அ.ராமசாமி
அ.ராமசாமி ( ) தமிழ் இலக்கிய விமர்சகர். ஊடக ஆய்வாளர்.நாடகம் மற்றும் திரைவிமர்சனம் செய்துவருபவர். கல்வியாளர். பின்நவீனத்துவ பார்வைகொண்டவர்
பிறப்பு, கல்வி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தச்சபட்டி என்னும் சிற்றூரில் பிறந்த ராமசாமி பட்டப்படிப்பு தொடங்கி முனைவர் பட்டம் வரை தமிழ் இலக்கியக் கல்வி கற்றவ
தனிவாழ்க்கை
மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் படிப்பை முடித்த பின் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த் துறை(1987-1989), புதுச்சேரி பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளி (1989-1997) ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இந்திய அரசின் கலை பண்பாட்டு அமைச்சகம், போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழக இந்தியவியல் துறையில் வருகைதரு பேராசிரியராக இரண்டாண்டுக் காலம் (2011-2013) பணியாற்றினார்
கல்வித்துறை சார்ந்து மொழிப்புல முதன்மையர், அம்பேத்கரியல் மைய இயக்குநர், நூலகம், நாட்டு நலப்பணித்திட்டம், பதிப்புத்துறை,இளைஞர் நலம் போன்ற அமைப்புகளின் ஆலோசகனை மற்றும் பணிப்பொறுப்புகளையும் வகித்தார். அனுபவம் கொண்டவர். இந்தியப் பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுக்களில் இடம் பெற்று தமிழ் இலக்கியக் கல்வியின் போக்குகளை உருவாக்குவதில் –குறிப்பாக நவீனத் தமிழ் இலக்கியத்திற்கான இடத்தைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திற்குள் கொண்டுவரத் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டார் இலங்கை, மலேசியப் பல்கலைக் கழகங்களில் கல்விசார் குழுக்களிலும் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். 2019 ஜூன் 30 இல் பணி ஓய்வு பெற்றார்.
நாடக வாழ்க்கை
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த போது இடதுசாரி நாடக இயக்கமான மதுரை நிஜநாடக இயக்கத்தோடு இணைந்து வீதி நாடகங்களில் செயல்பட்டார்ர். அதன் தொடர்ச்சியாகப் புதுச்சேரியில் தொடங்கப்பெற்ற சங்கரதாஸ் நிகழ்கலைப் பள்ளியின் ஆசிரியராகி மாணவர்களுக்கு நாடகவியல் கற்பித்தார். நாடகங்களையும், நாடகவியல் சார்ந்த விளக்கவியல் கட்டுரைகளையும், விமரிசனக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
நூல்கள்
எழுதியவை
- செவ்வியக்கவிதைகள், பதிப்புத்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,2018
- 10 நாடகங்கள், ஒப்பனை, சென்னை, 2016கதைவெளி மனிதர்கள்,நற்றிணை, சென்னை, 2016
- நாவல் என்னும் பெருங்களம்,நற்றிணை, சென்னை, 2016
- மறதிகளும் நினைவுகளும் - (காலனியம்-மக்களாட்சி- பின் காலனியம்),உயிர்மை, சென்னை, 2015
- நாயக்கர் காலம் - வரலாறும் இலக்கியமும் திருந்திய பதிப்பு, நியுசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2015
- வார்சாவில் இருந்தேன், அயல்நாட்டுப் பயண அனுபவங்கள் பற்றிய கட்டுரைநூல், நியுசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2015
- தொடரும் ஒத்திகைகள், நாடகம், நியுசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2015
- தமிழ்ச்சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும்,உயிர்மை, சென்னை, 2014
- இலக்கியமும் வரலாறும் ( நாயக்கர் காலம்) - உயிர்மை, சென்னை 2010
- வேறு வேறு உலகங்கள் (சமகால நிகழ்வுகள் குறித்த 22 கட்டுரைகளின் தொகுதி), உயிர்மை, சென்னை, 2009
- திசைகளும் வெளிகளும் (சமகால நிகழ்வுகள் குறித்த75 கட்டுரைகளின் தொகுதி), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,2009
- மையம் கலைத்த விளிம்புகள் (தலித்தியம், தலித் இலக்கியம் பற்றிய விமரிசனக் கட்டுரைகள்), ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை, 2008
- முன்மேடை, (அரங்கியல் மற்றும் நாடகங்கள் குறித்த கட்டுரைகள்) அம்ருதா பதிப்பகம், சென்னை, 2007
- தமிழ் சினிமா - அகவெளியும் புறவெளியும் (விமரிசனக் கட்டுரைகள்) காலச்சுவடு,நாகர்கோவில், 2007
- நகரும் காட்சிகள்: ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல், (பிம்ப உருவாக்கம் குறித்த ஆய்வு நூல்) பாரதி புத்தகாலயம்,சென்னை, 2007
- பிம்பங்கள் அடையாளங்கள் (வெகுமக்கள் பண்பாடு குறித்த கட்டுரைகள்), உயிர்மை, சென்னை, 2005
- ஒளிநிழல் உலகம், தமிழ் சினிமா கட்டுரைகள், (விமரிசனக் கட்டுரைகள்) காலச்சுவடு, நாகர்கோவில், 2004
- அலையும் விழித்திரை, (வெகுமக்கள் பண்பாடு, ஊடகங்கள் குறித்த கட்டுரைகள்), காவ்யா, பெங்களூர், 2002
- வட்டங்களும் சிலுவைகளும், (10 குறுநாடகங்கள்), வானவில், பாளையங்கோட்டை, 2002
- ஒத்திகை,(இரண்டு நாடகங்களும் நாடகங்கள் பற்றிய கட்டுரைகளும்), விடியல், கோவை, 1998
- நாடகங்கள் விவாதங்கள், (மூன்றுநாடகங்களும் நாடகங்கள் பற்றிய விவாதமும்) ஒப்பனை, பாண்டிச்சேரி,1995
தொகுத்தவை
- சங்கரதாஸ் சுவாமிகள், (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை) சாகித்திய அகாடமி, புதுதில்லி, 2001
பதிப்பித்தவை
- பிரஹலாதா ( தமிழ் நாடக முன்னோடி சங்கரதாஸ் சுவாமிகளின் புராண நாடகம்) , காலச்சுவடு, நாகர்கோவில், 2009
- தேற்றமும் தெளிவும்- உடன் ஆசிரியர் : முனைவர் பே. நடராசன் (ஆய்வுக் கட்டுரைகள்), பதிப்புத்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 2009,
- திறனாய்வுத்தேடல்கள் , உடன் ஆசிரியர்கள்: ந.முருகேச பாண்டியன், பா. ஆனந்தகுமார், சித்திரை நிலவு, மதுரை, 2002
- பின்னை நவீனத்துவம்: கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும் , உடன் ஆசிரியர் : முனைவர் தி.சு. நடராசன், விடியல், கோவை, 1988.