு
இவர் 1986 ஆம் ஆண்டில் சென்னையில் மரணமடைந்தார்
7. உசாத்துணை
https://www.jeyamohan.in/15/
https://www.youtube.com/watch?v=9MkiKcDcWiY
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
இப்பக்கத்தை User:Moorthyg உருவாக்குகிறார்