https://tamil.wiki/api.php?action=feedcontributions&user=Thangapandiyan&feedformat=atomTamil Wiki - User contributions [en]2024-03-28T12:26:49ZUser contributionsMediaWiki 1.38.2https://tamil.wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88&diff=49094சயாம் மரண ரயில்பாதை2022-07-02T03:47:39Z<p>Thangapandiyan: /* கல்லறைகள் */</p>
<hr />
<div>{{Read English|Name of target article=Siam Death Railway|Title of target article=Siam Death Railway}}<br />
[[File:சயாம் பாதை.jpg|thumb|சயாம் - பர்மா ரயில் பாதை (நன்றி : எழுத்தாளர் அ. ரெங்கசாமி)]]<br />
[[File:Sayam2.jpg|thumb|சயாம் மரணரயில் பாதை அமைப்பு]]<br />
[[File:ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட், ஓவியம்.jpg|thumb|ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட், ஓவியம்]]<br />
[[File:ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் ஓவியம்.jpg|thumb|ஜார்ஜ் மென்னீ ( George John Mennie) 1943.மரவெட்டு ஓவியம். சயாம் ரயில் கனு முகாம்]]<br />
[[File:நினைவுக்கம்பம் காஞ்சனபுரி.jpg|thumb|ஆசிய தொழிலாளர்களுக்காக 1944-ல் தாய்லாந்து காஞ்சனபுரியில் ஜப்பானிய ராணுவம் உருவாக்கிய நினைவுச்சின்னம்]]<br />
[[File:Japan Paya Thanbyuzayat 001.jpg|thumb|மியான்மாரில் ஜப்பானியர்கள் மறைந்த தொழிலாளர்களுக்காக கட்டிய நினைவுச்சின்னம் (Thanbyuzayat)]]<br />
[[File:Hellfire Pass - June 2004.jpg|thumb|ஹெல்ஃபயர் கணவாய்.2004-ல் எடுத்த படம். இந்த வெட்டுபாதை ரயில்பணியில் பலரை உயிர்வாங்கியது.]]<br />
[[File:போர் விசாரணை.jpg|thumb|போர்க்குற்ற விசாரணை, சிங்கப்பூர். Major J.C. McGrath தலைமையிலான விசாரணக் குழு]]<br />
[[File:ராட் பீட்டில் .jpg|thumb|ராட் பீட்டில் நூல்]]<br />
[[File:Last Man Out.jpg|thumb|Last Man Out]]<br />
[[File:‘Hospital ward, Thailand Railway’ by Murray Griffin, 1945-46,.jpg|thumb|மர்ரே கிரிபின். ஓவியம். சயாம் மாணரயில்வே. ஆஸ்பத்திரி]]<br />
[[File:Malaysian Tamils.jpg|thumb|ரயில்வே பணியில் மலாய் தொழிலாளர்கள்]]<br />
[[File:குவாய் நதிப்பாலம்.png|thumb|குவாய் நதிப்பாலம்]]<br />
[[File:சாக்கர் ஓவியம்3.jpg|thumb|சாக்கர் ஓவியம்]]<br />
[[File:Burma-Railway 1942 Kanchanaburi.webp|thumb|Burma-Railway 1942 Kanchanaburi]]<br />
சயாம் மரணரயில்பாதை: (1942-1943) ‘சயாம் மரண ரயில்’ எனப் பொதுவாக அழைக்கப்படும் தாய்லாந்து – பர்மா இரயில் பாதை. இது இரண்டாம் உலகப்போரில் போது (செப்டம்பர் 16, 1942 - அக்டோபர் 17, 1943) கட்டப்பட்ட 415 கி.மீ (258 மைல்கள்) நீளமுள்ள ரயில்பாதை. தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் நோக்கத்தில் ஜப்பானியர்களால் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.<br />
இந்த ரயில் பாதை அமைக்கும் பணியில் ஏறக்குறைய 1,80,000 லிருந்து 2,50,000 ஆசியத் தொழிலாளர்களும், 60,000-க்கும் மேற்பட்ட போர்க் கைதிகளும் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர். மிகக்கடுமையான வேலைச்சூழல், போதிய உணவு இல்லாமை, நோய், வன மிருகங்களின் தாக்குதல் மற்றும் ஜப்பானியர்கள் விதித்த மிகக் கடுமையான தண்டனை காரணமாக சுமார் 90,000 ஆசியத் தொழிலாளர்களும் 12,000-க்கும் மேற்பட்ட போர்க் கைதிகளும் இறந்து போயினர். இந்த ரயில் பாதையை ஜப்பானிய அரசாங்கம் Tai – Men Rensetsu Tetsudō (தாய்லாந்து-பர்மா இணைப்பு ரயில்வே) என அழைத்தது.<br />
இந்த ரயிலின் தாய்லாந்து பகுதி இப்போதும் புழக்கத்திலுள்ளது. பாங்காக்கில் இருந்து நாம் டோக் (Nam Tok) என்னும் ஊருக்குச் செல்லும் மூன்று ரயில்கள் ஒவ்வொரு நாளும் அதில் செல்கின்றன. அப்போது கட்டப்பட்ட பாலமும் புழக்கத்திலுள்ளது. தாய்லாந்து எல்லையில் இருந்து பர்மாவின் மௌல்மெய்ன் (Moulmein) என்னும் இடத்த்துக்கு செல்லும் இந்த ரயிலின் பர்மியப் பகுதி பல ஆண்டுகளுக்கு முன்னரே கைவிடப்பட்டது <br />
== வரலாறு ==<br />
பர்மாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே ஒரு ரயில் பாதை அமைக்க 1885-ஆம் ஆண்டிலேயே பிரிட்டிஷ் அரசால் ஆய்வு செய்யப்பட்டது. தாய்லாந்து மியன்மார் எல்லையில் 282 மீட்டர் உயரத்தில் உள்ள திரீ பகோடாஸ் கணவாய் (Three Pagodas Pass), மேற்கு தாய்லாந்தில் உள்ள குவாய் நதி ஆகியவை குறுக்கிட்டதால் அப்பணி மிகக் கடுமையானது என அத்திட்டம் நிறுத்திவைக்கப் பட்டது. <br />
<br />
இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் தாய்லாந்து ஒரு நடுநிலை நாடாகவே தன்னை அறிவித்துக்கொண்டது. டிசம்பர் 8, 1941-ல் ஜப்பான் தாய்லாந்தை ஆக்கிரமித்தது. 1942-ல் தாய்லாந்து வழியாக பர்மாவில் நுழைந்த ஜப்பானிய படைகள் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த பர்மாவையும் ஆக்கிரமித்தன. ஜப்பானியர் தங்களின் படைகளைப் பராமரிக்க, மலாக்கா நீரிணை மற்றும் அந்தமான் கடல் வழியாக வரவேண்டி இருந்தது. மேலும், நீர்மூழ்கிக் கப்பல்களின் மூலம் தாக்குதல் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. மலாய் தீபகற்பத்தைச் சுற்றி அபாயகரமான 3200 கி.மீ கடல் பயணத்தைத் தவிர்க்க, பாங்காக்கிலிருந்து ரங்கூனுக்கு ஒரு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த இரயில் பாதை மூன்று பெயர்களால் குறிப்பிடப்படுவதுண்டு. அவை பர்மா இரயில்பாதை (Burma Railway), மரண இரயில்பாதை (Death Railway), பர்மா – சயாம் இரயில்பாதை (Burma–Siam Railway) ஆகும். <br />
<br />
தாய்லாந்தில் உள்ள பான் பாங்க் (Ban Pong) முதல் பர்மாவில் உள்ள தன்பியூசத் (Thanbyuzayat) வரை இந்த ரயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது. 111 கிலோ மீட்டர் பர்மாவிலும் 304 கிலோ மீட்டர் தாய்லாந்திலும் இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டது. சிங்கப்பூர் சாங்கி சிறையிலிருந்தும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மற்ற சிறை முகாம்களிலிருந்தும் போர்க்கைதிகள் 1942-ல் வடக்கு நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் ஜூன் 23, 1942-ல் நோங் பிளாடுக் (Non Pladuk) வந்து இடைதங்கலுக்கான ஒரு முகாமைக் கட்டினர். உள்கட்டமைப்பின் ஆரம்பக்கட்ட பணிகளுக்குப் பிறகு செப்டம்பர் 16, 1942-ல் ரயில் பாதை கட்டுமானம் தொடங்கியது. <br />
<br />
பர்மாவில் இருந்து ஒரு கட்டுமான குழுவும் தாய்லாந்தில் இருந்து மற்றுமொரு குழுவும் இடைவிடாது பணியில் ஈடுபட்டது. ரயில் பாதை அமைப்பதற்கான தளவாடப் பொருட்கள் மலாயாவில் இருந்தும் இந்தோனேசியாவில் இருந்தும் கொண்டு வரப்பட்டன. மலாக்கா, சிங்கப்பூர், கோத்தாபாரு, கோலா லிப்பிஸ் பகுதிகளில் ஏற்கனவே போடப்பட்டிருந்த ரயில் தண்டவாளங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு சயாம் - பர்மா பாதைக்கு பயன்படுத்தப்பட்டன. டிசம்பர் 1943-ல் இத்திட்டத்தை நிறைவுக்குக் கொண்டுவர ஜப்பானிய அரசு திட்டமிட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே அக்டோபர் 17, 1943-ல் இத்திட்டம் நிறைவு பெற்றது. <br />
<br />
தாய்லாந்து பகுதியில் இருந்தும் பர்மியப் பகுதியில் இருந்தும் ரயில்பாதை போட்டுக்கொண்டு வந்தவர்கள் திரீ பகோடாஸ் கணாவய்க்கு 18 கிலோமீட்டர் தொலைவில் கொன்கொய்தா (Konkoita) என்னும் ஊரில் சந்தித்தனர். இன்று இந்த ஊர் கயெங் கொய் தா (Kaeng Khoi Tha, Sangkhla Buri District, Kanchanaburi Province) என அழைக்கப்படுகிறது. அங்கே போர்க்காலத்தில் மிகப்பெரிய போர்க்கைதி முகாம் ஒன்றை ஜப்பானியர் நடத்திவந்தனர். ரயில்பாதை அமைப்புப்பணியின் நிறைவை ஒட்டி அக்டோபர் 25, 1943-ல் விடுமுறை அறிவிக்கப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது. <br />
<br />
சயாம் மரண ரயில்பாதை பற்றி அமெரிக்கப் பொறியாளர் பஷார் அல்ட்டாபா (Bashar Altabba) கூறும்போது “வரலாற்றில் பொறியியலாளர்கள் இதைவிட பெரிய, இதை விட நீளமான, இதைவிடக் கடினமான பொறியியல் பணிகளை ஒரே வீச்சில் செய்து முடித்துள்ளனர். ஆனால் சயாம் ரயில்பாதை அவற்றை மிஞ்சுவது வெவ்வேறு கூறுகளை ஒருங்கிணைத்த அதன் ஒட்டுமொத்தத் தன்மையால்தான். இதன் மொத்த மைல்களின் நீளம், இதன் பாலங்களின் எண்ணிக்கை (எட்டு மிகப்பெரிய பாலங்கள் உட்பட மொத்தம் அறுநூறு பாலங்கள்), இதில் பங்கெடுத்த ஊழியர்களின் எண்ண்ணிக்கை ( ஏறத்தாழ இரண்டரை லட்சம் பேர்) , கட்டி முடிப்பதற்கு எடுத்துக்கொண்ட மிகக்குறுகிய காலம், அவர்கள் பணியாற்றிய இடங்களின் மிகமோசமான சூழல் ஆகியவை அக்கூறுகள். அவர்களுக்கு மிகக்குறைவான போக்குவரத்து வசதிதான் இருந்தது. மருத்துவ வசதி இல்லை. கட்டுமானப்பொருட்கள் மட்டுமல்ல உணவே தட்டுப்பாடாக இருந்தது. சுத்தியல்கள் மண்வெட்டிகள் போன்ற அடிப்படைக் கருவிகள் தவிர பணியாற்றுவதற்குரிய கருவிகள் இல்லை. காட்டின் வெப்பமும் நீராவிவெக்கையும் நிறைந்த மிகமோசமான தட்பவெப்பநிலையில் அவர்கள் பணியாற்றினர். இவையெல்லாம் சேர்ந்து இந்த ரயில்வேப்பணியை மிக அசாதாரணமான ஒரு சாதனையாக ஆக்குகிறது” [https://www.pbs.org/wnet/secrets/the-bridges-of-the-thailand-burma-railway/178/ 1]<br />
== இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ==<br />
பிரிட்டிஷார் பர்மாவையும் தாய்லாந்தையும் கைப்பற்றியபின் 16 ஜனவரி 1946-ல் பிரிட்டிஷ் ராணுவம் ஜப்பானிய போர்க்கைதிகளை பயன்படுத்தி தாய்லாந்தில் நிக்கி (Ni Thea) முதல் சொன்க்ராய் (Sonkrai) வரையிலான நான்கு கிலோமீட்டர் ரயில்பாதையை நீக்கம் செய்ய ஆணையிட்டது. தாய்லாந்துக்கும் பர்மாவுக்குமான ரயில் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. சிங்கப்பூரை படையெடுப்புகளில் இருந்து பாதுகாக்கும்பொருட்டு இது செய்யப்பட்டது. அதன்பின் ரயில்பாதையின் பர்மியப்பகுதி சிறிது சிறிதாக அகற்றப்பட்டு பயன்பாட்டுக்கு உதவாதபடி செய்யப்பட்டது <br />
<br />
1946 அக்டோபரில் ரயில்பாதையின் தாய்லாந்துப் பகுதி 1,250,000 பவுண்ட் விலைக்கு தாய்லாந்து அரசுக்கே விற்கப்பட்டது. ரயில்பாதை போடுவதற்காக எந்தெந்த நாடுகளிடமிருந்து ஜப்பான் பொருட்களை எடுத்துக் கொண்டதோ அந்நாடுகளுக்கு அத்தொகை நிவாரணமாக அளிக்கப்பட்டது. பிப்ரவரி 1, 1947-ல் கொன்கொய்தா அருகே பாலம் உடைந்து நிகழ்ந்த விபத்தில் தாய்லாந்தின் போக்குவரத்து அமைச்சர் இறந்ததை ஒட்டி ரயில்பாதை நாம் டாக் வரை போதும் என முடிவுசெய்யப்பட்டது. <br />
<br />
<br />
ஜூன் 24, 1949-ல் தாய்லாந்து ரயில்வே துறை இந்த ரயில்பாதையை பழுதுபார்த்துச் சீரமைக்கத் தொடங்கி ஏப்ரல் 1, 1952-ல் அப்பணி நிறைவுற்றது. பர்மியப் பகுதியையும் சீரமைத்து ரயில் ஓடவைக்கலாம் என்னும் திட்டம் பலமுறை முன்வைக்கப்பட்டாலும் நிறைவேற்றப்படவில்லை. பர்மியப்பகுதி மலைப்பாங்கானது. பல புதிய பாலங்களும் ரயில்வேகுகைகளும் தேவைப்படலாம் என்பதனால் ஒத்திவைக்கப்பட்டது.<br />
<br />
ஜப்பான் வீழ்ச்சிக்குப் பிறகு சிறைக்கைதிகளையும் ஆசியத் தொழிலாளர்களையும் அவரவர் நாட்டிற்கு அனுப்பிவைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. <br />
== தொழிலாளர்கள் ==<br />
====== ஜப்பானிய இராணுவம் ======<br />
சயாம் மரண ரயில் பாதை 12,000 ஜப்பானிய வீரர்களின் மேற்பார்வையில் அமைந்தது. அவர்களில் 800 கொரிய வீரர்களும் அடங்குவர். இவர்களே இரயில் பொறியியலாளர்களாகவும் மேற்பார்வையாளர்களாகவும் பாதுகாவலர்களாகவும் பணியாற்றினர். ஜப்பானிய வீரர்களுக்குக் கடுமையான பணிச்சுமை இல்லாத போதும் சுமார் 1000 பேர் வரை ரயில் கட்டுமானத்தின் போது இறந்தனர். ஜப்பானிய வீரர்கள் போர்க்கைதிகளிடமும் பிற தொழிலாளர்களிடமும் வன்முறையைப் பிரயோகித்ததோடு உடல் ரீதியான சித்திரவதைகளும் செய்தனர். தொழிலாளர்களுக்குக் கடும் தண்டனைகளையும் அவமானங்களையும் வழங்கிக்கொண்டே இருந்தனர். <br />
====== தென்கிழக்காசிய தொழிலாளர்கள் ======<br />
இந்தப் பணிக்காக அமர்த்தப்பட்ட தென்கிழக்காசிய தொழிலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,80,000 ஆகும். இவர்கள் ரோமுஷா என அழைக்கப்பட்டனர். (''rōmusha''). ஜாவா இன மக்கள், மலாயா தமிழர்கள், பர்மியர்கள், சீனர்கள், தாய்லாந்து மக்கள் மற்றும் பிற தென்கிழக்காசியர்கள் ஜப்பான் இராணுவத்தால் வலுக்கட்டாயமாக வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அதன் கட்டுமானப் பணியில் பலரும் இறந்தனர். தொடக்கக் கட்டத்தில் பர்மியர்களும் தாய்லாந்துகாரர்களும் அந்தந்த நாடுகளில் பணியில் அமர்த்தப்பட்டனர், இதில் தாய்லாந்து தொழிலாளர்கள் தப்பித்து ஓடினர். பர்மியர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. ஜப்பானிய ஆக்கிரமிப்பை பர்மியர்கள் வரவேற்றதோடு தொழிலாளர்களுக்கான ஆட்சேர்ப்பில் ஜப்பானுக்கு உறுதுணையாகவும் இருந்தனர்.<br />
<br />
ரயில் பாலம் அமைக்க துரிதம் காட்டிய ஜப்பான் அரசு, 1943-ன் முற்பகுதியில் தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியமும் தங்கும் வசதியும் தருவதாக விளம்பரம் செய்து உறுதியளித்தது. அதை மக்கள் நம்பாதபோது பொதுமக்கள் ஜப்பானிய அரசால் வற்புறுத்தப்பட்டு பாலம் அமைக்க பிடித்துச் செல்லப்பட்டனர். நீல் மக்பெர்சன் (MacPherson, Neil) தன் Death Railway Movements நூலில் குறிப்பிடுவதன்படி ஏறத்தாழ 90,000 பர்மியர்களும் 75,000 மலேசியத்தமிழர்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். வேறு பல ஆவணங்களின்படி சுமார் 1,00,000-க்கும் மேற்பட்ட மலாயா தமிழர்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு 60,000 பேருக்கு மேல் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. <br />
<br />
பிரிட்டிஷ் டாக்டரும் போர்க்கைதியுமான ராபர்ட் ஹார்டீ எழுதினார். “ஆற்றங்கரை கூலிமுகாம்களின் நிலைமை கொடூரமானது. அவர்கள் ஜப்பானிய பிரிட்டிஷ் முகாம்களில் இருந்து அப்பால் தங்கவைக்கப்பட்டனர். கழிவறைகள் இல்லை கின்சாய்- யோக் பகுதியில் இருந்த பிரிட்டிஷ் போர்க்கைதிகள் ஒவ்வொரு நாளும் சராசரியாக இருபது கூலிகளின் உடல்களை அடக்கம்செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் எல்லாம் மலாயாவிலிருந்து பொய்யான வாக்குறுதி அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டவர்கள் ‘எளிய பணி, நல்ல ஊதியம், நல்லவீடுகள்’ என அவர்களுக்குச் சொல்லப்பட்டது. பலர் தங்கள் மனைவியையும் குழந்தைகளையும் கூட அழைத்து வந்திருந்தனர். வந்தபின் அவர்கள் கல்லறை போன்ற சிறிய குடியிருப்புகளில் அடைக்கப்பட்டனர். கொரிய, ஜப்பானிய படைவீரர்களால் அவர்கள் அடித்து உதைக்கப்பட்டனர். கூடுதல் உணவை வாங்க முடியவில்லை, என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை, நோயுற்றும் அஞ்சியும் அவங்கள் அங்கே வாழ்ந்தனர். இருந்தாலும் அவர்கள் நோயுற்ற பிரிட்டிஷ் போர்க்கைதிகளிடம் அன்பாக நடந்துகொண்டனர்” <br />
====== போர்க் கைதிகள் ======<br />
பர்மாவுக்குச் சென்ற முதல் போர்க் கைதிகளான 3000 ஆஸ்திரேலியர்கள் ரயில் கட்டுமானம் தொடங்குவதற்கு முன் விமான நிலையம் மற்றும் உள் கட்டமைப்பில் பணிபுரிந்தனர். அவர்கள் சாங்கி முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். பின்ன அங்கிருந்து தாய்லாந்தின் சுவர்ணபுரி முகாமுக்கும், அங்கிருந்து பர்மா வரை வெவ்வேறு முகாம்களுக்கும் ரயிலிலும் படகிலுமாக கொண்டுசெல்லப்பட்டனர் <br />
<br />
தொடர்ந்து போர்கைதிகள் சிங்கப்பூர் மற்றும் கிழக்கிந்திய தீவுகளில் இருந்து அழைத்துவரப்பட்டு வழித்தடத்தின் ஒவ்வொரு 8-17 கிலோ மீட்டருக்கும் குறைந்தது 1000 தொழிலாளர்கள் தங்கும் முகாம்களை நிறுவினர். பக்கவாட்டுகள் திறந்த நிலையில் முகாம்கள் ஓலைக் கூரையுடன் மூங்கில் தூண்களால் கட்டப்பட்டன. இந்த முகாம்கள் 60 மீட்டர் நீளம் கொண்டவை. ஒரு மண் தரையின் ஒவ்வொரு பக்கத்திலும் தரையில் இருந்து மேடைகள் எழுப்பப்பட்டன. ஒவ்வொரு தொழிலாளர்களும் தூங்க இரண்டடி அகலமான இடம் கொடுக்கப்பட்டது. <br />
<br />
ரயில்வே பணி முடிவுற்ற பின்னரும்கூட போர்க்கைதிகள் ரயில்வே கொட்டடிகளில் மேலும் இரண்டு ஆண்டுகள் தங்கவைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு சாரார் உடலுழைப்புத் தொழிலாளர்களாக ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போர்க்கைதிகளில் இருந்த ஆசியர்களும் ஆசியத்தொழிலாளர்களும் இந்தோனேசியாவில் சும்பான் (Chumphon) முதல் கிரா புரி ( Kra Buri) வரை போடப்பட்ட க்ரா இஸ்துமஸ் ரயில்பாதை (Kra Isthmus Railway) திட்டத்துக்கும் , இந்தோனேசியாவின் சுமாத்ராவில் பேகன்பரு (Pekanbaru) முதல் முரோ ( Muaro) வரையிலான பேலாம்பாங் ரயில்வே திட்டத்திற்கும் (Palembang Railway) அனுப்பி வைக்கப்பட்டனர். போர்க்கைதிகளில் பத்தாயிரம் பேர் ஜப்பானுக்கு கப்பல்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஏராளமானவர்கள் குண்டுவீச்சிலும் நோயிலும் இறந்தனர். <br />
<br />
1943-க்குப் பின் உலகப்போரில் நேசநாடுகளின் கை ஓங்கத் தொடங்கியமையால் போர்க்கைதிகளின் நிலைமை மேம்படலாயிற்று. பாலப்பணிக்குப் பின் போர்க்கைதிகளில் எஞ்சியவர்கள் மருத்துவ மையங்களுக்கும் மறுவாழ்வு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். மறுவாழ்வு மையங்களில் அவர்கள் மூங்கிலாலும் பனையோலையாலும் கொட்டகைகள் கட்டிக்கொண்டு இசை, நாடகம் ஆகியவற்றை நடத்தி தங்கள் ஊக்கத்தை மீட்டுக்கொண்டனர். அந்நாட்களை பலரும் பதிவுசெய்துள்ளனர். <br />
== கொடுமைகள் ==<br />
[[File:POWs Burma Thai RR.jpg|thumb|பாதிக்கப்பட்ட டச்சு மற்றும் ஆஸ்திரேலிய போர் கைதிகள்]]<br />
மலேசிய தோட்டத்தொழிலாளர்கள், இந்தோனேசிய தொழிலாளர்கள் பர்மிய காடுகளின் கடுமையான சூழல்களுக்குப் பழக்கமற்றவர்கள். ஊட்டச்சத்து குறைபாடு, உடல் ரீதியான துன்புறுத்தல்கள், மலேரியா, காலரா, வயிற்றுப்போக்கு மற்றும் வெப்பமண்டல புண்கள் ஆகியவை கட்டுமான தொழிலாளர்களின் இறப்புக்குப் பொதுக்காரணிகளாகக் கூறப்படுகின்றன. அவர்கள் மிகக்குறைவான உணவுடன், மிக அதிகமான உழைப்புக்கு ஆணையிடப்பட்டனர். மிக மோசமான நிலையில் தங்கவைக்கப்பட்டனர். <br />
<br />
சயாம் - பர்மா ரயில் பாதை கட்டுமானத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தரப்பிலும் வெவ்வேறு எண்ணிக்கையில் மாறுபடுகிறது. இவற்றில் ஆஸ்திரேலிய அரசாங்க புள்ளிவிபரங்களே பெரும்பாலும் ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. அவ்வகையில் இந்த கட்டுமானத்தில் பணிப்புரிந்த 330,000 பேரில் சுமார் 90,000 ஆசிய தொழிலாளர்களும் 16,000 போர் கைதிகளும் இறந்தனர் எனக்கூறப்படுகிறது. எப்படியாயினும் இராணுவ வீரர்களைவிட தென்கிழக்காசிய தொழிலாளர்களின் மரண எண்ணிக்கையே அதிகமென அனைத்துத் தரப்பினரும் ஒப்புக்கொள்கின்றனர். டேவிட் பொகோட் (Boggett, David) குறிப்பிடுவதன்படி ஆசியத் தொழிலாளர்களில் சாவு விகிதம் நேர்ப்பாதி அளவுக்கு இருந்தது. மெக்பெர்சன் குறிப்பிடுவதன்படி மிக அதிகமான சாவுகள் மலாயா தமிழர்கள் மற்றும் ஜாவா தொழிலாளிகள் நடுவிலேயே இருந்தன. <br />
== மருத்துவச் சூழல் ==<br />
முகாம்களின் மோசமான மருத்துவச் சூழலே சாவுகளுக்கு முதன்மைக் காரணம் என வெவ்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன. ஜப்பானிய மருத்துவர்களும் அமெரிக்க, ஐரோப்பிய போர்க் கைதிகளான மருத்துவர்கலும் பூமத்தியரேகைப் பகுதி மழைக்காடுகளின் நோய்களைப் பற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை. ஒப்பீட்டளவில் டச்சு போர்க்கைதிகளின் முகாம்களில் குறைவான சாவு விகிதம் இருந்தது. காரணம் அவர்கள் ஒரு தலைமுறைக்கு முன்னரே பர்மாவில் குடியேறினவர்கள், அவர்களில் பலர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள், அவர்களின் மருத்துவர்களுக்கு உள்ளூர் நோய்கள் பற்றிய அறிவும் இருந்தது. <br />
<br />
மருத்துவச் சேவை முகாம்கள்தோறும் மாறுபட்டது. நாநூறு டச்சு கைதிகள் கொண்ட ஒரு முகாமில் மூன்று டாக்டர்கள் இருந்தனர். அவர்களின் முகாமில் எவரும் சாகவில்லை. 190 அமெரிக்க போர்க்கைதிகள் டாக்டர் ஹென்றி ஹெக்கிங் தலைமையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டபோது மூன்றுபேர்தான் சாகநேரிட்டது என்று ராபர்ட் சார்ல்ஸ் பதிவுசெய்கிறார். ஆனால் 450 பேர் கொண்ட இன்னொரு அமெரிக்க முகாமில் நூறுபேர் இறந்தனர். மலேசிய, ஜாவா தொழிலாளர்களின் முகாம்களில் பெரும்பாலும் மருத்துவ உதவியே இருக்கவில்லை. <br />
<br />
கணக்குகளின்படி போர்க்கைதிகளின் எடை இழப்பு அங்கே பணியாற்றிய படைவீரர்களுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 9 முதல் 14 கிலோ வரை இருந்தது. இது மிக அபாயகரமானதும், உயிரிழப்பை உருவாக்குவதுமாகும். <br />
== பதிவுகள் ==<br />
அந்த கொடும் சூழலில் அவதியுற்ற [[ஜாக் பிரிட்ஜர் சாக்கர்]] (Jack Bridger Chalker), [[பிலிப் மெனின்ஸ்கி]] (Philip Meninsky), [[ஜான் மென்னி]] (John Mennie), [[ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட்]] ([[wikipedia:Ashley_George_Old|Ashley George Old]]), மற்றும் [[ரொனால்ட் சியர்ல்]] (Ronald Searle) போன்ற கலைஞர்கள் வழியாகவே அந்த ஆபத்தான சூழல் ஓவியங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மனித தலைமுடிகள் தூரிகைகளாகவும் தாவரத்தின் சாறுகளும் இரத்தமும் வண்ணங்களாகவும் அவர்களுக்குப் பயன்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு கழிவறை காகிதங்களில் அவர்கள் வரைந்த ஓவியங்கள் ஜப்பான் போர்குற்ற விசாரணையில் ஆதாரங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பல ஓவியங்கள் ஆஸ்திரேலிய போர் நினைவுச்சின்னம், விக்டோரியாவின் மாநில நூலகம் மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் போர் அருங்காட்சியகம் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளன. <br />
<br />
முன்னாள் போர்க்கைதியான [[ஜான் கோஸ்ட்]] ( John Coast) 1946-ல் எழுதிய ரெயில்ரோட் ஆஃப் டெத் (''Railroad of Death)'' முக்கியமான நேரடி ஆவணமாகக் கருதப்படுகிறது. மரணரயில் என இந்த பாதைப்பணியை அழைத்தவர் அவரே. போர்க்கைதிகள் மீதான ஒடுக்குமுறை, சாவுகள் ஆகியவற்றைப் பதிவுசெய்வதுடன் அந்த சூழ்நிலையில் இருந்த வாழ்க்கையையும், பர்மியக் கிராமங்களின் நிலையையும் ஜான் கோஸ்ட் பதிவுசெய்கிறார் <br />
<br />
அமெரிக்க கடற்படை வீரரும் மூழ்கிய அமெரிக்கக் கப்பல் யுஎஸ்எஸ் ஹூஸ்டனில் இருந்து தப்பியவருமான எச்.ராபர்ட் சார்ல்ஸ் (H. Robert Charles) தன்னுடைய லாஸ்ட் மேன் அவுட் (Last Man Out ) என்னும் நூலில் பிரிட்டிஷ் சிறைக்கைதியாக இருந்த டாக்டர் ஹென்றி ஹெக்கிங் (Henri Hekking) என்பவரின் அனுபவங்களை பதிவுசெய்திருக்கிறார். <br />
<br />
ஸ்காட்லாந்தைச் சேந்தவரான [[ஏர்னஸ்ட் கோர்டான்]] (Ernest Gordon) சயாம் மரணரயில் பாதையில் கைதியாக இருந்தார். அவர் எழுதிய Through the Valley of the Kwai என்னும் தன் வரலாறு பின்னர் To End All Wars என்ற பெயரில் 2001ல் திரைப்படமாக வெளிவந்தது. <br />
<br />
ஆனால் இப்பதிவுகள் எவற்றிலும் தெற்காசியத்தொழிலாளர்கள், தமிழர்கள் அழிந்ததைப் பற்றிய குறிப்பிடத்தக்க சித்திரங்கள் எவையும் இல்லை. போர்க்கைதிகளும் கூலியாகப் பிடித்து வந்ததவர்களும் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது ஒரு காரணம். கூலிக்கு வந்தவர்கள் பற்றிய முறையான ஆவணப்பதிவுகள் ஏதுமில்லை. நினைவுப்பதிவுகள்கூட செய்யப்படவில்லை. நீண்ட காலம் கழித்தே தமிழர்கள் நினைவுப்பதிவுகளைச் செய்யத் தொடங்கினர். அப்போது அரைநூற்றாண்டு கடந்துவிட்டிருந்தமையால் பெரும்பாலான கூலிப்பணியாளர்கள் மறைந்துவிட்டிருந்தனர். எஞ்சியவர்களுக்கு மிக மங்கலான நினைவுகளே இருந்தன. ஆங்கிலேய, ஆஸ்திரேலிய போர்க்கைதிகளின் நினைவுப்பதிவுகளும் பிற ஆவணங்களுமே இன்று தமிழர்களின் அழிவை பதிவுசெய்வதற்கும் வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன. <br />
[[File:Railroad of Death2.jpg|thumb|''Railroad of Death'']]<br />
== போர்க்குற்ற விசாரணைகள் ==<br />
சயாம் - பர்மா ரயில்பாதை கட்டுமானத்தை ஒரு போர்க்குற்றமாக சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட உலக நாடுகள் அறிவித்தன. ஜப்பான் மீது வழக்கு தொடரப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் 111 ஜப்பானிய இராணுவ அதிகாரிகள் இரயில் கட்டுமானத்தின்போது கொடூரமான முறையில் நடந்துகொண்டதற்காக போர்க்குற்றம் அடிப்படையில் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 32 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த பர்மா - சயாம் ரயில் கட்டுமானத்தின் முதன்மை தளபதிகளில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் [[எகுமா இஷிடா]]வுக்கு (Lieutenant General Eiguma Ishida) விசாரணைக்குப்பின் குற்றம் நிரூபிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவரது துணை அதிகாரிகள் கர்னல் ஷெய்கோ நகுமுரா( Shigeo Nakamura) கர்னல் டாம்மி இஷி (Tamie Ishii) லெப்-கர்னல் ஷோய்ச்சி யானகிட்டா ( Shoichi Yanagita) ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. <br />
<br />
பர்மா ரயில் கட்டுமானத்தின் தலைமைக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்த முதல் லெஃடினென்ட் [[ஹிரோஷி ஆபே]] ''(Hiroshi Abe)'' என்பவர் சொன்குராய் என்னுமிடத்தில் இருந்த முகாமில் காலரா பரவி 1600 பிரிட்டிஷ் ராணுவ வீரர்களில் 600 பேர் இறந்த குற்றத்திற்கு பொறுப்பாக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றம் கண்டது. மேஜர் சோட்டோமொட்சு சிடா( Sotomatsu Chida) பத்தாண்டுக்காலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். <br />
<br />
பொதுவாக இந்த குற்றவிசாரணைகளில் அமெரிக்க, பிரிட்டிஷ்ப் போர்க்கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்டதே பெரும்பாலும் விசாரிக்கப்பட்டது. அதற்குத்தான் விரிவான சாட்சியங்களும் ஆவணங்களும் இருந்தன. ஆசிய தொழிலாளர்களின் சாவு பெரும்பாலும் கருத்தில் கொள்ளப்படவில்லை. அது போர்க்குற்ற வளையத்துக்குள் வரவில்லை. பாதிக்கப்பட்ட தென்கிழக்காசிய ஊழியர்களுக்கு இழப்பீடு என எதுவும் வழங்கப்படவில்லை. <br />
== குறிப்பிடத்தக்க கட்டுமானங்கள் ==<br />
[[File:Door bombardementen van geallieerden vernielde ijzeren spoorbrug van de Birma-Siamspoorweg bij Tamarkan in Siam, KITLV 25514.tiff.jpg|thumb|குண்டு வீச்சில் தகர்க்கப்பட்ட பாலம்]]<br />
* குவே யாய் பாலம் - குவாய் ஆற்றின் மீது கட்டப்பட்ட ரயில் பாலம் (322 மீட்டர்)<br />
<br />
* வாங் ஃபோ வையாடக்ட் - இது குவே நொய் ஆற்றின் குறுக்கே உள்ள குன்றினைப் பின்தொடரும் மரத்தாலான ரயில் பாலம் (400 மீட்டர்)<br />
* சோங்குறை பாலம் - சோங்கலியா ஆற்றின் மீது கட்டப்பட்ட மரப்பாலம் மற்றும் இரயில் பாதை (90 மீட்டர்)<br />
== கல்லறைகள் ==<br />
[[File:அருங்காட்சியகம்.jpg|thumb|அருங்காட்சியகம்]]<br />
[[File:சயாம் மரண ரயில் .jpg|thumb|சயாம் மரண ரயில் ]]<br />
1946ல் போர்க்கைதிகளின் முகாம்களில் இருந்த இறந்தவர்கள் அடையாள எச்சங்கள், புதைக்கப்பட்டிருந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அதிகாரப்பூர்வ போர் கல்லறைக்கு மாற்றப்பட்டன. 415 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயில் பாதைத் தொடர் நெடுகிலும் பல இடுகாடுகள் இருந்தன. அந்த இடுகாடுகள் மூன்று நிலையான இடுகாடுகளாக சீர்செய்யப்பட்டு போர்க்கைதிகளின் உடல்கள் மறுஅடக்கம் செய்யப்பட்டன. அவற்றுள் 668 அமெரிக்க வீரர்களின் உடல்கள் அமெரிக்காவிற்கே எடுத்துச் செல்லப்பட்டன.<br />
காஞ்சனாபுரியில் பிரதான கல்லறை (''Kanchanaburi War Cemetery'') இருக்கிறது. இங்கு பிரிட்டிஷ், ஆஸ்திரேலிய, டச்சு போர் கைதிகளின் கல்லறைகள் 6,982 உள்ளன. இவற்றில் 6858 கல்லறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 3,585 பிரிட்டிஷ் கைதிகளும் 1,896 டச்சு கைதிகளும் 1,362 ஆஸ்திரேலிய கைதிகளும் இங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானியப் படையணியில் பணிபுரிந்த 11 இந்தியப் போர்வீரர்களும் அருகிலுள்ள இஸ்லாமிய கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.<br />
<br />
காஞ்சனாபுரிக்கு அருகில் சூங் காய் எனும் இடத்தில் மற்றொரு கல்லறை (''Chungkai War Cemetery'') இருக்கிறது. இதில் 1,693 போர் கல்லறைகள் உள்ளன. 1373 பிரிட்டிஷ், 314 டச்சு, 6 இந்திய இராணுவம் என அவை அடையாளம் காணப்பட்டுள்ளன. <br />
<br />
மியான்மாரின் தான்பியுசாயாட் ''(Thanbyuzayat)'' எனும் நகரில் போர்க்கைதிகளின் கல்லறை இருக்கிறது. இந்த மூன்று கல்லறைகளையும் (''Commonwealth War Graves Commission'') பொதுநலவாய போர்க் கல்லறைகளின் ஆணையம் பராமரித்து வருகின்றது.<br />
== அருங்காட்சியகங்கள் ==<br />
ஏராளமான நினைவகங்களும் அருங்காட்சியகங்களும் இந்த ரயில்பாதையில் இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஏராளமானவர்கள் மறைந்த மிக அதிகமான உயிரிழப்பு நிகழ்ந்த ஹெல்பாஸ் கணவாயில் அவற்றில் மிகப்பெரிய அருங்காட்சியகம் உள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களுக்கான அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. மியான்மார் பக்கம் தன்ப்யுசாயாட் (Thanbyuzayat) ஊரில் ஓர் அருங்காட்சியகம் உள்ளது. தாய்லாந்தில் காஞ்சனபுரியில் மேலும் இரண்டு அருங்காட்சியகங்கள் உள்ளன. தாய்லாந்து- பர்மா ரயில் மையம் (Thailand–Burma Railway Centre) சென்ற ஜனவரி 2003-ல் ஓர் அருங்காட்சியகத்தை திறந்து (JEATH War Museum) . குவாய் பாலத்தில் ஓர் நினைவு அறிவிப்பு உள்ளது. அங்கே ஓடிய ரயில்பெட்டி பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாதிலும் ஓர் நினைவகம் உள்ளது. (National Memorial Arboretum ,England.)<br />
<br />
ஆனால் அந்த ரயில்பாதையில் மறைந்த கிட்டத்தட்ட 60000 தமிழ் மக்களுக்காக தனியான நினைவகமோ, அருங்காட்சியகமோ எங்குமில்லை. அவர்களின் நினைவுகள் முறையாக தொகுக்கப்படவோ, நினைவுச்சின்னங்கள் சேகரிக்கப்படவோ இல்லை. <br />
== தமிழ் இலக்கியப் பதிவுகள் ==<br />
[[File:ஆஷ்லி ஜார்ஜ் ஓவியம். 2.jpg|thumb|ஆஷ்லி ஜார்ஜ் ஓவியம்]]<br />
சயாம் மரணரயிலில் மறைந்த தமிழர்கள் பற்றிய செய்திகள் தமிழகத்தை வந்தடையவில்லை. போர்க்காலத்தில் மலேசியா- சிங்கப்பூரில் இருந்த [[ப.சிங்காரம்]] அவர் எழுதிய [[புயலிலே ஒரு தோணி]], [[கடலுக்கு அப்பால்]] ஆகிய நாவல்களில் அக்கொடுமைகளை பதிவுசெய்யவில்லை என்பதுடன், ஜப்பானியர்களின் பக்கமிருந்தே வரலாற்றை பதிவுசெய்தார். போர்ச்சூழலை வைத்து [[இருபது வருஷங்கள்]] என்னும் நாவலை எழுதிய [[எம்.எஸ்.கல்யாணசுந்தரம்]] சயாம் மரணரயில் பற்றி அறிந்திருக்கவில்லை. <br />
<br />
சயாம் மரணரயிலில் மறைந்த தமிழர்கள் நெடுங்காலம் முழுமையாகவே மறக்கப்பட்டனர். 1993-ல் தான் மலேசியாவில் எழுதப்பட்ட சயாம் மரணரயில் என்னும் நாவல் அக்கொடுமைகளை தமிழ் இலக்கியச் சூழலுக்கு அறிமுகம் செய்தது. அதுவும் தீவிர இலக்கியம் வாசிக்கும் சிறுவட்டத்திற்குள். அந்நாவல் சயாம் மரணரயில் கொடுமைகளை அதன் தீவிரத்துடன் அறிமுகம் செய்யவில்லை. ஆகவே போதிய கவனம் கிடைக்கவில்லை. அந்நாவலுக்கு எங்கும் மதிப்புரைகூட எழுதப்படவில்லை. <br />
<br />
2000த்குப் பின் இணையம் அறிமுகமானபோதுதான் சயாம் மரணரயில் பற்றிய செய்தி பரவலாக அறிமுகமாகியது. இன்னமும் தமிழ்ப் பொதுவாசகர்களுக்கு அதைப்பற்றிய செய்திகள் சென்று சேரவில்லை. தமிழ்நாட்டு பொது ஊடகம் சார்ந்து 2022 வரை ஓர் ஆவணப்படம்கூட எடுக்கப்பட்டதில்லை. 2022 வரை பிரபல ஊடகங்களில் நேரில் சென்று பார்த்து ஓர் ஆவணக்கட்டுரை கூட எழுதப்பட்டதுமில்லை. தமிழ் சினிமாவில் எந்தப்பதிவும் 2022 வரை இல்லை. <br />
* மரவள்ளிக் கிழங்கு - சா. அ. அன்பானந்தன் - (குறுநாவல் - 1979)<br />
*[[சயாம் மரணரயில்|சயாம் மரண ரயில்]] - ஆர். சண்முகம் (நாவல் - 1993)<br />
* [[நினைவுச்சின்னம்]] - [[அ. ரெங்கசாமி]] (நாவல் - 2005)<br />
*[[கையறு]] - [[கோ. புண்ணியவான்]] (நாவல் - 2021)<br />
*ரயில் - இந்திரஜித் (குறுநாவல் - 2021)<br />
*சயாம்-பர்மா மரண இரயில் பாதை -சி.அருண்<br />
== ஆவணப்படம் ==<br />
நாடோடிகள் கலைக்குழு சார்பாக SIAM BURMA DEATH RAILWAY (Buried tears of asian labourers) என்னும் தலைப்பில் ஆங்கிலத்திலும் சயாம்-பர்மா மரணரயில் பாதை (எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை) என்ற தலைப்பில் தமிழிலும் ஆவணப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. (பார்க்க [[சயாம் மரணரயில் ஆவணப்படம்]] )<br />
== பிற்கால ஊடகப் பதிவுகள் ==<br />
* த பிரிட்ஜ் ஆன் ரிவர் குவாய் (''The Bridge on the River Kwai'' ) டேவிட் லீன் இயக்கத்தில் 1954ல் வெளிவந்த திரைப்படம். சயாம் ரயில்பாதையில் பணியாற்றிய பிரிட்டிஷ் போர்க்கைதிகள் பற்றிய பதிவு. <br />
*ஏர்னஸ்ட் கோர்டான் எழுதிய Through the Valley of the Kwai என்னும் நாவலை அடியொற்றி End All Wars என்னும் திரைப்படம் 2001ல் வெளியானது. <br />
* த ரெயில்வே மேன் (''The Railway Man'' ) 2013ல் ஜொனாதன் டெப்லிஸ்கி இயக்கிய படம். சயாம் மரணரயில் பாதையை பின்புலமாகக் கொண்டது <br />
== உசாத்துணை ==<br />
* சயாம் பர்மா மரண இரயில்பாதை - சீ. அருண் (ஆய்வுநூல் - 2008)<br />
* [http://vallinam.com.my/navin/?p=4538 சயாம் மரணரயில், இரு நாவல்கள் ம.நவீன்]<br />
* [https://yarl.com/forum3/topic/100264-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/ சயாம் மரணரயில், தமிழர்களின் வரலாறு]<br />
* [https://www.newssensetn.com/world-news/more-than-60000-tamils-killed-in-siam-burma-railway-work <bdi>பர்மா - சயாம் மரண ரயில் பாதை : கொத்து கொத்தாக இறந்த தமிழர்கள் - ஒரு ரத்த சரித்திரம்</bdi>]<br />
* [https://vimarisanam.com/2016/09/01/106000-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-60000-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/ 106,000 உயிர்களை (இதில் 60,000 தமிழர்கள்) பலி கொண்ட மரண ரயில் பாதை ….!!!]<br />
*[https://www.jeyamohan.in/68380/ சயாம் மரணரயில் ஆவணப்படம் ஜெயமோகன்]<br />
*[https://www.imdb.com/title/tt3883834/ சயாம் மரணரயில் ஆவணப்பட முன்னோட்டம்]<br />
*[https://www.jeyamohan.in/1196/ வரலாற்றின் வண்டலில் ஜெயமோகன்]<br />
*[https://web.archive.org/web/20100922103915/http://anzacday.org.au/history/ww2/anecdotes/deathrailway.html சயாம் மரணரயில் புகைப்படங்கள் ஆஸ்திரேலிய ஆவணக்காப்பகம்]<br />
*https://mosaicscience.com/story/far-east-prisoners-of-war/<br />
*https://web.archive.org/web/20120118163648/http://www.hellfirepass.com/historical_facts_hellfire_pass.html<br />
*https://www.freemalaysiatoday.com/category/nation/2016/07/09/stories-of-death-railway-heroes-to-be-kept-alive/<br />
*https://kajomag.com/the-forgotten-malayan-labourers-of-burma-railway-during-wwii/<br />
*https://web.archive.org/web/20160527140349/http://www.myonlinetour.com/thailand/TheBridgeOverTheRiverKwae/index.htm<br />
*https://www.canveyisland.org/people-2/3-heroes/ashley_george_old-2/ashley_george_old<br />
*https://www.pbs.org/wnet/secrets/the-bridges-of-the-thailand-burma-railway/178/<br />
*Gamba, C. ''The National Union of Plantation workers''<br />
*Boggett, David. "Notes on the Thai-Burma Railway. Part II: Asian Romusha: The Silenced Voices of History" (PDF).<br />
*https://www.singaporewarcrimestrials.com/case-summaries/detail/084<br />
*https://www.generals.dk/general/Ishida/Eiguma/Japan.html<br />
*இஷிடா விசாரணை செய்திகள். https://www.awm.gov.au/collection/C1254708<br />
*https://www.theprisonerlist.com/the-film.html<br />
*https://www.cofepow.org.uk/memories/taylor-frederick-noel<br />
*[http://www.mansell.com/pow_resources/camplists/death_rr/dutch_view_death_railway.html The Death Railway A Dutch viewpoint]<br />
*[https://digitalcommons.macalester.edu/cgi/viewcontent.cgi?referer=&httpsredr=1&article=1003&context=thdabooks Sears Eldredge (2014). ''The Thailand-Burma Railway: An Overview'']<br />
*https://www.far-eastern-heroes.org.uk/harrys_war/html/thailand_to_burma_railway.htm<br />
*https://www.uspowtbr.com/17g-hintok/<br />
*[https://www.thestar.com.my/lifestyle/living/2020/08/05/sikhs-working-on-the-death-railway-blood-toil-tears-and-sweat#:~:text=The%20Death%20Railway%20line%20from%20Ban%20Pong%20in,50%2C000%20Allied%20PoW%20were%20taken%20as%20slave%20labourers. Sikhs working on the Death Railway: Blood, toil, tears and sweat]<br />
*<br />
*<br />
== இணைப்புகள் ==<br />
*https://digitalcommons.macalester.edu/captiveaudiences/<br />
*https://web.archive.org/web/20090704143550/http://dl.screenaustralia.gov.au/module/299/<br />
*https://www.pows-of-japan.net/<br />
*[https://www.cwgc.org/visit-us/find-cemeteries-memorials/cemetery-details/2017100/kanchanaburi-war-cemetery/ காஞ்சனபுரி போர் நினைவகம்]<br />
*[https://www.cwgc.org/visit-us/find-cemeteries-memorials/cemetery-details/2035000/chungkai-war-cemetery/ சுங்கய் போர் நினைவகம்]<br />
== குறிப்பிடத்தக்க நூல்கள் ==<br />
* Beattie, Rod (2007). The Thai-Burma Railway. Thailand-Burma Railway Centre.<br />
* Last Man Out: Surviving the Burma-Thailand Death Railway: A Memoir<br />
* Blair, Clay, Jr.; Joan Blair (1979). Return from the River Kwa இணையநூலகம்<br />
* Boulle, Pierre (1954). Bridge on the River Kwai. London: Secker & Warburg<br />
*''Blair, Clay, Jr.; Joan Blair (1979). Return from the River Kwai. New York: Simon & Schuster. <nowiki>ISBN 9780671242787</nowiki>.''<br />
* ''Boulle, Pierre (1954). Bridge on the River Kwai. London: Secker & Warburg.''<br />
* ''Bradden, Russell (2001) [1951]. The Naked Island. Edinburgh: Birlinn.''<br />
* ''Bradley, James (1982). Towards The Setting Sun: An escape from the Thailand-Burma Railway, 1943. London and Chichester: Phillimore & Co. Ltd. <nowiki>ISBN 0-85033-467-5</nowiki>.''<br />
* ''Charles, H. Robert (2006). Last Man Out: Surviving the Burma-Thailand Death Railway: A Memoir. Minneapolis, MN: Zenith Press. <nowiki>ISBN 978-0760328200</nowiki>.''<br />
* ''Coast, John; Noszlopy, Laura; Nash, Justin (2014). Railroad of Death: The Original, Classic Account of the 'River Kwai' Railway. Newcastle: Myrmidon. <nowiki>ISBN 9781905802937</nowiki>.''<br />
* ''Commonwealth War Graves Commission (2000). The Burma-Siam Railway and its Cemeteries. England: Information sheet.''<br />
* ''Davies, Peter N. (1991). The Man Behind the Bridge: Colonel Toosey and the River Kwai. London: Athlone Press.''<br />
* ''Daws, Gavan (1994). Prisoners of the Japanese: POWs of World War II in the Pacific. New York: William Morrow & Co.''<br />
* ''Dunlop, E. E. (1986). The War Diaries of Weary Dunlop: Java and the Burma-Thailand Railway. Ringwood, Victoria, Aus: Penguin Books.''<br />
* ''Eldredge, Sears (2010). Captive Audiences/Captive Performers: Music and Theatre as Strategies for Survival on the Thailand-Burma Railway 1942–1945. Saint Paul, Minnesota, USA: Macalester College.''<br />
* ''Flanagan, Martin; Arch Flanagan (2005). The Line: A Man's Experience of the Burma Railway; A Son's Quest to Understand. Melbourne: One Day Hill. <nowiki>ISBN 9780975770818</nowiki>.''<br />
* ''Flanagan, Richard (2013). The Narrow Road to the Deep North. North Sydney, N.S.W.: Random House Australia. <nowiki>ISBN 9781741666700</nowiki>.''<br />
* ''Gordon, Ernest (1962). Through the Valley of the Kwai: From Death-Camp Despair to Spiritual Triumph. New York: Harper & Bros.''<br />
* ''Gordon, Ernest (2002). To End all Wars. HarperCollins. <nowiki>ISBN 0-00-711848-1</nowiki>.''<br />
* ''Hardie, Robert (1983). The Burma-Siam Railway: The Secret Diary of Dr. Robert Hardie, 1942–1945. London: Imperial War Museum.''<br />
* ''Harrison, Kenneth (1982). The Brave Japanese (Original title, The Road To Hiroshima, 1966). Guy Harrison. B003LSTW3O.''<br />
* ''Henderson, W. (1991). From China Burma India to the Kwai. Waco, Texas, USA: Texian Press.''<br />
* ''Hornfischer, James D. (2006). Ship of Ghosts. New York: Bantam. <nowiki>ISBN 978-0-553-38450-5</nowiki>.''<br />
* ''Kandler, Richard (2010). The Prisoner List: A true story of defeat, captivity and salvation in the Far East 1941–45. London: Marsworth Publishing. <nowiki>ISBN 978-0-9564881-0-7</nowiki>.''<br />
* ''Kinvig, Clifford (1992). River Kwai Railway: The Story of the Burma-Siam Railway. London: Brassey's. <nowiki>ISBN 0-08-037344-5</nowiki>.''<br />
* ''La Forte, Robert S. (1993). Building the Death Railway: The Ordeal of American POWs in Burma. Wilmington, Delaware, USA: SR Books.''<br />
* ''La Forte, Robert S.; et al., eds. (1994). With Only the Will to Live: Accounts of Americans in Japanese Prison Camps 1941–1945. Wilmington, Delaware: Scholarly Resources.''<br />
* ''Latimer, Jon (2004). Burma: The Forgotten War. London: John Murray.''<br />
* ''Lomax, Eric (1995). The Railway Man: A POW's Searing Account of War, Brutality and Forgiveness. New York: W. W. Norton. <nowiki>ISBN 0-393-03910-2</nowiki>.''<br />
* ''MacArthur, Brian (2005). Surviving the Sword: Prisoners of the Japanese in the Far East, 1942–1945. New York: Random House. <nowiki>ISBN 9781400064137</nowiki>.''<br />
* ''McLaggan, Douglas (1995). The Will to Survive, A Private's View as a POW. NSW, Australia: Kangaroo Press.''<br />
* ''Peek, Ian Denys (2003). One Fourteenth of an Elephant. Macmillan. <nowiki>ISBN 0-7329-1168-0</nowiki>.''<br />
* ''Rees, Laurence (2001). Horror in the East: Japan and the Atrocities of World War II. Boston: Da Capo Press.''<br />
* ''Reminick, Gerald (2002). Death's Railway: A Merchant Mariner on the River Kwai. Palo Alto, CA, USA: Glencannon Press.''<br />
* ''Reynolds, E. Bruce (2005). Thailand's Secret War: The Free Thai, OSS, and SOE During World War II. New York: Cambridge University Press.''<br />
* ''Richards, Rowley; Marcia McEwan (1989). The Survival Factor. Sydney: Kangaroo Press. <nowiki>ISBN 0-86417-246-X</nowiki>.''<br />
* ''Rivett, Rohan D. (1946). Behind Bamboo. Sydney: Angus & Robertson (later Penguin, 1992). <nowiki>ISBN 0-14-014925-2</nowiki>.''<br />
* ''Searle, Ronald (1986). To the Kwai and Back: War Drawings. New York: Atlantic Monthly Press.''<br />
* ''Teel, Horace G. (1978). Our Days Were Years: History of the "Lost Battalion," 2nd Battalion, 36th Division. Quanah, TX, USA: Nortex Press.''<br />
* ''Thompson, Kyle (1994). A Thousand Cups of Rice: Surviving the Death Railway. Austin, TX, USA: Eakin Press.''<br />
* ''Urquhart, Alistair (2010). The Forgotten Highlander – My incredible story of survival during the war in the Far East. London, UK: Little, Brown. <nowiki>ISBN 9781408702116</nowiki>.''<br />
* ''Van der Molen, Evert (2012). Berichten van 612 aan het thuisfront – Zuidoost-Azië, 1940–1945 [Memoires of a Dutch POW who survived 15 camps on Java, in Thailand and in Japan] (in Dutch). Leiden, Netherlands: LUCAS. <nowiki>ISBN 978-90-819129-1-4</nowiki>.''<br />
* ''Velmans, Loet (2003). Long Way Back to the River Kwai: Memories of World War II. New York: Arcade Publishing.''<br />
* ''Waterford, Van (1994). Prisoners of the Japanese in World War II. Jefferson, NC: McFarland & Co. Inc, Publishers.''<br />
* ''webster, Donovan (2003). The Burma Road: The Epic Story of the China-Burma-India Theater in World War II. New York: Straus & Giroux.''<br />
* ''Wigmore, Lionel (1957). The Japanese Thrust – Australia in the War of 1939–1945. Canberra: Australian War Memorial.''<br />
{{finalised}}<br />
[[Category:Tamil Content]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88&diff=49092சயாம் மரண ரயில்பாதை2022-07-02T03:42:29Z<p>Thangapandiyan: /* இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் */</p>
<hr />
<div>{{Read English|Name of target article=Siam Death Railway|Title of target article=Siam Death Railway}}<br />
[[File:சயாம் பாதை.jpg|thumb|சயாம் - பர்மா ரயில் பாதை (நன்றி : எழுத்தாளர் அ. ரெங்கசாமி)]]<br />
[[File:Sayam2.jpg|thumb|சயாம் மரணரயில் பாதை அமைப்பு]]<br />
[[File:ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட், ஓவியம்.jpg|thumb|ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட், ஓவியம்]]<br />
[[File:ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் ஓவியம்.jpg|thumb|ஜார்ஜ் மென்னீ ( George John Mennie) 1943.மரவெட்டு ஓவியம். சயாம் ரயில் கனு முகாம்]]<br />
[[File:நினைவுக்கம்பம் காஞ்சனபுரி.jpg|thumb|ஆசிய தொழிலாளர்களுக்காக 1944-ல் தாய்லாந்து காஞ்சனபுரியில் ஜப்பானிய ராணுவம் உருவாக்கிய நினைவுச்சின்னம்]]<br />
[[File:Japan Paya Thanbyuzayat 001.jpg|thumb|மியான்மாரில் ஜப்பானியர்கள் மறைந்த தொழிலாளர்களுக்காக கட்டிய நினைவுச்சின்னம் (Thanbyuzayat)]]<br />
[[File:Hellfire Pass - June 2004.jpg|thumb|ஹெல்ஃபயர் கணவாய்.2004-ல் எடுத்த படம். இந்த வெட்டுபாதை ரயில்பணியில் பலரை உயிர்வாங்கியது.]]<br />
[[File:போர் விசாரணை.jpg|thumb|போர்க்குற்ற விசாரணை, சிங்கப்பூர். Major J.C. McGrath தலைமையிலான விசாரணக் குழு]]<br />
[[File:ராட் பீட்டில் .jpg|thumb|ராட் பீட்டில் நூல்]]<br />
[[File:Last Man Out.jpg|thumb|Last Man Out]]<br />
[[File:‘Hospital ward, Thailand Railway’ by Murray Griffin, 1945-46,.jpg|thumb|மர்ரே கிரிபின். ஓவியம். சயாம் மாணரயில்வே. ஆஸ்பத்திரி]]<br />
[[File:Malaysian Tamils.jpg|thumb|ரயில்வே பணியில் மலாய் தொழிலாளர்கள்]]<br />
[[File:குவாய் நதிப்பாலம்.png|thumb|குவாய் நதிப்பாலம்]]<br />
[[File:சாக்கர் ஓவியம்3.jpg|thumb|சாக்கர் ஓவியம்]]<br />
[[File:Burma-Railway 1942 Kanchanaburi.webp|thumb|Burma-Railway 1942 Kanchanaburi]]<br />
சயாம் மரணரயில்பாதை: (1942-1943) ‘சயாம் மரண ரயில்’ எனப் பொதுவாக அழைக்கப்படும் தாய்லாந்து – பர்மா இரயில் பாதை. இது இரண்டாம் உலகப்போரில் போது (செப்டம்பர் 16, 1942 - அக்டோபர் 17, 1943) கட்டப்பட்ட 415 கி.மீ (258 மைல்கள்) நீளமுள்ள ரயில்பாதை. தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் நோக்கத்தில் ஜப்பானியர்களால் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.<br />
இந்த ரயில் பாதை அமைக்கும் பணியில் ஏறக்குறைய 1,80,000 லிருந்து 2,50,000 ஆசியத் தொழிலாளர்களும், 60,000-க்கும் மேற்பட்ட போர்க் கைதிகளும் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர். மிகக்கடுமையான வேலைச்சூழல், போதிய உணவு இல்லாமை, நோய், வன மிருகங்களின் தாக்குதல் மற்றும் ஜப்பானியர்கள் விதித்த மிகக் கடுமையான தண்டனை காரணமாக சுமார் 90,000 ஆசியத் தொழிலாளர்களும் 12,000-க்கும் மேற்பட்ட போர்க் கைதிகளும் இறந்து போயினர். இந்த ரயில் பாதையை ஜப்பானிய அரசாங்கம் Tai – Men Rensetsu Tetsudō (தாய்லாந்து-பர்மா இணைப்பு ரயில்வே) என அழைத்தது.<br />
இந்த ரயிலின் தாய்லாந்து பகுதி இப்போதும் புழக்கத்திலுள்ளது. பாங்காக்கில் இருந்து நாம் டோக் (Nam Tok) என்னும் ஊருக்குச் செல்லும் மூன்று ரயில்கள் ஒவ்வொரு நாளும் அதில் செல்கின்றன. அப்போது கட்டப்பட்ட பாலமும் புழக்கத்திலுள்ளது. தாய்லாந்து எல்லையில் இருந்து பர்மாவின் மௌல்மெய்ன் (Moulmein) என்னும் இடத்த்துக்கு செல்லும் இந்த ரயிலின் பர்மியப் பகுதி பல ஆண்டுகளுக்கு முன்னரே கைவிடப்பட்டது <br />
== வரலாறு ==<br />
பர்மாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே ஒரு ரயில் பாதை அமைக்க 1885-ஆம் ஆண்டிலேயே பிரிட்டிஷ் அரசால் ஆய்வு செய்யப்பட்டது. தாய்லாந்து மியன்மார் எல்லையில் 282 மீட்டர் உயரத்தில் உள்ள திரீ பகோடாஸ் கணவாய் (Three Pagodas Pass), மேற்கு தாய்லாந்தில் உள்ள குவாய் நதி ஆகியவை குறுக்கிட்டதால் அப்பணி மிகக் கடுமையானது என அத்திட்டம் நிறுத்திவைக்கப் பட்டது. <br />
<br />
இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் தாய்லாந்து ஒரு நடுநிலை நாடாகவே தன்னை அறிவித்துக்கொண்டது. டிசம்பர் 8, 1941-ல் ஜப்பான் தாய்லாந்தை ஆக்கிரமித்தது. 1942-ல் தாய்லாந்து வழியாக பர்மாவில் நுழைந்த ஜப்பானிய படைகள் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த பர்மாவையும் ஆக்கிரமித்தன. ஜப்பானியர் தங்களின் படைகளைப் பராமரிக்க, மலாக்கா நீரிணை மற்றும் அந்தமான் கடல் வழியாக வரவேண்டி இருந்தது. மேலும், நீர்மூழ்கிக் கப்பல்களின் மூலம் தாக்குதல் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. மலாய் தீபகற்பத்தைச் சுற்றி அபாயகரமான 3200 கி.மீ கடல் பயணத்தைத் தவிர்க்க, பாங்காக்கிலிருந்து ரங்கூனுக்கு ஒரு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த இரயில் பாதை மூன்று பெயர்களால் குறிப்பிடப்படுவதுண்டு. அவை பர்மா இரயில்பாதை (Burma Railway), மரண இரயில்பாதை (Death Railway), பர்மா – சயாம் இரயில்பாதை (Burma–Siam Railway) ஆகும். <br />
<br />
தாய்லாந்தில் உள்ள பான் பாங்க் (Ban Pong) முதல் பர்மாவில் உள்ள தன்பியூசத் (Thanbyuzayat) வரை இந்த ரயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது. 111 கிலோ மீட்டர் பர்மாவிலும் 304 கிலோ மீட்டர் தாய்லாந்திலும் இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டது. சிங்கப்பூர் சாங்கி சிறையிலிருந்தும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மற்ற சிறை முகாம்களிலிருந்தும் போர்க்கைதிகள் 1942-ல் வடக்கு நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் ஜூன் 23, 1942-ல் நோங் பிளாடுக் (Non Pladuk) வந்து இடைதங்கலுக்கான ஒரு முகாமைக் கட்டினர். உள்கட்டமைப்பின் ஆரம்பக்கட்ட பணிகளுக்குப் பிறகு செப்டம்பர் 16, 1942-ல் ரயில் பாதை கட்டுமானம் தொடங்கியது. <br />
<br />
பர்மாவில் இருந்து ஒரு கட்டுமான குழுவும் தாய்லாந்தில் இருந்து மற்றுமொரு குழுவும் இடைவிடாது பணியில் ஈடுபட்டது. ரயில் பாதை அமைப்பதற்கான தளவாடப் பொருட்கள் மலாயாவில் இருந்தும் இந்தோனேசியாவில் இருந்தும் கொண்டு வரப்பட்டன. மலாக்கா, சிங்கப்பூர், கோத்தாபாரு, கோலா லிப்பிஸ் பகுதிகளில் ஏற்கனவே போடப்பட்டிருந்த ரயில் தண்டவாளங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு சயாம் - பர்மா பாதைக்கு பயன்படுத்தப்பட்டன. டிசம்பர் 1943-ல் இத்திட்டத்தை நிறைவுக்குக் கொண்டுவர ஜப்பானிய அரசு திட்டமிட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே அக்டோபர் 17, 1943-ல் இத்திட்டம் நிறைவு பெற்றது. <br />
<br />
தாய்லாந்து பகுதியில் இருந்தும் பர்மியப் பகுதியில் இருந்தும் ரயில்பாதை போட்டுக்கொண்டு வந்தவர்கள் திரீ பகோடாஸ் கணாவய்க்கு 18 கிலோமீட்டர் தொலைவில் கொன்கொய்தா (Konkoita) என்னும் ஊரில் சந்தித்தனர். இன்று இந்த ஊர் கயெங் கொய் தா (Kaeng Khoi Tha, Sangkhla Buri District, Kanchanaburi Province) என அழைக்கப்படுகிறது. அங்கே போர்க்காலத்தில் மிகப்பெரிய போர்க்கைதி முகாம் ஒன்றை ஜப்பானியர் நடத்திவந்தனர். ரயில்பாதை அமைப்புப்பணியின் நிறைவை ஒட்டி அக்டோபர் 25, 1943-ல் விடுமுறை அறிவிக்கப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது. <br />
<br />
சயாம் மரண ரயில்பாதை பற்றி அமெரிக்கப் பொறியாளர் பஷார் அல்ட்டாபா (Bashar Altabba) கூறும்போது “வரலாற்றில் பொறியியலாளர்கள் இதைவிட பெரிய, இதை விட நீளமான, இதைவிடக் கடினமான பொறியியல் பணிகளை ஒரே வீச்சில் செய்து முடித்துள்ளனர். ஆனால் சயாம் ரயில்பாதை அவற்றை மிஞ்சுவது வெவ்வேறு கூறுகளை ஒருங்கிணைத்த அதன் ஒட்டுமொத்தத் தன்மையால்தான். இதன் மொத்த மைல்களின் நீளம், இதன் பாலங்களின் எண்ணிக்கை (எட்டு மிகப்பெரிய பாலங்கள் உட்பட மொத்தம் அறுநூறு பாலங்கள்), இதில் பங்கெடுத்த ஊழியர்களின் எண்ண்ணிக்கை ( ஏறத்தாழ இரண்டரை லட்சம் பேர்) , கட்டி முடிப்பதற்கு எடுத்துக்கொண்ட மிகக்குறுகிய காலம், அவர்கள் பணியாற்றிய இடங்களின் மிகமோசமான சூழல் ஆகியவை அக்கூறுகள். அவர்களுக்கு மிகக்குறைவான போக்குவரத்து வசதிதான் இருந்தது. மருத்துவ வசதி இல்லை. கட்டுமானப்பொருட்கள் மட்டுமல்ல உணவே தட்டுப்பாடாக இருந்தது. சுத்தியல்கள் மண்வெட்டிகள் போன்ற அடிப்படைக் கருவிகள் தவிர பணியாற்றுவதற்குரிய கருவிகள் இல்லை. காட்டின் வெப்பமும் நீராவிவெக்கையும் நிறைந்த மிகமோசமான தட்பவெப்பநிலையில் அவர்கள் பணியாற்றினர். இவையெல்லாம் சேர்ந்து இந்த ரயில்வேப்பணியை மிக அசாதாரணமான ஒரு சாதனையாக ஆக்குகிறது” [https://www.pbs.org/wnet/secrets/the-bridges-of-the-thailand-burma-railway/178/ 1]<br />
== இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ==<br />
பிரிட்டிஷார் பர்மாவையும் தாய்லாந்தையும் கைப்பற்றியபின் 16 ஜனவரி 1946-ல் பிரிட்டிஷ் ராணுவம் ஜப்பானிய போர்க்கைதிகளை பயன்படுத்தி தாய்லாந்தில் நிக்கி (Ni Thea) முதல் சொன்க்ராய் (Sonkrai) வரையிலான நான்கு கிலோமீட்டர் ரயில்பாதையை நீக்கம் செய்ய ஆணையிட்டது. தாய்லாந்துக்கும் பர்மாவுக்குமான ரயில் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. சிங்கப்பூரை படையெடுப்புகளில் இருந்து பாதுகாக்கும்பொருட்டு இது செய்யப்பட்டது. அதன்பின் ரயில்பாதையின் பர்மியப்பகுதி சிறிது சிறிதாக அகற்றப்பட்டு பயன்பாட்டுக்கு உதவாதபடி செய்யப்பட்டது <br />
<br />
1946 அக்டோபரில் ரயில்பாதையின் தாய்லாந்துப் பகுதி 1,250,000 பவுண்ட் விலைக்கு தாய்லாந்து அரசுக்கே விற்கப்பட்டது. ரயில்பாதை போடுவதற்காக எந்தெந்த நாடுகளிடமிருந்து ஜப்பான் பொருட்களை எடுத்துக் கொண்டதோ அந்நாடுகளுக்கு அத்தொகை நிவாரணமாக அளிக்கப்பட்டது. பிப்ரவரி 1, 1947-ல் கொன்கொய்தா அருகே பாலம் உடைந்து நிகழ்ந்த விபத்தில் தாய்லாந்தின் போக்குவரத்து அமைச்சர் இறந்ததை ஒட்டி ரயில்பாதை நாம் டாக் வரை போதும் என முடிவுசெய்யப்பட்டது. <br />
<br />
<br />
<br />
ஜூன் 24, 1949-ல் தாய்லாந்து ரயில்வே துறை இந்த ரயில்பாதையை பழுதுபார்த்துச் சீரமைக்கத் தொடங்கி ஏப்ரல் 1, 1952-ல் அப்பணி நிறைவுற்றது. பர்மியப் பகுதியையும் சீரமைத்து ரயில் ஓடவைக்கலாம் என்னும் திட்டம் பலமுறை முன்வைக்கப்பட்டாலும் நிறைவேற்றப்படவில்லை. பர்மியப்பகுதி மலைப்பாங்கானது. பல புதிய பாலங்களும் ரயில்வேகுகைகளும் தேவைப்படலாம் என்பதனால் ஒத்திவைக்கப்பட்டது.<br />
<br />
ஜப்பான் வீழ்ச்சிக்குப் பிறகு சிறைக்கைதிகளையும் ஆசியத் தொழிலாளர்களையும் அவரவர் நாட்டிற்கு அனுப்பிவைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. <br />
== தொழிலாளர்கள் ==<br />
====== ஜப்பானிய இராணுவம் ======<br />
சயாம் மரண ரயில் பாதை 12,000 ஜப்பானிய வீரர்களின் மேற்பார்வையில் அமைந்தது. அவர்களில் 800 கொரிய வீரர்களும் அடங்குவர். இவர்களே இரயில் பொறியியலாளர்களாகவும் மேற்பார்வையாளர்களாகவும் பாதுகாவலர்களாகவும் பணியாற்றினர். ஜப்பானிய வீரர்களுக்குக் கடுமையான பணிச்சுமை இல்லாத போதும் சுமார் 1000 பேர் வரை ரயில் கட்டுமானத்தின் போது இறந்தனர். ஜப்பானிய வீரர்கள் போர்க்கைதிகளிடமும் பிற தொழிலாளர்களிடமும் வன்முறையைப் பிரயோகித்ததோடு உடல் ரீதியான சித்திரவதைகளும் செய்தனர். தொழிலாளர்களுக்குக் கடும் தண்டனைகளையும் அவமானங்களையும் வழங்கிக்கொண்டே இருந்தனர். <br />
====== தென்கிழக்காசிய தொழிலாளர்கள் ======<br />
இந்தப் பணிக்காக அமர்த்தப்பட்ட தென்கிழக்காசிய தொழிலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,80,000 ஆகும். இவர்கள் ரோமுஷா என அழைக்கப்பட்டனர். (''rōmusha''). ஜாவா இன மக்கள், மலாயா தமிழர்கள், பர்மியர்கள், சீனர்கள், தாய்லாந்து மக்கள் மற்றும் பிற தென்கிழக்காசியர்கள் ஜப்பான் இராணுவத்தால் வலுக்கட்டாயமாக வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அதன் கட்டுமானப் பணியில் பலரும் இறந்தனர். தொடக்கக் கட்டத்தில் பர்மியர்களும் தாய்லாந்துகாரர்களும் அந்தந்த நாடுகளில் பணியில் அமர்த்தப்பட்டனர், இதில் தாய்லாந்து தொழிலாளர்கள் தப்பித்து ஓடினர். பர்மியர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. ஜப்பானிய ஆக்கிரமிப்பை பர்மியர்கள் வரவேற்றதோடு தொழிலாளர்களுக்கான ஆட்சேர்ப்பில் ஜப்பானுக்கு உறுதுணையாகவும் இருந்தனர்.<br />
<br />
ரயில் பாலம் அமைக்க துரிதம் காட்டிய ஜப்பான் அரசு, 1943-ன் முற்பகுதியில் தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியமும் தங்கும் வசதியும் தருவதாக விளம்பரம் செய்து உறுதியளித்தது. அதை மக்கள் நம்பாதபோது பொதுமக்கள் ஜப்பானிய அரசால் வற்புறுத்தப்பட்டு பாலம் அமைக்க பிடித்துச் செல்லப்பட்டனர். நீல் மக்பெர்சன் (MacPherson, Neil) தன் Death Railway Movements நூலில் குறிப்பிடுவதன்படி ஏறத்தாழ 90,000 பர்மியர்களும் 75,000 மலேசியத்தமிழர்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். வேறு பல ஆவணங்களின்படி சுமார் 1,00,000-க்கும் மேற்பட்ட மலாயா தமிழர்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு 60,000 பேருக்கு மேல் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. <br />
<br />
பிரிட்டிஷ் டாக்டரும் போர்க்கைதியுமான ராபர்ட் ஹார்டீ எழுதினார். “ஆற்றங்கரை கூலிமுகாம்களின் நிலைமை கொடூரமானது. அவர்கள் ஜப்பானிய பிரிட்டிஷ் முகாம்களில் இருந்து அப்பால் தங்கவைக்கப்பட்டனர். கழிவறைகள் இல்லை கின்சாய்- யோக் பகுதியில் இருந்த பிரிட்டிஷ் போர்க்கைதிகள் ஒவ்வொரு நாளும் சராசரியாக இருபது கூலிகளின் உடல்களை அடக்கம்செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் எல்லாம் மலாயாவிலிருந்து பொய்யான வாக்குறுதி அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டவர்கள் ‘எளிய பணி, நல்ல ஊதியம், நல்லவீடுகள்’ என அவர்களுக்குச் சொல்லப்பட்டது. பலர் தங்கள் மனைவியையும் குழந்தைகளையும் கூட அழைத்து வந்திருந்தனர். வந்தபின் அவர்கள் கல்லறை போன்ற சிறிய குடியிருப்புகளில் அடைக்கப்பட்டனர். கொரிய, ஜப்பானிய படைவீரர்களால் அவர்கள் அடித்து உதைக்கப்பட்டனர். கூடுதல் உணவை வாங்க முடியவில்லை, என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை, நோயுற்றும் அஞ்சியும் அவங்கள் அங்கே வாழ்ந்தனர். இருந்தாலும் அவர்கள் நோயுற்ற பிரிட்டிஷ் போர்க்கைதிகளிடம் அன்பாக நடந்துகொண்டனர்” <br />
====== போர்க் கைதிகள் ======<br />
பர்மாவுக்குச் சென்ற முதல் போர்க் கைதிகளான 3000 ஆஸ்திரேலியர்கள் ரயில் கட்டுமானம் தொடங்குவதற்கு முன் விமான நிலையம் மற்றும் உள் கட்டமைப்பில் பணிபுரிந்தனர். அவர்கள் சாங்கி முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். பின்ன அங்கிருந்து தாய்லாந்தின் சுவர்ணபுரி முகாமுக்கும், அங்கிருந்து பர்மா வரை வெவ்வேறு முகாம்களுக்கும் ரயிலிலும் படகிலுமாக கொண்டுசெல்லப்பட்டனர் <br />
<br />
தொடர்ந்து போர்கைதிகள் சிங்கப்பூர் மற்றும் கிழக்கிந்திய தீவுகளில் இருந்து அழைத்துவரப்பட்டு வழித்தடத்தின் ஒவ்வொரு 8-17 கிலோ மீட்டருக்கும் குறைந்தது 1000 தொழிலாளர்கள் தங்கும் முகாம்களை நிறுவினர். பக்கவாட்டுகள் திறந்த நிலையில் முகாம்கள் ஓலைக் கூரையுடன் மூங்கில் தூண்களால் கட்டப்பட்டன. இந்த முகாம்கள் 60 மீட்டர் நீளம் கொண்டவை. ஒரு மண் தரையின் ஒவ்வொரு பக்கத்திலும் தரையில் இருந்து மேடைகள் எழுப்பப்பட்டன. ஒவ்வொரு தொழிலாளர்களும் தூங்க இரண்டடி அகலமான இடம் கொடுக்கப்பட்டது. <br />
<br />
ரயில்வே பணி முடிவுற்ற பின்னரும்கூட போர்க்கைதிகள் ரயில்வே கொட்டடிகளில் மேலும் இரண்டு ஆண்டுகள் தங்கவைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு சாரார் உடலுழைப்புத் தொழிலாளர்களாக ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போர்க்கைதிகளில் இருந்த ஆசியர்களும் ஆசியத்தொழிலாளர்களும் இந்தோனேசியாவில் சும்பான் (Chumphon) முதல் கிரா புரி ( Kra Buri) வரை போடப்பட்ட க்ரா இஸ்துமஸ் ரயில்பாதை (Kra Isthmus Railway) திட்டத்துக்கும் , இந்தோனேசியாவின் சுமாத்ராவில் பேகன்பரு (Pekanbaru) முதல் முரோ ( Muaro) வரையிலான பேலாம்பாங் ரயில்வே திட்டத்திற்கும் (Palembang Railway) அனுப்பி வைக்கப்பட்டனர். போர்க்கைதிகளில் பத்தாயிரம் பேர் ஜப்பானுக்கு கப்பல்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஏராளமானவர்கள் குண்டுவீச்சிலும் நோயிலும் இறந்தனர். <br />
<br />
1943-க்குப் பின் உலகப்போரில் நேசநாடுகளின் கை ஓங்கத் தொடங்கியமையால் போர்க்கைதிகளின் நிலைமை மேம்படலாயிற்று. பாலப்பணிக்குப் பின் போர்க்கைதிகளில் எஞ்சியவர்கள் மருத்துவ மையங்களுக்கும் மறுவாழ்வு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். மறுவாழ்வு மையங்களில் அவர்கள் மூங்கிலாலும் பனையோலையாலும் கொட்டகைகள் கட்டிக்கொண்டு இசை, நாடகம் ஆகியவற்றை நடத்தி தங்கள் ஊக்கத்தை மீட்டுக்கொண்டனர். அந்நாட்களை பலரும் பதிவுசெய்துள்ளனர். <br />
== கொடுமைகள் ==<br />
[[File:POWs Burma Thai RR.jpg|thumb|பாதிக்கப்பட்ட டச்சு மற்றும் ஆஸ்திரேலிய போர் கைதிகள்]]<br />
மலேசிய தோட்டத்தொழிலாளர்கள், இந்தோனேசிய தொழிலாளர்கள் பர்மிய காடுகளின் கடுமையான சூழல்களுக்குப் பழக்கமற்றவர்கள். ஊட்டச்சத்து குறைபாடு, உடல் ரீதியான துன்புறுத்தல்கள், மலேரியா, காலரா, வயிற்றுப்போக்கு மற்றும் வெப்பமண்டல புண்கள் ஆகியவை கட்டுமான தொழிலாளர்களின் இறப்புக்குப் பொதுக்காரணிகளாகக் கூறப்படுகின்றன. அவர்கள் மிகக்குறைவான உணவுடன், மிக அதிகமான உழைப்புக்கு ஆணையிடப்பட்டனர். மிக மோசமான நிலையில் தங்கவைக்கப்பட்டனர். <br />
<br />
சயாம் - பர்மா ரயில் பாதை கட்டுமானத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தரப்பிலும் வெவ்வேறு எண்ணிக்கையில் மாறுபடுகிறது. இவற்றில் ஆஸ்திரேலிய அரசாங்க புள்ளிவிபரங்களே பெரும்பாலும் ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. அவ்வகையில் இந்த கட்டுமானத்தில் பணிப்புரிந்த 330,000 பேரில் சுமார் 90,000 ஆசிய தொழிலாளர்களும் 16,000 போர் கைதிகளும் இறந்தனர் எனக்கூறப்படுகிறது. எப்படியாயினும் இராணுவ வீரர்களைவிட தென்கிழக்காசிய தொழிலாளர்களின் மரண எண்ணிக்கையே அதிகமென அனைத்துத் தரப்பினரும் ஒப்புக்கொள்கின்றனர். டேவிட் பொகோட் (Boggett, David) குறிப்பிடுவதன்படி ஆசியத் தொழிலாளர்களில் சாவு விகிதம் நேர்ப்பாதி அளவுக்கு இருந்தது. மெக்பெர்சன் குறிப்பிடுவதன்படி மிக அதிகமான சாவுகள் மலாயா தமிழர்கள் மற்றும் ஜாவா தொழிலாளிகள் நடுவிலேயே இருந்தன. <br />
== மருத்துவச் சூழல் ==<br />
முகாம்களின் மோசமான மருத்துவச் சூழலே சாவுகளுக்கு முதன்மைக் காரணம் என வெவ்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன. ஜப்பானிய மருத்துவர்களும் அமெரிக்க, ஐரோப்பிய போர்க் கைதிகளான மருத்துவர்கலும் பூமத்தியரேகைப் பகுதி மழைக்காடுகளின் நோய்களைப் பற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை. ஒப்பீட்டளவில் டச்சு போர்க்கைதிகளின் முகாம்களில் குறைவான சாவு விகிதம் இருந்தது. காரணம் அவர்கள் ஒரு தலைமுறைக்கு முன்னரே பர்மாவில் குடியேறினவர்கள், அவர்களில் பலர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள், அவர்களின் மருத்துவர்களுக்கு உள்ளூர் நோய்கள் பற்றிய அறிவும் இருந்தது. <br />
<br />
மருத்துவச் சேவை முகாம்கள்தோறும் மாறுபட்டது. நாநூறு டச்சு கைதிகள் கொண்ட ஒரு முகாமில் மூன்று டாக்டர்கள் இருந்தனர். அவர்களின் முகாமில் எவரும் சாகவில்லை. 190 அமெரிக்க போர்க்கைதிகள் டாக்டர் ஹென்றி ஹெக்கிங் தலைமையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டபோது மூன்றுபேர்தான் சாகநேரிட்டது என்று ராபர்ட் சார்ல்ஸ் பதிவுசெய்கிறார். ஆனால் 450 பேர் கொண்ட இன்னொரு அமெரிக்க முகாமில் நூறுபேர் இறந்தனர். மலேசிய, ஜாவா தொழிலாளர்களின் முகாம்களில் பெரும்பாலும் மருத்துவ உதவியே இருக்கவில்லை. <br />
<br />
கணக்குகளின்படி போர்க்கைதிகளின் எடை இழப்பு அங்கே பணியாற்றிய படைவீரர்களுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 9 முதல் 14 கிலோ வரை இருந்தது. இது மிக அபாயகரமானதும், உயிரிழப்பை உருவாக்குவதுமாகும். <br />
== பதிவுகள் ==<br />
அந்த கொடும் சூழலில் அவதியுற்ற [[ஜாக் பிரிட்ஜர் சாக்கர்]] (Jack Bridger Chalker), [[பிலிப் மெனின்ஸ்கி]] (Philip Meninsky), [[ஜான் மென்னி]] (John Mennie), [[ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட்]] ([[wikipedia:Ashley_George_Old|Ashley George Old]]), மற்றும் [[ரொனால்ட் சியர்ல்]] (Ronald Searle) போன்ற கலைஞர்கள் வழியாகவே அந்த ஆபத்தான சூழல் ஓவியங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மனித தலைமுடிகள் தூரிகைகளாகவும் தாவரத்தின் சாறுகளும் இரத்தமும் வண்ணங்களாகவும் அவர்களுக்குப் பயன்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு கழிவறை காகிதங்களில் அவர்கள் வரைந்த ஓவியங்கள் ஜப்பான் போர்குற்ற விசாரணையில் ஆதாரங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பல ஓவியங்கள் ஆஸ்திரேலிய போர் நினைவுச்சின்னம், விக்டோரியாவின் மாநில நூலகம் மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் போர் அருங்காட்சியகம் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளன. <br />
<br />
முன்னாள் போர்க்கைதியான [[ஜான் கோஸ்ட்]] ( John Coast) 1946-ல் எழுதிய ரெயில்ரோட் ஆஃப் டெத் (''Railroad of Death)'' முக்கியமான நேரடி ஆவணமாகக் கருதப்படுகிறது. மரணரயில் என இந்த பாதைப்பணியை அழைத்தவர் அவரே. போர்க்கைதிகள் மீதான ஒடுக்குமுறை, சாவுகள் ஆகியவற்றைப் பதிவுசெய்வதுடன் அந்த சூழ்நிலையில் இருந்த வாழ்க்கையையும், பர்மியக் கிராமங்களின் நிலையையும் ஜான் கோஸ்ட் பதிவுசெய்கிறார் <br />
<br />
அமெரிக்க கடற்படை வீரரும் மூழ்கிய அமெரிக்கக் கப்பல் யுஎஸ்எஸ் ஹூஸ்டனில் இருந்து தப்பியவருமான எச்.ராபர்ட் சார்ல்ஸ் (H. Robert Charles) தன்னுடைய லாஸ்ட் மேன் அவுட் (Last Man Out ) என்னும் நூலில் பிரிட்டிஷ் சிறைக்கைதியாக இருந்த டாக்டர் ஹென்றி ஹெக்கிங் (Henri Hekking) என்பவரின் அனுபவங்களை பதிவுசெய்திருக்கிறார். <br />
<br />
ஸ்காட்லாந்தைச் சேந்தவரான [[ஏர்னஸ்ட் கோர்டான்]] (Ernest Gordon) சயாம் மரணரயில் பாதையில் கைதியாக இருந்தார். அவர் எழுதிய Through the Valley of the Kwai என்னும் தன் வரலாறு பின்னர் To End All Wars என்ற பெயரில் 2001ல் திரைப்படமாக வெளிவந்தது. <br />
<br />
ஆனால் இப்பதிவுகள் எவற்றிலும் தெற்காசியத்தொழிலாளர்கள், தமிழர்கள் அழிந்ததைப் பற்றிய குறிப்பிடத்தக்க சித்திரங்கள் எவையும் இல்லை. போர்க்கைதிகளும் கூலியாகப் பிடித்து வந்ததவர்களும் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது ஒரு காரணம். கூலிக்கு வந்தவர்கள் பற்றிய முறையான ஆவணப்பதிவுகள் ஏதுமில்லை. நினைவுப்பதிவுகள்கூட செய்யப்படவில்லை. நீண்ட காலம் கழித்தே தமிழர்கள் நினைவுப்பதிவுகளைச் செய்யத் தொடங்கினர். அப்போது அரைநூற்றாண்டு கடந்துவிட்டிருந்தமையால் பெரும்பாலான கூலிப்பணியாளர்கள் மறைந்துவிட்டிருந்தனர். எஞ்சியவர்களுக்கு மிக மங்கலான நினைவுகளே இருந்தன. ஆங்கிலேய, ஆஸ்திரேலிய போர்க்கைதிகளின் நினைவுப்பதிவுகளும் பிற ஆவணங்களுமே இன்று தமிழர்களின் அழிவை பதிவுசெய்வதற்கும் வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன. <br />
[[File:Railroad of Death2.jpg|thumb|''Railroad of Death'']]<br />
== போர்க்குற்ற விசாரணைகள் ==<br />
சயாம் - பர்மா ரயில்பாதை கட்டுமானத்தை ஒரு போர்க்குற்றமாக சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட உலக நாடுகள் அறிவித்தன. ஜப்பான் மீது வழக்கு தொடரப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் 111 ஜப்பானிய இராணுவ அதிகாரிகள் இரயில் கட்டுமானத்தின்போது கொடூரமான முறையில் நடந்துகொண்டதற்காக போர்க்குற்றம் அடிப்படையில் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 32 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த பர்மா - சயாம் ரயில் கட்டுமானத்தின் முதன்மை தளபதிகளில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் [[எகுமா இஷிடா]]வுக்கு (Lieutenant General Eiguma Ishida) விசாரணைக்குப்பின் குற்றம் நிரூபிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவரது துணை அதிகாரிகள் கர்னல் ஷெய்கோ நகுமுரா( Shigeo Nakamura) கர்னல் டாம்மி இஷி (Tamie Ishii) லெப்-கர்னல் ஷோய்ச்சி யானகிட்டா ( Shoichi Yanagita) ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. <br />
<br />
பர்மா ரயில் கட்டுமானத்தின் தலைமைக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்த முதல் லெஃடினென்ட் [[ஹிரோஷி ஆபே]] ''(Hiroshi Abe)'' என்பவர் சொன்குராய் என்னுமிடத்தில் இருந்த முகாமில் காலரா பரவி 1600 பிரிட்டிஷ் ராணுவ வீரர்களில் 600 பேர் இறந்த குற்றத்திற்கு பொறுப்பாக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றம் கண்டது. மேஜர் சோட்டோமொட்சு சிடா( Sotomatsu Chida) பத்தாண்டுக்காலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். <br />
<br />
பொதுவாக இந்த குற்றவிசாரணைகளில் அமெரிக்க, பிரிட்டிஷ்ப் போர்க்கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்டதே பெரும்பாலும் விசாரிக்கப்பட்டது. அதற்குத்தான் விரிவான சாட்சியங்களும் ஆவணங்களும் இருந்தன. ஆசிய தொழிலாளர்களின் சாவு பெரும்பாலும் கருத்தில் கொள்ளப்படவில்லை. அது போர்க்குற்ற வளையத்துக்குள் வரவில்லை. பாதிக்கப்பட்ட தென்கிழக்காசிய ஊழியர்களுக்கு இழப்பீடு என எதுவும் வழங்கப்படவில்லை. <br />
== குறிப்பிடத்தக்க கட்டுமானங்கள் ==<br />
[[File:Door bombardementen van geallieerden vernielde ijzeren spoorbrug van de Birma-Siamspoorweg bij Tamarkan in Siam, KITLV 25514.tiff.jpg|thumb|குண்டு வீச்சில் தகர்க்கப்பட்ட பாலம்]]<br />
* குவே யாய் பாலம் - குவாய் ஆற்றின் மீது கட்டப்பட்ட ரயில் பாலம் (322 மீட்டர்)<br />
<br />
* வாங் ஃபோ வையாடக்ட் - இது குவே நொய் ஆற்றின் குறுக்கே உள்ள குன்றினைப் பின்தொடரும் மரத்தாலான ரயில் பாலம் (400 மீட்டர்)<br />
* சோங்குறை பாலம் - சோங்கலியா ஆற்றின் மீது கட்டப்பட்ட மரப்பாலம் மற்றும் இரயில் பாதை (90 மீட்டர்)<br />
== கல்லறைகள் ==<br />
[[File:அருங்காட்சியகம்.jpg|thumb|அருங்காட்சியகம்]]<br />
[[File:சயாம் மரண ரயில் .jpg|thumb|சயாம் மரண ரயில் ]]<br />
1946ல் போர்க்கைதிகளின் முகாம்களில் இருந்த இறந்தவர்கள் அடையாள எச்சங்கள், புதைக்கப்பட்டிருந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அதிகாரப்பூர்வ போர் கல்லரைக்கு மாற்றப்பட்டன. 415 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயில் பாதைத் தொடர் நெடுகிலும் பல இடுகாடுகள் இருந்தன. அந்த இடுகாடுகள் மூன்று நிலையான இடுகாடுகளாக சீர்செய்யப்பட்டு போர்க்கைதிகளின் உடல்கள் மறுஅடக்கம் செய்யப்பட்டன. அவற்றுள் 668 அமெரிக்க வீரர்களின் உடல்கள் அமெரிக்காவிற்கே எடுத்துச் செல்லப்பட்டன.<br />
காஞ்சனாபுரியில் பிரதான கல்லறை (''Kanchanaburi War Cemetery'') இருக்கிறது. இங்கு பிரிட்டிஷ், ஆஸ்திரேலிய, டச்சு போர் கைதிகளின் கல்லறைகள் 6,982 உள்ளன. இவற்றில் 6858 கல்லறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 3,585 பிரிட்டிஷ் கைதிகளும் 1,896 டச்சு கைதிகளும் 1,362 ஆஸ்திரேலிய கைதிகளும் இங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானியப் படையணியில் பணிபுரிந்த 11 இந்தியப் போர்வீரர்களும் அருகிலுள்ள இஸ்லாமிய கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.<br />
<br />
காஞ்சனாபுரிக்கு அருகில் சூங் காய் எனும் இடத்தில் மற்றொரு கல்லறை (''Chungkai War Cemetery'') இருக்கிறது. இதில் 1,693 போர் கல்லறைகள் உள்ளன. 1373 பிரிட்டிஷ், 314 டச்சு, 6 இந்திய இராணுவம் என அவை அடையாளம் காணப்பட்டுள்ளன. <br />
<br />
மியான்மாரின் தான்பியுசாயாட் ''(Thanbyuzayat)'' எனும் நகரில் போர்க்கைதிகளின் கல்லறை இருக்கிறது. இந்த மூன்று கல்லறைகளையும் (''Commonwealth War Graves Commission'') பொதுநலவாய போர்க் கல்லறைகளின் ஆணையம் பராமரித்து வருகின்றது.<br />
== அருங்காட்சியகங்கள் ==<br />
ஏராளமான நினைவகங்களும் அருங்காட்சியகங்களும் இந்த ரயில்பாதையில் இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஏராளமானவர்கள் மறைந்த மிக அதிகமான உயிரிழப்பு நிகழ்ந்த ஹெல்பாஸ் கணவாயில் அவற்றில் மிகப்பெரிய அருங்காட்சியகம் உள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களுக்கான அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. மியான்மார் பக்கம் தன்ப்யுசாயாட் (Thanbyuzayat) ஊரில் ஓர் அருங்காட்சியகம் உள்ளது. தாய்லாந்தில் காஞ்சனபுரியில் மேலும் இரண்டு அருங்காட்சியகங்கள் உள்ளன. தாய்லாந்து- பர்மா ரயில் மையம் (Thailand–Burma Railway Centre) சென்ற ஜனவரி 2003-ல் ஓர் அருங்காட்சியகத்தை திறந்து (JEATH War Museum) . குவாய் பாலத்தில் ஓர் நினைவு அறிவிப்பு உள்ளது. அங்கே ஓடிய ரயில்பெட்டி பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாதிலும் ஓர் நினைவகம் உள்ளது. (National Memorial Arboretum ,England.)<br />
<br />
ஆனால் அந்த ரயில்பாதையில் மறைந்த கிட்டத்தட்ட 60000 தமிழ் மக்களுக்காக தனியான நினைவகமோ, அருங்காட்சியகமோ எங்குமில்லை. அவர்களின் நினைவுகள் முறையாக தொகுக்கப்படவோ, நினைவுச்சின்னங்கள் சேகரிக்கப்படவோ இல்லை. <br />
== தமிழ் இலக்கியப் பதிவுகள் ==<br />
[[File:ஆஷ்லி ஜார்ஜ் ஓவியம். 2.jpg|thumb|ஆஷ்லி ஜார்ஜ் ஓவியம்]]<br />
சயாம் மரணரயிலில் மறைந்த தமிழர்கள் பற்றிய செய்திகள் தமிழகத்தை வந்தடையவில்லை. போர்க்காலத்தில் மலேசியா- சிங்கப்பூரில் இருந்த [[ப.சிங்காரம்]] அவர் எழுதிய [[புயலிலே ஒரு தோணி]], [[கடலுக்கு அப்பால்]] ஆகிய நாவல்களில் அக்கொடுமைகளை பதிவுசெய்யவில்லை என்பதுடன், ஜப்பானியர்களின் பக்கமிருந்தே வரலாற்றை பதிவுசெய்தார். போர்ச்சூழலை வைத்து [[இருபது வருஷங்கள்]] என்னும் நாவலை எழுதிய [[எம்.எஸ்.கல்யாணசுந்தரம்]] சயாம் மரணரயில் பற்றி அறிந்திருக்கவில்லை. <br />
<br />
சயாம் மரணரயிலில் மறைந்த தமிழர்கள் நெடுங்காலம் முழுமையாகவே மறக்கப்பட்டனர். 1993-ல் தான் மலேசியாவில் எழுதப்பட்ட சயாம் மரணரயில் என்னும் நாவல் அக்கொடுமைகளை தமிழ் இலக்கியச் சூழலுக்கு அறிமுகம் செய்தது. அதுவும் தீவிர இலக்கியம் வாசிக்கும் சிறுவட்டத்திற்குள். அந்நாவல் சயாம் மரணரயில் கொடுமைகளை அதன் தீவிரத்துடன் அறிமுகம் செய்யவில்லை. ஆகவே போதிய கவனம் கிடைக்கவில்லை. அந்நாவலுக்கு எங்கும் மதிப்புரைகூட எழுதப்படவில்லை. <br />
<br />
2000த்குப் பின் இணையம் அறிமுகமானபோதுதான் சயாம் மரணரயில் பற்றிய செய்தி பரவலாக அறிமுகமாகியது. இன்னமும் தமிழ்ப் பொதுவாசகர்களுக்கு அதைப்பற்றிய செய்திகள் சென்று சேரவில்லை. தமிழ்நாட்டு பொது ஊடகம் சார்ந்து 2022 வரை ஓர் ஆவணப்படம்கூட எடுக்கப்பட்டதில்லை. 2022 வரை பிரபல ஊடகங்களில் நேரில் சென்று பார்த்து ஓர் ஆவணக்கட்டுரை கூட எழுதப்பட்டதுமில்லை. தமிழ் சினிமாவில் எந்தப்பதிவும் 2022 வரை இல்லை. <br />
* மரவள்ளிக் கிழங்கு - சா. அ. அன்பானந்தன் - (குறுநாவல் - 1979)<br />
*[[சயாம் மரணரயில்|சயாம் மரண ரயில்]] - ஆர். சண்முகம் (நாவல் - 1993)<br />
* [[நினைவுச்சின்னம்]] - [[அ. ரெங்கசாமி]] (நாவல் - 2005)<br />
*[[கையறு]] - [[கோ. புண்ணியவான்]] (நாவல் - 2021)<br />
*ரயில் - இந்திரஜித் (குறுநாவல் - 2021)<br />
*சயாம்-பர்மா மரண இரயில் பாதை -சி.அருண்<br />
== ஆவணப்படம் ==<br />
நாடோடிகள் கலைக்குழு சார்பாக SIAM BURMA DEATH RAILWAY (Buried tears of asian labourers) என்னும் தலைப்பில் ஆங்கிலத்திலும் சயாம்-பர்மா மரணரயில் பாதை (எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை) என்ற தலைப்பில் தமிழிலும் ஆவணப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. (பார்க்க [[சயாம் மரணரயில் ஆவணப்படம்]] )<br />
== பிற்கால ஊடகப் பதிவுகள் ==<br />
* த பிரிட்ஜ் ஆன் ரிவர் குவாய் (''The Bridge on the River Kwai'' ) டேவிட் லீன் இயக்கத்தில் 1954ல் வெளிவந்த திரைப்படம். சயாம் ரயில்பாதையில் பணியாற்றிய பிரிட்டிஷ் போர்க்கைதிகள் பற்றிய பதிவு. <br />
*ஏர்னஸ்ட் கோர்டான் எழுதிய Through the Valley of the Kwai என்னும் நாவலை அடியொற்றி End All Wars என்னும் திரைப்படம் 2001ல் வெளியானது. <br />
* த ரெயில்வே மேன் (''The Railway Man'' ) 2013ல் ஜொனாதன் டெப்லிஸ்கி இயக்கிய படம். சயாம் மரணரயில் பாதையை பின்புலமாகக் கொண்டது <br />
== உசாத்துணை ==<br />
* சயாம் பர்மா மரண இரயில்பாதை - சீ. அருண் (ஆய்வுநூல் - 2008)<br />
* [http://vallinam.com.my/navin/?p=4538 சயாம் மரணரயில், இரு நாவல்கள் ம.நவீன்]<br />
* [https://yarl.com/forum3/topic/100264-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/ சயாம் மரணரயில், தமிழர்களின் வரலாறு]<br />
* [https://www.newssensetn.com/world-news/more-than-60000-tamils-killed-in-siam-burma-railway-work <bdi>பர்மா - சயாம் மரண ரயில் பாதை : கொத்து கொத்தாக இறந்த தமிழர்கள் - ஒரு ரத்த சரித்திரம்</bdi>]<br />
* [https://vimarisanam.com/2016/09/01/106000-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-60000-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/ 106,000 உயிர்களை (இதில் 60,000 தமிழர்கள்) பலி கொண்ட மரண ரயில் பாதை ….!!!]<br />
*[https://www.jeyamohan.in/68380/ சயாம் மரணரயில் ஆவணப்படம் ஜெயமோகன்]<br />
*[https://www.imdb.com/title/tt3883834/ சயாம் மரணரயில் ஆவணப்பட முன்னோட்டம்]<br />
*[https://www.jeyamohan.in/1196/ வரலாற்றின் வண்டலில் ஜெயமோகன்]<br />
*[https://web.archive.org/web/20100922103915/http://anzacday.org.au/history/ww2/anecdotes/deathrailway.html சயாம் மரணரயில் புகைப்படங்கள் ஆஸ்திரேலிய ஆவணக்காப்பகம்]<br />
*https://mosaicscience.com/story/far-east-prisoners-of-war/<br />
*https://web.archive.org/web/20120118163648/http://www.hellfirepass.com/historical_facts_hellfire_pass.html<br />
*https://www.freemalaysiatoday.com/category/nation/2016/07/09/stories-of-death-railway-heroes-to-be-kept-alive/<br />
*https://kajomag.com/the-forgotten-malayan-labourers-of-burma-railway-during-wwii/<br />
*https://web.archive.org/web/20160527140349/http://www.myonlinetour.com/thailand/TheBridgeOverTheRiverKwae/index.htm<br />
*https://www.canveyisland.org/people-2/3-heroes/ashley_george_old-2/ashley_george_old<br />
*https://www.pbs.org/wnet/secrets/the-bridges-of-the-thailand-burma-railway/178/<br />
*Gamba, C. ''The National Union of Plantation workers''<br />
*Boggett, David. "Notes on the Thai-Burma Railway. Part II: Asian Romusha: The Silenced Voices of History" (PDF).<br />
*https://www.singaporewarcrimestrials.com/case-summaries/detail/084<br />
*https://www.generals.dk/general/Ishida/Eiguma/Japan.html<br />
*இஷிடா விசாரணை செய்திகள். https://www.awm.gov.au/collection/C1254708<br />
*https://www.theprisonerlist.com/the-film.html<br />
*https://www.cofepow.org.uk/memories/taylor-frederick-noel<br />
*[http://www.mansell.com/pow_resources/camplists/death_rr/dutch_view_death_railway.html The Death Railway A Dutch viewpoint]<br />
*[https://digitalcommons.macalester.edu/cgi/viewcontent.cgi?referer=&httpsredr=1&article=1003&context=thdabooks Sears Eldredge (2014). ''The Thailand-Burma Railway: An Overview'']<br />
*https://www.far-eastern-heroes.org.uk/harrys_war/html/thailand_to_burma_railway.htm<br />
*https://www.uspowtbr.com/17g-hintok/<br />
*[https://www.thestar.com.my/lifestyle/living/2020/08/05/sikhs-working-on-the-death-railway-blood-toil-tears-and-sweat#:~:text=The%20Death%20Railway%20line%20from%20Ban%20Pong%20in,50%2C000%20Allied%20PoW%20were%20taken%20as%20slave%20labourers. Sikhs working on the Death Railway: Blood, toil, tears and sweat]<br />
*<br />
*<br />
== இணைப்புகள் ==<br />
*https://digitalcommons.macalester.edu/captiveaudiences/<br />
*https://web.archive.org/web/20090704143550/http://dl.screenaustralia.gov.au/module/299/<br />
*https://www.pows-of-japan.net/<br />
*[https://www.cwgc.org/visit-us/find-cemeteries-memorials/cemetery-details/2017100/kanchanaburi-war-cemetery/ காஞ்சனபுரி போர் நினைவகம்]<br />
*[https://www.cwgc.org/visit-us/find-cemeteries-memorials/cemetery-details/2035000/chungkai-war-cemetery/ சுங்கய் போர் நினைவகம்]<br />
== குறிப்பிடத்தக்க நூல்கள் ==<br />
* Beattie, Rod (2007). The Thai-Burma Railway. Thailand-Burma Railway Centre.<br />
* Last Man Out: Surviving the Burma-Thailand Death Railway: A Memoir<br />
* Blair, Clay, Jr.; Joan Blair (1979). Return from the River Kwa இணையநூலகம்<br />
* Boulle, Pierre (1954). Bridge on the River Kwai. London: Secker & Warburg<br />
*''Blair, Clay, Jr.; Joan Blair (1979). Return from the River Kwai. New York: Simon & Schuster. <nowiki>ISBN 9780671242787</nowiki>.''<br />
* ''Boulle, Pierre (1954). Bridge on the River Kwai. London: Secker & Warburg.''<br />
* ''Bradden, Russell (2001) [1951]. The Naked Island. Edinburgh: Birlinn.''<br />
* ''Bradley, James (1982). Towards The Setting Sun: An escape from the Thailand-Burma Railway, 1943. London and Chichester: Phillimore & Co. Ltd. <nowiki>ISBN 0-85033-467-5</nowiki>.''<br />
* ''Charles, H. Robert (2006). Last Man Out: Surviving the Burma-Thailand Death Railway: A Memoir. Minneapolis, MN: Zenith Press. <nowiki>ISBN 978-0760328200</nowiki>.''<br />
* ''Coast, John; Noszlopy, Laura; Nash, Justin (2014). Railroad of Death: The Original, Classic Account of the 'River Kwai' Railway. Newcastle: Myrmidon. <nowiki>ISBN 9781905802937</nowiki>.''<br />
* ''Commonwealth War Graves Commission (2000). The Burma-Siam Railway and its Cemeteries. England: Information sheet.''<br />
* ''Davies, Peter N. (1991). The Man Behind the Bridge: Colonel Toosey and the River Kwai. London: Athlone Press.''<br />
* ''Daws, Gavan (1994). Prisoners of the Japanese: POWs of World War II in the Pacific. New York: William Morrow & Co.''<br />
* ''Dunlop, E. E. (1986). The War Diaries of Weary Dunlop: Java and the Burma-Thailand Railway. Ringwood, Victoria, Aus: Penguin Books.''<br />
* ''Eldredge, Sears (2010). Captive Audiences/Captive Performers: Music and Theatre as Strategies for Survival on the Thailand-Burma Railway 1942–1945. Saint Paul, Minnesota, USA: Macalester College.''<br />
* ''Flanagan, Martin; Arch Flanagan (2005). The Line: A Man's Experience of the Burma Railway; A Son's Quest to Understand. Melbourne: One Day Hill. <nowiki>ISBN 9780975770818</nowiki>.''<br />
* ''Flanagan, Richard (2013). The Narrow Road to the Deep North. North Sydney, N.S.W.: Random House Australia. <nowiki>ISBN 9781741666700</nowiki>.''<br />
* ''Gordon, Ernest (1962). Through the Valley of the Kwai: From Death-Camp Despair to Spiritual Triumph. New York: Harper & Bros.''<br />
* ''Gordon, Ernest (2002). To End all Wars. HarperCollins. <nowiki>ISBN 0-00-711848-1</nowiki>.''<br />
* ''Hardie, Robert (1983). The Burma-Siam Railway: The Secret Diary of Dr. Robert Hardie, 1942–1945. London: Imperial War Museum.''<br />
* ''Harrison, Kenneth (1982). The Brave Japanese (Original title, The Road To Hiroshima, 1966). Guy Harrison. B003LSTW3O.''<br />
* ''Henderson, W. (1991). From China Burma India to the Kwai. Waco, Texas, USA: Texian Press.''<br />
* ''Hornfischer, James D. (2006). Ship of Ghosts. New York: Bantam. <nowiki>ISBN 978-0-553-38450-5</nowiki>.''<br />
* ''Kandler, Richard (2010). The Prisoner List: A true story of defeat, captivity and salvation in the Far East 1941–45. London: Marsworth Publishing. <nowiki>ISBN 978-0-9564881-0-7</nowiki>.''<br />
* ''Kinvig, Clifford (1992). River Kwai Railway: The Story of the Burma-Siam Railway. London: Brassey's. <nowiki>ISBN 0-08-037344-5</nowiki>.''<br />
* ''La Forte, Robert S. (1993). Building the Death Railway: The Ordeal of American POWs in Burma. Wilmington, Delaware, USA: SR Books.''<br />
* ''La Forte, Robert S.; et al., eds. (1994). With Only the Will to Live: Accounts of Americans in Japanese Prison Camps 1941–1945. Wilmington, Delaware: Scholarly Resources.''<br />
* ''Latimer, Jon (2004). Burma: The Forgotten War. London: John Murray.''<br />
* ''Lomax, Eric (1995). The Railway Man: A POW's Searing Account of War, Brutality and Forgiveness. New York: W. W. Norton. <nowiki>ISBN 0-393-03910-2</nowiki>.''<br />
* ''MacArthur, Brian (2005). Surviving the Sword: Prisoners of the Japanese in the Far East, 1942–1945. New York: Random House. <nowiki>ISBN 9781400064137</nowiki>.''<br />
* ''McLaggan, Douglas (1995). The Will to Survive, A Private's View as a POW. NSW, Australia: Kangaroo Press.''<br />
* ''Peek, Ian Denys (2003). One Fourteenth of an Elephant. Macmillan. <nowiki>ISBN 0-7329-1168-0</nowiki>.''<br />
* ''Rees, Laurence (2001). Horror in the East: Japan and the Atrocities of World War II. Boston: Da Capo Press.''<br />
* ''Reminick, Gerald (2002). Death's Railway: A Merchant Mariner on the River Kwai. Palo Alto, CA, USA: Glencannon Press.''<br />
* ''Reynolds, E. Bruce (2005). Thailand's Secret War: The Free Thai, OSS, and SOE During World War II. New York: Cambridge University Press.''<br />
* ''Richards, Rowley; Marcia McEwan (1989). The Survival Factor. Sydney: Kangaroo Press. <nowiki>ISBN 0-86417-246-X</nowiki>.''<br />
* ''Rivett, Rohan D. (1946). Behind Bamboo. Sydney: Angus & Robertson (later Penguin, 1992). <nowiki>ISBN 0-14-014925-2</nowiki>.''<br />
* ''Searle, Ronald (1986). To the Kwai and Back: War Drawings. New York: Atlantic Monthly Press.''<br />
* ''Teel, Horace G. (1978). Our Days Were Years: History of the "Lost Battalion," 2nd Battalion, 36th Division. Quanah, TX, USA: Nortex Press.''<br />
* ''Thompson, Kyle (1994). A Thousand Cups of Rice: Surviving the Death Railway. Austin, TX, USA: Eakin Press.''<br />
* ''Urquhart, Alistair (2010). The Forgotten Highlander – My incredible story of survival during the war in the Far East. London, UK: Little, Brown. <nowiki>ISBN 9781408702116</nowiki>.''<br />
* ''Van der Molen, Evert (2012). Berichten van 612 aan het thuisfront – Zuidoost-Azië, 1940–1945 [Memoires of a Dutch POW who survived 15 camps on Java, in Thailand and in Japan] (in Dutch). Leiden, Netherlands: LUCAS. <nowiki>ISBN 978-90-819129-1-4</nowiki>.''<br />
* ''Velmans, Loet (2003). Long Way Back to the River Kwai: Memories of World War II. New York: Arcade Publishing.''<br />
* ''Waterford, Van (1994). Prisoners of the Japanese in World War II. Jefferson, NC: McFarland & Co. Inc, Publishers.''<br />
* ''webster, Donovan (2003). The Burma Road: The Epic Story of the China-Burma-India Theater in World War II. New York: Straus & Giroux.''<br />
* ''Wigmore, Lionel (1957). The Japanese Thrust – Australia in the War of 1939–1945. Canberra: Australian War Memorial.''<br />
{{finalised}}<br />
[[Category:Tamil Content]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D)&diff=42888குமரகுருபரன் (கவிஞர்)2022-06-06T16:11:06Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>[[File:Image8.png|thumb|379x379px|குமரகுருபரன் (1973 - 2016) ]]<br />
குமரகுருபரன் (ஜூன் 10, 1973 - ஜூன் 19, 2016) கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர், பத்திரிகையாளர், கால்நடை மருத்துவர். <br />
== பிறப்பு, கல்வி ==<br />
குமரகுருபரன் திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடநாதபுரம் கிராமத்தில் ஜூன் 10, 1973-ல் பிறந்தார். தந்தை ஜெயராமன், உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர். தாய் குருப்ரசாதவல்லி, இடைநிலைப்பள்ளி தலைமையாசிரியர். பெற்றோர்கள் தமிழ்ப்பற்று காரணமாக குமரகுருபரன் என பெயரிட்டனர். ராஜபாளையம் அன்னப்பா ராஜா மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சிறிது காலம் பயின்ற குமரகுருபரன் பின் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை கால்நடை மருத்துவம் படித்தார். விவாகரத்தானவர். <br />
== இலக்கிய வாழ்க்கை ==<br />
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் அந்திமழை இளங்கோவன் தொடங்கிய கையெழுத்து பத்திரிகையான ‘அந்திமழை’ குமரகுருபரனுக்கு இலக்கிய வாசலைத் திறந்துவிட்டது. கல்லூரியின் ’அந்திமழை’ மாணவர் இதழின் ஆசிரியராக இருந்தவர். அதற்காக ஆனந்த விகடனின் 'சிறந்த கல்லூரி இதழ்' களுக்கான போட்டியில் சிறந்த மாணவ ஆசிரியர் விருதைப் பெற்றவர். இந்த இதழ்தான் இப்போது ‘அந்திமழை’ என்ற மாதாந்திர இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. குமரகுருபரனின் முதல் கவிதை கணையாழியில் வெளியானது. <br />
<br />
பட்டப்படிப்பு முடிந்ததும் முழு நேர பத்திரிகையாளரானார். குமுதம் உதவி ஆசிரியராகவும், குமுதம் ஸ்பெஷல் புத்தகத்தின் ஆசிரியராகவும் பணிபுரியும்போது பல கட்டுரைககள், தொடர்களை எழுதியுள்ளார். "பயணிகள் கவனிக்கவும்" தொடரும், தமிழ்த் திரை உலகில் மாற்றங்களைக் கொண்டுவந்த இயக்குநர்களைப் பற்றிய ‘ஸ்கேன்’ தொடரும் குமுதத்தில் வெளியாகி கவனம் பெற்றவை. விண் நாயகன் பத்திரிகையின் துணை ஆசிரியராக பொறுப்பு வகித்தார். பின்னர் தினமலரின் வாரமலர், சிறுவர் மலர், பெண்கள் மலர் உள்ளிட்ட எட்டு இணைப்பு புத்தகங்களுக்கு ஆசிரியாக பணியாற்றினார். தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சிகள் தயாரித்து அளிக்கும் Media 4 U நிறுவனத்தை நடத்திவந்தார். பிறகு எல்லாவற்றிலும் இருந்து வெளியேறி முழுநேர எழுத்தாளரானார்.<br />
[[File:Image9.png|thumb]]<br />
== இலக்கிய அழகியல் ==<br />
செறிவான கவிமொழியையும், இயற்கையான சொற்சேர்க்கைகளுடன் கூடிய புதிய சொல்லாட்சிகளையும் கொண்டவை குமரகுருபரனின் கவிதைகள். ‘மீறல்களின் கனவு’என ’இன்னொருவனின் கனவு’ புத்தகத்திற்கு ஜெயமோகன் எழுதியிருக்கும் அணிந்துரையில் மீண்டும் மீண்டும் மீறல்களைச்சார்ந்து பொதுச்சினிமா சென்றுகொண்டிருப்பதற்கான ஆவணமாகவே அமைந்திருக்கும் நூல் இது என குறிப்பிடுகிறார்<ref>[https://www.jeyamohan.in/44681/ மீறல்களின் கனவு | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]</ref>. <br />
<br />
குமரகுருபரனை தான் ஒரு கவிஞராகக் கருதுமளவுக்கு அவர் கவிதைகள் இடம் தருபவை அல்ல லக்ஷ்மி மணிவண்ணன் (கவிஞர்) கூறியிருக்கிறார். ஆனால், குமரகுருபனின் கவிதைகள் நவீனத்தமிழில் அபூர்வமாக மொழியால் கலைக்கப்பட்ட சித்தம் கவிதையாகி வெளிவருவது போன்றது என்றும். பிரமிள், தேவதேவன், ஆத்மாநாம், அபி, சு.வில்வரத்தினம் போன்ற சில விதிவிலக்குகளின் ஆக்கங்களின் சிறிய பட்டியலில் இடம்பெறும் கவிதைகளைக் கொண்டது குமரகுருபரனின் ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’ கவிதை நூல் என்றும் ஜெயமோகன் கூறுகிறார்<ref>[https://www.jeyamohan.in/62687/ வலியிலிருந்து தப்ப முடியாத தீவு | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]</ref>.<br />
[[File:Image10.png|thumb|202x202px]]<br />
== விருதுகள் ==<br />
* கனடா, தமிழ் இலக்கியத் தோட்டம் (பேராசிரியர் மயில்வாகனன் நினைவாக) வழங்கும் சிறந்த கவிதை நூலுக்கான விருது - 2015. ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ என்ற கவிதைத் தொகுப்புக்கு அளிக்கப்பட்டது.<br />
* 'ஞானம் நுரைக்கும் போத்தல்' (2015) புத்தகத்திற்கு சிறந்த முதல் கவிதைத் தொகுப்புக்கான நாகர்கோயில் நெய்தல் அமைப்பின் ராஜமார்த்தாண்டன் விருது - 2015 (குமரகுருபரன் இதனை வாங்க மறுத்து விட்டார்).<br />
== குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது ==<br />
குமரகுருபரனின் மறைவுக்குப்பின் உருவாக்கப்பட்ட விருது குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது. இளம் கவிஞர்களுக்குரிய விருதாக 2017-ல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மற்றும் கவிதா சொர்ணவல்லி ஆகியோரால் தொடங்கப்பட்டது. பரிசுத்தொகை 50 ஆயிரம் ரூபாய். முதல் விருது 2017-ல் கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்பட்டது. பின்னர் கண்டராதித்தன் (2018), ச.துரை (2019), வேணு வேட்ராயன் (2020), மதார் (2021) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.[[File:Image11.png|thumb|252x252px]]<br />
== மறைவு ==<br />
குமரகுருபரன் ஜூன் 19, 2016-ல் தனது 43-வது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார்.<br />
== நூல்பட்டியல் ==<br />
===== கவிதை நூல்கள் =====<br />
* ஞானம் நுரைக்கும் போத்தல் (2014 - ஆதிரை பதிப்பகம்)<br />
* மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது (2015 - உயிர்மை பதிப்பகம்)<br />
===== கட்டுரைத்தொகுப்பு =====<br />
* இன்னொருவனின் கனவு (உலக சினிமாக்கள் பற்றிய தொகுப்பு. 2014, அந்திமழை வெளியீடு)<br />
* பயணிகள் கவனிக்கவும் (பயணக் கட்டுரை. 2015, குமுதம் வெளியீடு)<br />
[[File:Image12.png|thumb|198x198px]]<br />
===== சிறுகதைகள் =====<br />
* பேரரசரின் கோபம் (2014)<br />
* மூன்று பெக்குகளும் நான்கு இட்லிகளும் (2014)<br />
== உசாத்துணை ==<br />
* [https://www.facebook.com/jkbpoetry குமரகுருபரன் கவிதைகள்] <br />
* [https://kumaraasambavam-kumaragurubaran.blogspot.com/?view=timeslide குமாரசம்பவம் - குமரகுருபரன் வலைப்பூ] <br />
== குறிப்புகள் ==<br />
<references /><br />
{{finalised}}<br />
[[Category:Tamil Content]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&diff=40171திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம்2022-05-26T16:54:19Z<p>Thangapandiyan: /* கிருஷ்ணன் கோவில் */</p>
<hr />
<div>[[File:ஆலய முகப்பு.jpg|thumb|திருநந்திக்கரை ஆலய முகப்பு|400x400px]]<br />
கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை என்னும் ஊரில் உள்ள சிவ ஆலயம். மூலவர் பெயர் நந்திகேஸ்வரர். [[சிவாலய ஓட்டம்]] நிகழும் பன்னிரண்டு ஆலயங்களில் மூன்றாவது ஆலயம் ஆகும்.<br />
== இடம் ==<br />
கன்னியாகுமரி வட்டம், திருவட்டாறு பஞ்சாயத்து யூனியனில் உள்ளது திருநந்திக்கரை. நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் மார்த்தாண்டத்திலிருந்து குலசேகரம் நோக்கி பிரியும் சாலையில் 14 கி. மீ. தூரத்தில் உள்ளது. மலையிலிருந்து ஒழுகி வரும் நந்தியாறு என்ற பெயருள்ள சிறிய ஓடை கோயில் முன் ஓடுகிறது. கோவிலை அடுத்து குடைவரைக் கோவிலுடன் கூடிய உளுத்துப்பாறை என்னும் பெரிய பாறை உள்ளது. (பார்க்க [[திருநந்திக்கரை குகைக்கோவில்|திருநந்திக்கரை குகைக்கோவில்)]]<br />
[[File:தோரண வாயில்.jpg|thumb|தோரண வாயில், குலசேகரம் சாலை|400x400px]]<br />
== பெயர் ==<br />
பண்டைய திருவிதாங்கூர் வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி நந்தி என்னும் சமண துறவியின் பெயரால் திருநந்திக்கரை என்று அழைக்கபடுகிறது. தென்திருவிதாங்கூரின் சமணத் தலமாக முன்பு திருநந்திக்கரை இருந்துள்ளது. சிவனின் வாகனமான நந்தியுடன் பின்னர் ஊர்ப்பெயர் இணைக்கப்பட்டது.<br />
== மூலவர் ==<br />
திருநந்திக்கரை ஆலயத்தில் மூலவர் நந்திகேஸ்வரர் ஆவுடையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 30 செ.மீ. உயர லிங்க வடிவில் உள்ளார்.<br />
== தொன்மம் ==<br />
திருநந்திக்கரை ஆலயம் குறித்த தொன்மங்கள் வாய்மொழிக் கதைகளாகவே உள்ளன.<br />
[[File:குடைவரை கோவில்.jpg|thumb|குடைவரை கோவில்|400x400px]]<br />
====== தலபுராணம் ======<br />
உளுத்துப்பாறையின் அடிவாரம் முன்பு ஏரியாக இருந்துள்ளது. பாறையிலுள்ள குடைவரைக் கோவிலுக்கு ஏரிக்கரை வழியாகத் தான் செல்ல வேண்டும். ஊர் தலைவர் குடைவரை கோவில் சிவலிங்கம் ஏரியில் மிதப்பதாக கனவு கண்டார். மறுநாள் பூசகர் ஏரியில் சுயம்பு சிவலிங்கம் ஒன்றைக் கண்டார். பின்னர் அரசரின் உதவியால் கோவில் கட்டப்பட்டது.<br />
====== நந்தியின் கதை ======<br />
ஊருக்குள் வந்து தொல்லை தந்த நந்தியை ஊர்மக்கள் வேண்டுதலை ஏற்று சிவன் சாதுவாக்கி கோவிலில் அமர்த்திக்கொண்டார். சிவனை தரிசனம் செய்ய அளவில் பெரிய நந்தி இடையூறாக இருந்தது. பூசகர் கனவில் தோன்றிய சிவன் சொன்னபடி நந்தி குழிக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.<br />
ஊருக்குள் தொல்லை தந்த நந்தியை பிடிக்க வீசப்பட்ட கயிறு உளுத்து பாறையில் சென்று விழுந்தது. அதன் தடம் இப்போதும் பாறையில் நீண்ட வரியாக தெரிகிறது என்ற கதையும் உண்டு.<br />
====== பரசுராமன் கதை ======<br />
பரசுராமன் தாயைக் கொன்ற பாவம் போக்க இங்கு வந்து தங்கி தவம் புரிந்து பாவம் தீர்த்தான் என்னும் கதை இங்கு உள்ளது. கோவிலில் உள்ள சாஸ்தா சிற்பம் ஒன்றை பரசுராமராக வணங்குகிறார்கள்.<br />
====== கொட்டாரம் யட்சி கதை ======<br />
பத்மநாபபுரம் கொட்டாரத்தில்(அரண்மனை) இருந்த பிராமண உயரதிகாரி ஒருவர் இறந்து மனைவி உடன்கட்டை ஏறினாள். பின் அவள் யட்சியாகி கணவன் மரணத்துக்கு காரணமானவர்களை துன்புறுத்தினாள். நம்பூதிரி ஒருவர் யட்சியை கோவிலில் சங்கல்பித்து அடக்கினார். அவளது உருவமும் சுவரில் வரையப்பட்டது. அது யட்சியாக வழிபடப்படுகிறது <br />
== கோவில் அமைப்பு ==<br />
கோவில் வளாகம் உயர்ந்த கோட்டை மதில் சுவரினுள் உள்ளது. கிழக்குப் பிராகாரத்தில் சாஸ்தா கோவில், நம்பூதிரி மடம், கிருஷ்ணன் கோவில் ஆகியன உள்ளன.<br />
====== சாஸ்தா கோவில் ======<br />
முன்பு சாஸ்தா சிலை வெளியில் இருந்துள்ளது. மரக்கிளை ஒன்று சாஸ்தாவில் மேல் விழுந்து கை சேதமானது. பின்னர் கோவில் கட்டப்பட்டு உடைந்த கையுடன் சாஸ்தா பிரதிஷ்டை செய்யபட்டார்.<br />
====== கிருஷ்ணன் கோவில் ======<br />
மேடை மேல் இருக்கும் கிருஷ்ணன் கோவில் கல்லால் ஆனது. தென்புறம் சோபனப் படியும் இரண்டு தூண்கள் கொண்ட சிறு முகமண்டபமும் கருவறையும் உள்ளன. மூலவர் கிருஷ்ணன் நின்ற கோலத்தில் உள்ளார். கோவில் அமைப்புப்படி இக்கோவில் பொ.யு. 17 அல்லது 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தாக தெரிகிறது என்று [[அ.கா. பெருமாள்]] கூறுகிறார்.<br />
கோவிலின் வெளி வளாகத்தின் கிழக்கில் அரசமரத்தின் அடியில் நாகர், சிவன், கணபதி, சாஸ்தா ஆகிய சிற்பங்கள் ஒரு மேடையில் உள்ளன.<br />
[[File:ஆலய வளாகம்.jpg|thumb|ஆலய வளாகம்|400x400px]]<br />
====== முன்னரங்கு ======<br />
எட்டு கல் தூண்கள் கொண்ட ஓட்டு பாணியால் ஆன அரங்கில் பலிபீடமும் வாடாவிளக்கும் உள்ளன. தெற்கிலும் வடக்கிலும் வாசல்கள் உள்ளன. வேலைப்பாடுள்ள பலகணிகளும் உள்ளன.<br />
====== கிழக்குச் சுற்று மண்டபம் ======<br />
முன்னரங்கு தாண்டி எட்டு கல் தூண்கள் கொண்ட ஓட்டு பணியால் ஆன கிழக்குச் சுற்று மண்டபம் உள்ளது. நடுவே நடைப்பாதை உள்ளது. வடபுறம் ஈசானிய மூலையில் ஸ்ரீதிருமலையப்பன் கோவில் உள்ளது. மண்டபத் தூண்களில் சிற்பங்கள் உள்ளன.<br />
====== கிழக்கு சுற்று மண்டப சிற்பங்கள் ======<br />
* விளக்கேந்திய பாவை<br />
* அஞ்சலி ஹஸ்த அடியவர்<br />
* குறுவாளுடன் ஒர் சிற்பம்(இந்த மண்டபத்தை கட்டிய வேணாட்டு மன்னன் என்ற யூகம் உள்ளது)<br />
* வேல் கொண்டு புலியைக் குத்தி போர் செய்யும் வீரன்<br />
* பன்றியுடன் போர் செய்யும் வீரன்<br />
* குதிரை போல் பய்ந்து செல்லும் வீரன்<br />
* அர்ஜுனன் தபஸ்<br />
* யோகப் பட்டத்துடன் கூடிய சாஸ்தா<br />
* விநாயகர்<br />
* ரிஷபத்தின் மேல் மான் மழு<br />
* பார்வதியுடன் காட்சி தரும் ரிஷபாந்தகன்<br />
* போர் வீரன்(குதிரை மேல் அமர்ந்து தரையில் நிற்பவரிடம் போர் புரிகிறான்)<br />
====== ரிஷப மண்டபம் ======<br />
கிழக்கு சுற்று மண்டபம் மற்றும் கருவறைக்கு நடுவே 16 தூண்கள் கொண்ட நமஸ்கார மண்டபம் உள்ளது. இதில் ரிஷபம் இருப்பதால் ரிஷப மண்டபம் என்று அழைக்கபடுகிறது. மேற்கூரையில் பிரம்மாவும் சுற்றிலும் அஷ்டதிக் பாலகர்களும் உள்ளனர். மண்டபத்தின் நடுவில் கழுத்தில் கயிறும் மணியும் கொண்ட கருங்கல் நந்தி சிற்பம் உள்ளது. மண்டபத்தில் இருந்த மரச்சிற்பங்கள் இப்போது திருவனந்தபுரம் அருங்காட்சியகத்தில் உள்ளன.<br />
தெற்கு, மேற்கு, வடக்கு மூன்று புறமும் ஓட்டு பணியால் ஆன சுற்று மண்டபங்கள் உள்ளன.<br />
====== கருவறை ======<br />
வட்ட வடிவிலான கருவறை வாசலின் இருபுறமும் துவாரபாலகர்களின் கருங்கல் சிற்பங்கள் உள்ளன. சிற்பங்களின் ஒரு கை சூசிஹஸ்த முத்திரை காட்ட இன்னொன்று ஆயுதத்துடனும் உள்ளன. கருவறை சுவரில் போலிவாசல் எனப்படும் கந்தவார் உள்ளது. கூரை கூம்பு வடிவிலானது. தேக்கு மரப்பலைகையின் மேல் செப்பு தகடு வேயப்பட்டுள்ளது. வருடத்தின் வாரங்களை குறிப்பன என்று கருதப்படும் 52 கழிகோல்கள் கூரையில் உள்ளன. இது கேரள மரபாணியால் ஆனது.<br />
கோவிலின் பரிவார தெய்வங்களாக விநாயகர், ஸ்ரீ திருமலையப்பன், கிருஷ்ணன், தர்மசாஸ்தா, நாகயட்சி, கொட்டாரம் யட்சி ஆகியவை உள்ளன. குடைவரை கோவில் மற்றும் நந்திகேஸ்வரர் கோவில் இரண்டும் வேறுவேறு கோவில்கள். <br />
== ஒவியங்கள் ==<br />
ஒன்பது தூண்களை கொண்ட மேற்கு சுற்று மண்டபத்தின் மேற்கு சுவற்றில் கொட்டாரம் யட்சியின் தாவர சாயத்தால் ஆன வண்ண ஓவியம் உள்ளது. கைகள் கொடுவாளும் கூர்வாளும் ஏந்தி உள்ளன. விரிசடை, கோரைப்பல், குங்குமப் பொட்டு மற்றும் தலையில் கிரீடமும் உள்ளன.<br />
<br />
கருவறை சுவற்றின் மேல் தொங்கு கூரையின் கீழ் பிற்கால பாண்டிய கால பாணியிலான பூதாவாரிகளின் ஓவியங்கள் இருந்த அடையாளங்கள் தெரிகிறது.<br />
<br />
ஸ்ரீகோவிலை சுற்றிய சுவர்களில் விநாயகர், விஷ்ணு, சிவன், பரசுராமன், கிருஷ்ணன், சாஸ்தா ஆகிய தெய்வங்களின் தாவர சாய ஓவியங்கள் இருந்தன. பிற்காலக் கோவில் பராமரிப்பின் போது இதன் மேல் வண்ணங்கள் பூசப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.<br />
<br />
இந்த ஓவிய மிச்சங்களை கொண்டு [[அ.கா. பெருமாள்]] இவை திருவட்டாறு ஆதிகேசவன் ஆலய ஓவியங்களைப் போன்றவை என்றும் 18- ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றும் ஊகிக்கிறார்.<br />
== திருவிழா ==<br />
மாசி மாதம் மகாசிவராத்திரியின் முந்தய நாள் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி ஸ்ரீ பூதபலி, ஆறாட்டு, யானை ஊர்வலம் ஆகியவற்றுடன் பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. உற்சவவேட்டை அன்று ஆலய வாசல் திறக்கும் நிகழ்வு குறித்த பாடல் பாடப்படுகிறது. முன்பு நந்திமங்கலம் ஆற்றின் கரையில் நடந்து வந்த ஆறாட்டு, இப்போது ஆலயத்தின் வெளியில் உள்ள சுனையின் கரையில் நடக்கிறது.<br />
====== முத்தாரம்மன் கோவில் சடங்கு ======<br />
நந்தீஸ்வர் கோவிலுக்கும் பீடவிளை முத்தாரம்மன் கோவிலுக்கும் சடங்கு ரீதியான தொடர்பு உள்ளது. முன்னர் பீடவிளை முத்தாரம்மன் கோவிலில் விக்கிரகம் கிடையாது. அக்காலகட்டதில் ஊர் மக்கள் நந்திகேஸ்வரர் கோவில் விழா வழிபாடு குறித்துப் பேசியுள்ளனர். பின்னர் இது சடங்கு ரீதியாகித் தொடர்கிறது. ஆறாட்டு நாளில் முத்தாரம்மன் பூசகர் ஆறாடச் செல்லும் நந்திகேசனை தீபம் ஏற்றி நோக்குவது சடங்கு.<br />
====== நந்திகேசன் ஊர்வலம் ======<br />
நந்திகேசன் சூரியன்கோடு உளவடி மடத்தில் தொடங்கி, முக்கூற்றி சாஸ்தா காவு வழி சென்று வாயலோட்டு நம்பூதிரி மடத்தில் வழிபாடு ஏற்று நந்திமங்கலத்தில் நீராடி நெய்வேத்தியம் ஏற்று திரும்புவார்.<br />
மணலிக்கரை, நெல்வேலி மடத்தை சேர்ந்தவர்கள் இக்கோவிலில் [[தந்திரி]]களாக உள்ளனர்.<br />
== வரலாறு ==<br />
கல்வெட்டு ஒன்று குடைவரை கோவிலில் கிடைத்துள்ளது. இதில் குலசேகரதேவன் மகள் விஜயராகவதேவியான கிழான் அடிகள் திருநந்தா விளக்கு எரிக்க பொன் நிபந்தம் கொடுத்த செய்தி உள்ளது.<br />
<br />
முதல் பராந்தக சோழனின் திருவெற்றியூர் கல்வெட்டு கேரள அரசன் ஒருவனின் மகள் விஜயராகவதேவி கொடுத்த நிபந்தம் பற்றி கூறும். விஜயராகவதேவி என குறிப்பிடப்படும் இருவரும் ஒருவர் தான் என்பது திருவிதாங்கூர் தொல்லியலாளர்களின் முடிவு. இதனால் கல்வெட்டு பொ.யு. 10 -ஆம் நூற்றாண்டை சார்ந்தது என்று கொள்ளமுடியும்.<br />
<br />
மேலும் இக்கல்வெட்டில் கோவில் அதிகாரிகள் மற்றும் பிற உறுப்பினர்களும் மாடக்கோவிலில் கூடியதாக செய்தி உள்ளது. மாடக்கோவில் என்பது குடைவரை கோவில் அல்ல என்பதால் நந்திகேஸ்வரர் கோவில் இக்காலகட்டத்தில் மாடக்கோவிலாக இருந்துள்ளதாகக் கொள்ளலாம்.<br />
== உசாத்துணை ==<br />
*<br />
*புகைப்படங்கள் உதவி நன்றி https://shivantemple.blogspot.com/2019/07/4.html<br />
*சிவாலய ஓட்டம், முனைவர் அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2021.<br />
*தென்குமரி கோவில்கள், முனைவர் அ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், இரண்டாம் பதிப்பு 2018.<br />
*[https://490kdbtemples.org/about/kumari-shivalayam-ottam/ 490kdbtemples.org/about/kumari-shivalayam-ottam/]<br />
*[https://shaivam.org/hindu-hub/temples/place/484/thirunandhikkarai-nandhikeshwarar-temple Tirunandikkarai Nandikeswarar temple]<br />
*[https://www.google.com/maps/uv?pb=!1s0x3b04517aae10df69%3A0x3fd395fd74a26fc6!3m1!7e115!4shttps%3A%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipPYKl0TVOVi0suCUtQ9F2BmdRQNcbBu8q-sBbQ%3Dw86-h87-n-k-no!5sthirunanthikarai%20shiva%20temple%20-%20Google%20Search!15sCgIgAQ&imagekey=!1e10!2sAF1QipPYKl0TVOVi0suCUtQ9F2BmdRQNcbBu8q-sBbQ&hl=en திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம் படங்கள்]<br />
*[https://shivantemple.blogspot.com/2019/07/4.html திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம் படங்கள்]<br />
<br />
<br />
{{finalised}}<br />
[[Category:Tamil Content]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&diff=38685என். கே. ரகுநாதன்2022-05-19T14:42:04Z<p>Thangapandiyan: /* இலக்கியப்பணி */</p>
<hr />
<div>[[File:Image 05.png|thumb|287x287px|என்.கே.ரகுநாதன் (1929-2018). நன்றி - tamilauthors.com]]<br />
என். கே. ரகுநாதன் (ஜூலை 9, 1929 - ஜூன் 11, 2018) ஈழத்தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், நாடகம் எழுதியுள்ளார்.<br />
== பிறப்பு ==<br />
என். கே. ரகுநாதன் இலங்கையின் யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்திதுறைப் பகுதியிலுள்ள வராத்துப்பளை என்னும் கிராமத்தில் ஜூலை 9, 1929-ல் பிறந்தார். அம்மா வள்ளியம்மை.<br />
== தனிவாழ்க்கை ==<br />
என். கே. ரகுநாதன் காதல் திருமணம் செய்துகொண்டார் (மனைவி பெயர்....). பிள்ளைகள் திலீபன், தமயந்தி, சஞ்சயன், ஜெயதேவன் ஆகியோர் கனடா, லண்டன், ஜெர்மனியில் இருக்கிறார்கள். கடைசிப் பெண் ஜனனி இலங்கையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றிய ரகுநாதன் இலங்கை ஆசிரியர் சங்கம் எச். என். பெர்னாண்டோ தலைமையில் இயங்கிய காலப்பகுதியில் சங்கத்தின் வடபிரதேசக்கிளையில் அங்கம் வகித்தார். அப்போது தனது தோழர்களுடனும் அடிநிலை மக்களுடனும் இணைந்து ஆலயப்பிரவேசப் போராட்டங்களிலும் தேநீர்க்கடை பிரவேசப்போராட்டங்களிலும் ஈடுபட்டார். <br />
[[File:Image06.png|thumb|194x194px|சிறுகதைத் தொகுப்பு,1962]]<br />
== இலக்கியப்பணி ==<br />
சிறுவயதில் இருந்தே நன்றாக வாசிக்கும் பழக்கம் உள்ள ரகுநாதனுக்கு யாழ்ப்பாணக் கவிஞர் பசுபதியும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் அ.ந. கந்தசாமியும் இலக்கிய ஆர்வமூட்டினர். ரகுநாதனின் முதல் சிறுகதையான ‘நிலவிலே பேசுவோம்’கதையை தன்னுடைய 19-வது வயதில் 1948 ல் எழுதினார். அது "சுதந்திரன்" இதழில் 1951 ல் வெளிவந்தது. 1951 ம் ஆண்டு எழிலன் என்ற புனைபெயரில் ரகுநாதன் எழுதிய ’முந்திவிட்டாள்’ என்ற சிறுகதை இந்தியாவில் வெளிவந்த ’பொன்னி’ இதழில் அட்டைப் படத்துடன் வெளிவந்தது. ‘நெருப்பு’ கதை 1961 ல் சரஸ்வதி இதழில் வெளியானது. 1983 ஜூலைக் கலவரத்தையொட்டி :இலக்கியப் பாலம்’ என்ற தமிழக சிற்றேடு அதை மீள் பிரசுரம் செய்தது. கே.ஜி. அமரதாஸ் அதனை சிங்களத்தில் மொழிபெயர்த்து சாகித்திய வெளியீடான ‘நவசம்ஸ் கிருத்ய’ (நவீன கலாச்சாரம்) என்னும் காலாண்டிதழில் வெளியிட்டார்.<br />
[[File:Image07.png|thumb|212x212px|சிறுகதைத் தொகுப்பு, 1996 ]]<br />
ரகுநாதனின் புகழ்பெற்ற சிறுகதையான 'நிலவிலே பேசுவோம்' தலைப்பிலேயே முதல் சிறுகதைத்தொகுதி 1962 ல் தமிழகத்தில் பாரி பதிப்பகத்தின் விற்பனை உரிமையுடன் வெளியாகியது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான திசை இதழில் (மார்ச் 1990) ’பஜகோவிந்தம்’ எனும் சிறுகதையை கார்த்திநேசன் என்ற புனைப்பெயரில் எழுதினார்.<br />
<br />
துன்பச்சுழல், வெண்ணிலா, வரையண்ணல் ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார். ஈழகேசரி, பொன்னி, சுதந்திரன், தினகரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.<br />
<br />
முதல் கதைத்தொகுதி நிலவில் பேசுவோம் (1962) வெளிவந்து 34 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான தசமங்கலம் (1996) வெளிவந்தது. மாவிட்டபுர போராட்ட காலத்தில் 1969 ல் ‘கந்தன் கருணை’ என்ற நாடகத்தை எழுதினார், ரகுநாதனின் நண்பர் இளைய பத்மநாதன் ‘கந்தன் கருணை’ நாடகத்தை காத்தான்கூத்து பாணிக்கு மாற்றி நெறிப்படுத்தி வடஇலங்கைப் பிரதேசம் முழுவதும் மேடையேற்றினார். ‘கந்தன் கருணை’ 1999 ல் நூலாக வெளிவந்தது.<br />
== இலக்கிய இடம் ==<br />
[[File:Image08.png|thumb|நாவல், இரண்டாம் பதிப்பு-2014]]<br />
வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் தொடர்பு இருக்க வேண்டும், நான் என் அனுபவங்களை எழுதுகிறேன் எனச் சொல்லும் என்.கே. ரகுநாதனின் எழுத்து ஈழத்தில் நிலவிய சாதியத்துக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிரான இயக்கமாக இருந்தது. ரகுநாதனின் ’ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ கதை ஒரு இலட்சியவாத சிந்தனை. சாதிக்குள் நிகழும் கொடூரத்தின் ஒரு பகுதியை அடையாளம் காட்டுகிறது. அதனை நோக்கி ஒரு மாபெரும் எழுச்சி கனவை விதைக்கிறது. என்.கே.ரகுநாதனின் படைப்புகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையுடன் புறக்கணிக்க முடியாத ஒரு கோணத்தை இணைத்துப் பார்க்கத் தூண்டுகிறது.<br />
<br />
நிலவில் பேசுவோம், நெருப்பு, குடை போன்ற கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.<br />
<br />
ரகுநாதனின் சிறுகதைகள், நாடகம், நாவல், கவிதைகள், கடிதங்கள், நேர்காணல்கள், அவருடன் பழகியவர்களின் நினைவுக்குறிப்புகள், அவரது மறைவுக்குப் பின் எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகள் என அனைத்தையும் இணைத்து முழுத்தொகுப்பாக ’என்.கே.ரகுநாதம்’ என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.<br />
== நூல்கள் ==<br />
* நிலவிலே பேசுவோம் - சிறுகதைத் தொகுப்பு, பாரி நிலையம், 1962<br />
* கந்தன் கருணை(ஓரங்க நாடகம்), 1999 - தன் பதிப்பு<br />
* தச மங்கலம் - சிறுகதைத் தொகுப்பு, ஜெயசக்தி பிரசுரம், 1996<br />
* ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி - நாவல், இரண்டாம் பதிப்பு, கருப்புப் பிரதிகள் வெளியீடு, 2014<br />
[[File:Image09.png|thumb|197x197px|வாழ்க்கைத் தொகுப்பு, 2021]]<br />
== வாழ்க்கைத் தொகுப்பு ==<br />
* என்.கே.ரகுநாதம், தொகுப்பு: கற்சுறா, கருப்புப் பிரதிகள் வெளியீடு, 2021<br />
== விருது ==<br />
இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு, 1996 - தசமங்கலம் சிறுகதைத் தொகுப்புக்கு<br />
== மறைவு ==<br />
என். கே. ரகுநாதன் ஜூன் 11, 2018 ல் தனது 89 வது வயதில் கனடா டொரன்டோவில் மறைந்தார்.<br />
== உசாத்துணை ==<br />
* [https://sriranjaniv.wordpress.com/2013/02/19/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0/ என். கே. ரகுநாதன் – தினக்குரல் பேட்டி]<br />
* [https://www.vallinam.com.my/issue44/balamurugan.html ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு... 6 - கே. பாலமுருகன்]<br />
* [https://noelnadesan.com/2018/06/13/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-1929-2018-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/ என்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்! - முருகபூபதி]<br />
== வெளி இணைப்புகள் ==<br />
* [https://noolaham.net/project/716/71584/71584.pdf ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி]<br />
* [https://noolaham.net/project/07/621/621.pdf கந்தன் கருணை ஓரங்க நாடகம்]<br />
* [https://noolaham.net/project/688/68768/68768.pdf தச மங்கலம்]<br />
* [https://www.noolaham.net/project/03/252/252.pdf நிலவிலே பேசுவோம்]<br />
{{Being created}}<br />
[[Category:Being Created]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&diff=38672என். கே. ரகுநாதன்2022-05-19T13:30:42Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>[[File:Image 05.png|thumb|287x287px|என்.கே.ரகுநாதன் (1929-2018). நன்றி - tamilauthors.com]]<br />
என். கே. ரகுநாதன் (ஜூலை 9, 1929 - ஜூன் 11, 2018) ஈழத்தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், நாடகம் எழுதியுள்ளார்.<br />
<br />
== பிறப்பு ==<br />
என். கே. ரகுநாதன் இலங்கையின் யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்திதுறைப் பகுதியிலுள்ள வராத்துப்பளை என்னும் கிராமத்தில் ஜூலை 9, 1929-ல் பிறந்தார். அம்மா வள்ளியம்மை.<br />
<br />
== தனிவாழ்க்கை ==<br />
என். கே. ரகுநாதன் காதல் திருமணம் செய்துகொண்டார் (மனைவி பெயர்....). பிள்ளைகள் திலீபன், தமயந்தி, சஞ்சயன், ஜெயதேவன் ஆகியோர் கனடா, லண்டன், ஜெர்மனியில் இருக்கிறார்கள். கடைசிப் பெண் ஜனனி இலங்கையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றிய ரகுநாதன் இலங்கை ஆசிரியர் சங்கம் எச். என். பெர்னாண்டோ தலைமையில் இயங்கிய காலப்பகுதியில் சங்கத்தின் வடபிரதேசக்கிளையில் அங்கம் வகித்தார். அப்போது தனது தோழர்களுடனும் அடிநிலை மக்களுடனும் இணைந்து ஆலயப்பிரவேசப் போராட்டங்களிலும் தேநீர்க்கடை பிரவேசப்போராட்டங்களிலும் ஈடுபட்டார். <br />
[[File:Image06.png|thumb|194x194px|சிறுகதைத் தொகுப்பு,1962]]<br />
<br />
== இலக்கியப்பணி ==<br />
சிறுவயதில் இருந்தே நன்றாக வாசிக்கும் பழக்கம் உள்ள ரகுநாதனுக்கு யாழ்ப்பாணக் கவிஞர் பசுபதியும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் அ.ந. கந்தசாமியும் இலக்கிய ஆர்வமூட்டினர். ரகுநாதனின் முதல் சிறுகதையான ‘நிலவிலே பேசுவோம்’கதையை தன்னுடைய 19-வது வயதில் 1948 ல் எழுதினார். அது "சுதந்திரன்" இதழில் 1951 ல் வெளிவந்தது. 1951 ம் ஆண்டு எழிலன் என்ற புனைபெயரில் ரகுநாதன் எழுதிய ’முந்திவிட்டாள்’ என்ற சிறுகதை இந்தியாவில் வெளிவந்த ’பொன்னி’ இதழில் அட்டைப் படத்துடன் வெளிவந்தது. ‘நெருப்பு’ கதை 1961 ல் சரஸ்வதி இதழில் வெளியானது. 1983 ஜீலைக் கலவரத்தையொட்டி :இலக்கியப் பாலம்’ என்ற தமிழக சிற்றேடு அதை மீள் பிரசுரம் செய்தது. கே.ஜி. அமரதாஸ் அதனை சிங்களத்தில் மொழிபெயர்த்து சாகித்திய வெளியீடான ‘நவசம்ஸ் கிருத்ய’ (நவீன கலாச்சாரம்) என்னும் காலாண்டிதழில் வெளியிட்டார்.<br />
[[File:Image07.png|thumb|212x212px|சிறுகதைத் தொகுப்பு, 1996 ]]<br />
ரகுநாதனின் புகழ்பெற்ற சிறுகதையான 'நிலவிலே பேசுவோம்' தலைப்பிலேயே முதல் சிறுகதைத்தொகுதி 1962 ல் தமிழகத்தில் பாரி பதிப்பகத்தின் விற்பனை உரிமையுடன் வெளியாகியது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான திசை இதழில் (மார்ச் 1990) ’பஜகோவிந்தம்’ எனும் சிறுகதையை கார்த்திநேசன் என்ற புனைப்பெயரில் எழுதினார்.<br />
<br />
துன்பச்சுழல், வெண்ணிலா, வரையண்ணல் ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார். ஈழகேசரி, பொன்னி, சுதந்திரன், தினகரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.<br />
<br />
முதல் கதைத்தொகுதி நிலவில் பேசுவோம் (1962) வெளிவந்து 34 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான தசமங்கலம் (1996) வெளிவந்தது. மாவிட்டபுர போராட்ட காலத்தில் 1969 ல் ‘கந்தன் கருணை’ என்ற நாடகத்தை எழுதினார், ரகுநாதனின் நண்பர் இளைய பத்மநாதன் ‘கந்தன் கருணை’ நாடகத்தை காத்தான்கூத்து பாணிக்கு மாற்றி நெறிப்படுத்தி வடஇலங்கைப் பிரதேசம் முழுவதும் மேடையேற்றினார். ‘கந்தன் கருணை’ 1999 ல் நூலாக வெளிவந்தது.<br />
<br />
== இலக்கிய இடம் ==<br />
[[File:Image08.png|thumb|நாவல், இரண்டாம் பதிப்பு-2014]]<br />
வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் தொடர்பு இருக்க வேண்டும், நான் என் அனுபவங்களை எழுதுகிறேன் எனச் சொல்லும் என்.கே. ரகுநாதனின் எழுத்து ஈழத்தில் நிலவிய சாதியத்துக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிரான இயக்கமாக இருந்தது. ரகுநாதனின் ’ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ கதை ஒரு இலட்சியவாத சிந்தனை. சாதிக்குள் நிகழும் கொடூரத்தின் ஒரு பகுதியை அடையாளம் காட்டுகிறது. அதனை நோக்கி ஒரு மாபெரும் எழுச்சி கனவை விதைக்கிறது. என்.கே.ரகுநாதனின் படைப்புகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையுடன் புறக்கணிக்க முடியாத ஒரு கோணத்தை இணைத்துப் பார்க்கத் தூண்டுகிறது.<br />
<br />
நிலவில் பேசுவோம், நெருப்பு, குடை போன்ற கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.<br />
<br />
ரகுநாதனின் சிறுகதைகள், நாடகம், நாவல், கவிதைகள், கடிதங்கள், நேர்காணல்கள், அவருடன் பழகியவர்களின் நினைவுக்குறிப்புகள், அவரது மறைவுக்குப் பின் எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகள் என அனைத்தையும் இணைத்து முழுத்தொகுப்பாக ’என்.கே.ரகுநாதம்’ என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.<br />
<br />
== நூல்கள் ==<br />
<br />
* நிலவிலே பேசுவோம் - சிறுகதைத் தொகுப்பு, பாரி நிலையம், 1962<br />
* கந்தன் கருணை(ஓரங்க நாடகம்), 1999 - தன் பதிப்பு<br />
* தச மங்கலம் - சிறுகதைத் தொகுப்பு, ஜெயசக்தி பிரசுரம், 1996<br />
* ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி - நாவல், இரண்டாம் பதிப்பு, கருப்புப் பிரதிகள் வெளியீடு, 2014<br />
<br />
[[File:Image09.png|thumb|197x197px|வாழ்க்கைத் தொகுப்பு, 2021]]<br />
<br />
== வாழ்க்கைத் தொகுப்பு ==<br />
<br />
* என்.கே.ரகுநாதம், தொகுப்பு: கற்சுறா, கருப்புப் பிரதிகள் வெளியீடு, 2021<br />
<br />
== விருது ==<br />
இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு, 1996 - தசமங்கலம் சிறுகதைத் தொகுப்புக்கு<br />
<br />
== மறைவு ==<br />
என். கே. ரகுநாதன் ஜூன் 11, 2018 ல் தனது 89 வது வயதில் கனடா டொரன்டோவில் மறைந்தார்.<br />
<br />
== உசாத்துணை ==<br />
<br />
* [https://sriranjaniv.wordpress.com/2013/02/19/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0/ என். கே. ரகுநாதன் – தினக்குரல் பேட்டி]<br />
* [https://www.vallinam.com.my/issue44/balamurugan.html ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு... 6 - கே. பாலமுருகன்]<br />
* [https://noelnadesan.com/2018/06/13/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-1929-2018-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/ என்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்! - முருகபூபதி]<br />
<br />
== வெளி இணைப்புகள் ==<br />
<br />
* [https://noolaham.net/project/716/71584/71584.pdf ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி]<br />
* [https://noolaham.net/project/07/621/621.pdf கந்தன் கருணை ஓரங்க நாடகம்]<br />
* [https://noolaham.net/project/688/68768/68768.pdf தச மங்கலம்]<br />
* [https://www.noolaham.net/project/03/252/252.pdf நிலவிலே பேசுவோம்]<br />
{{Being created}}<br />
[[Category:Being Created]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=File:Image09.png&diff=38670File:Image09.png2022-05-19T13:29:43Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=File:Image08.png&diff=38669File:Image08.png2022-05-19T13:28:45Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=File:Image07.png&diff=38668File:Image07.png2022-05-19T13:27:55Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=File:Image06.png&diff=38666File:Image06.png2022-05-19T13:26:45Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=File:Image_05.png&diff=38664File:Image 05.png2022-05-19T13:25:20Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&diff=38613என். கே. ரகுநாதன்2022-05-19T09:12:11Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>Under progress - Thangapandiyan<br />
<br />
{{Being created}}<br />
<br />
<br />
[[Category:Being Created]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&diff=38612என். கே. ரகுநாதன்2022-05-19T09:10:04Z<p>Thangapandiyan: Created page with "Under progress <nowiki>Category: Tamil Content</nowiki> <nowiki>{{being created}}</nowiki>"</p>
<hr />
<div>Under progress<br />
<br />
<nowiki>[[Category: Tamil Content]]</nowiki><br />
<br />
<nowiki>{{being created}}</nowiki></div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&diff=38581கலாமோகன்2022-05-19T05:51:04Z<p>Thangapandiyan: /* உசாத்துணை */</p>
<hr />
<div>[[File:Image 01.png|thumb|202x202px|க.கலாமோகன் (நன்றி: கனலி இணையதளம்)]]<br />
க. கலாமோகன் (1960), கந்தசாமி கலாமோகன். ஈழத்தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். கவிதைகள், கதைகள், விமர்சனக் கட்டுரைகள், நாடகம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றை எழுதிவருகிறார். பிரெஞ்சு மொழியிலும் எழுதி வருபவர்.<br />
== பிறப்பு, வசிப்பு ==<br />
க.கலாமோகன் 1960 ல் இலங்கை யாழ்ப்பாணம், வடஇலங்கை எனும் கிராமத்தில் பிறந்தார். தந்தை கந்தசாமி. 1983 ல் பிரான்ஸ் நாட்டில் அகதியாக அரசியல் தஞ்சம் புகுந்தார்.<br />
== தனிவாழ்க்கை ==<br />
கலாமோகனின் மனைவி ஆப்பிரிக்காவின் மாலி நாட்டைச் சேர்ந்த பிண்ட்டோ (Bintou). மகள் அமின்ட்டா (Aminta). கலாமோகன் பிரஞ்சு மொழி நன்றாக அறிந்தவர். கே.எல்.நேசமித்ரன், ஜெயந்தீசன் ஆகியவை புனைப்பெயர்கள். தற்போது பாரிஸில் வசித்துவருகிறார்.<br />
== இலக்கிய வாழ்க்கை ==<br />
[[File:Image 02.png|thumb|279x279px|சிறுகதைத் தொகுப்பு (எக்ஸில் வெளியீடு) ]]<br />
கலாமோகன் இலங்கையில் இருந்தபோது பத்திரிகையாளராகப் பணியாற்றினார். கலாமோகனின் படைப்புகள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. 1999 ல் பிரான்சில் இருந்து எக்ஸில் வெளியீடாக வந்த ‘நிஷ்டை’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனிப்பைப் பெற்றார். <br />
<br />
பின்னர் 2003 ல் ஆஸ்திரேலியாவில் இருந்து மித்ர வெளியீடாக ‘ஜெயந்தீசன் கதைகள்’ தொகுப்பு வெளிவந்தது. இவை தவிர ‘வீடும் வீதியும்’ என்ற நாடக நூலும், பிரெஞ்சு மொழியில் கலாமோகனால் எழுதப்பட்ட ‘Et damain’ (நாளையும்) கவிதைத் தொகுப்புமாக இதுவரை நான்கு நூல்கள் வெளியாகியுள்ளன. கலாமோகனின் பல பிரஞ்சு கவிதைகள் பிரேசில் நாட்டின் பேராசிரியர் பெட்ரோ வியன்னா (Pedro Vianna) வை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த Documentation Refugies இதழில் வெளிவந்துள்ளன. எக்ஸில் இதழில் கலாமோகனின் பல கதைகள் வெளிவந்துள்ளன.<br />
<br />
பிரான்ஸ் நாட்டின் அகதிகளுக்கான முக்கிய நிறுவனங்களில் கலாமோகனின் பிரஞ்சு கவிதைகள் சில சர்வதேச அரசியல் அகதிகளின் குரலாக அந்தஸ்து தரப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.<br />
<br />
கலாமோகனின் பிரஞ்சு கவிதைத் தொகுப்பை பேராசிரியை கிறிஸ்டின் மார்ஸ்ரண்ட் ‘Og I Morgen' என்ற நூலாக டேனிஷ் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார் . <br />
[[File:Image 03.png|thumb|249x249px|சிறுகதைத் தொகுப்பு (2003, மித்ர வெளியீடு)]]<br />
== இலக்கிய அழகியல் ==<br />
சமகாலத்தில் புகலிட இலக்கியத்தில் படைப்பாக்கத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர் கலாமோகன். எழுத்து தனது லட்சியமல்ல எனவும், சமூகத்துள் புதைக்கப்பட்ட, புதைந்துபோன அவலங்களுக்கும், ஓலங்களுக்கும் பின்னே கிடக்கின்ற சத்தியத்தை வெளியே கொண்டுவர அதுவே ஆயுதம் என கருதுவதாலேயே எழுதுவதாகவும் கூறுகிறார்.<br />
[[File:Image 04.png|thumb|197x197px|நாடகங்கள் (1990, விந்தன் வெளியீட்டகம்)]]<br />
கலாமோகனின் கதைகளின் உள்ளடக்கமாக ஆண் பெண் ஒழுக்கவியல், மரபினைக்கேள்விக்கு உட்படுத்துதல், குடும்ப உறவுநிலையில் ஏற்படும் சிக்கல்களை உணர்த்துதல், குருட்டு நம்பிக்கையும், பிரபல்யத் தேடலும் வளர்ந்து வருவதை ஏளனம் செய்தல், சூழலின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளல் ஆகியவற்றைக் கூறலாம். நிஷ்டை தொகுப்பில் உள்ள 12 சிறுகதைகளும், தனியாக வெளிவந்த புகார், பாம்பு, குளிர், 20 ஈரோ, ஆகியனவும் நவீன தமிழ்ச் சிறுகதை வடிவத்தின் சாத்தியங்களை உள்வாங்கிய கதைகள். ‘ஜெயந்தீசன் கதைகள்’தொகுப்பு, 67 குறுங்கதைகளைக் கொண்டது. இக்கதைகளை Satire (கேலி, வசை) வகைக் கதைகள் என எஸ்.பொ. குறிப்பிடுகிறார். இவை சிறுகதைகள் என்ற சட்டகத்துள் அமையாதவை. சமூகத்துள் உள்ளமுங்கியிருக்கும் பல விஷயங்களை வெளிக் கொண்டு வருவதும் அவற்றை ஏளனம் செய்வதுமே ஜெயந்தீசன் கதைகளின் முதன்மையான நோக்கமாகும்.<br />
<br />
கலாமோகனுடைய மொழி அகவய உரையாடல் தன்மை கொண்டது. மொழியில் ஒரு மெல்லிய இழையாக ஓடும் கவித்துவம் உரையாடல்களில் வெளிப்படுகிறது. கலாமோகனின் சொல்முறை வடிவம் என்று சொல்ல முடியாதவாறு சிதறிக்கொண்டே இருக்கின்றது. ஐரோப்பிய மரபின் மொந்தாஜ் (montage) கலை போல வெவ்வேறு சம்பவங்களைத் துண்டு துண்டுகளாக வெவ்வேறு கோணத்தில் ஒன்றின் மீது ஒன்றாகப் பொருத்தி முழுமையான இறுதிவடிவத்தை வளைத்து எடுக்கும் அழகியல். சிதறுண்ட மனங்களையும், இருத்தலியல் இடர்களையும் கலாமோகன் இந்த அழகியல் வடிவத்தில் எழுதியிருப்பது சிறுகதைப் பரப்பில் அவருக்கே உரிய தனித்துவ இடத்தை தக்கவைக்கிறது. நெருக்கடிகளும், சிதைவுறும் மனங்களும் எதிர்கொள்ளும் வலியின் வெளிப்பாட்டு வடிவமாகவே கலாமோகனின் கதைகள் உள்ளன. க.கலாமோகனைத்தான் புகலிட இலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவராகச் சொல்லமுடியும் என [[அனோஜன் பாலகிருஷ்ணன்]] கூறுகிறார். போரிலக்கியத்தை விட புலம்பெயர் எழுத்துதான் ஈழத்தின் சாதனை எனவும் புது உலகங்களை சந்திக்கும் போது அது உருவாக்கும் கலாச்சார முரண்பாடுகளை எதிர்கொண்டு தங்கி வாழும் போராட்டத்தை எழுதிய குறிப்பிடத்தகுந்தவர்களில் ஒருவராக கலாமோகனைக் குறிப்பிடுகிறார் [[ஜெயமோகன்]].<br />
== நூல்கள் ==<br />
* வீடும் வீதியும் (தமிழ் நாடகங்கள்) 1990, விந்தன் வெளியீட்டகம்<br />
* நிஷ்டை (சிறுகதைகள்) 1999, எக்ஸில் வெளியீடு.<br />
* ஜெயந்தீசன் கதைகள் (சிறுகதைகள்) 2003, மித்ர வெளியீடு.<br />
* Et damain (நாளையும்) - பிரஞ்சு கவிதைத் தொகுப்பு<br />
== உசாத்துணை ==<br />
<br />
* [http://www.annogenonline.com/2019/04/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2/ பிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன் - அனோஜன் பாலகிருஷ்ணன்]<br />
* [https://eathuvarai.wordpress.com/2009/08/07/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE/ கலாமோகனின் கதைகள் – திறனாய்வு]<br />
* [https://sureshezhuthu.blogspot.com/2018/08/blog-post_29.html காலூன்றுதலின் கசப்புகள் - கலாமோகனின் நிஷ்டை சிறுகதை தொகுப்பை முன்வைத்து - சுரேஷ் பிரதீப்]<br />
<br />
== வெளி இணைப்புகள் ==<br />
# [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஜெயந்தீசன் கதைகள்]<br />
# [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88 நிஷ்டை]<br />
# [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D வீடும் வீதியும்]<br />
{{Being created}}<br />
[[Category:Being Created]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&diff=38580கலாமோகன்2022-05-19T05:49:32Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>[[File:Image 01.png|thumb|202x202px|க.கலாமோகன் (நன்றி: கனலி இணையதளம்)]]<br />
க. கலாமோகன் (1960), கந்தசாமி கலாமோகன். ஈழத்தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். கவிதைகள், கதைகள், விமர்சனக் கட்டுரைகள், நாடகம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றை எழுதிவருகிறார். பிரெஞ்சு மொழியிலும் எழுதி வருபவர்.<br />
<br />
== பிறப்பு, வசிப்பு ==<br />
க.கலாமோகன் 1960 ல் இலங்கை யாழ்ப்பாணம், வடஇலங்கை எனும் கிராமத்தில் பிறந்தார். தந்தை கந்தசாமி. 1983 ல் பிரான்ஸ் நாட்டில் அகதியாக அரசியல் தஞ்சம் புகுந்தார்.<br />
<br />
== தனிவாழ்க்கை ==<br />
கலாமோகனின் மனைவி ஆப்பிரிக்காவின் மாலி நாட்டைச் சேர்ந்த பிண்ட்டோ (Bintou). மகள் அமின்ட்டா (Aminta). கலாமோகன் பிரஞ்சு மொழி நன்றாக அறிந்தவர். கே.எல்.நேசமித்ரன், ஜெயந்தீசன் ஆகியவை புனைப்பெயர்கள். தற்போது பாரிஸில் வசித்துவருகிறார்.<br />
<br />
== இலக்கிய வாழ்க்கை ==<br />
[[File:Image 02.png|thumb|279x279px|சிறுகதைத் தொகுப்பு (எக்ஸில் வெளியீடு) ]]<br />
கலாமோகன் இலங்கையில் இருந்தபோது பத்திரிகையாளராகப் பணியாற்றினார். கலாமோகனின் படைப்புகள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. 1999 ல் பிரான்சில் இருந்து எக்ஸில் வெளியீடாக வந்த ‘நிஷ்டை’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனிப்பைப் பெற்றார். <br />
<br />
பின்னர் 2003 ல் ஆஸ்திரேலியாவில் இருந்து மித்ர வெளியீடாக ‘ஜெயந்தீசன் கதைகள்’ தொகுப்பு வெளிவந்தது. இவை தவிர ‘வீடும் வீதியும்’ என்ற நாடக நூலும், பிரெஞ்சு மொழியில் கலாமோகனால் எழுதப்பட்ட ‘Et damain’ (நாளையும்) கவிதைத் தொகுப்புமாக இதுவரை நான்கு நூல்கள் வெளியாகியுள்ளன. கலாமோகனின் பல பிரஞ்சு கவிதைகள் பிரேசில் நாட்டின் பேராசிரியர் பெட்ரோ வியன்னா (Pedro Vianna) வை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த Documentation Refugies இதழில் வெளிவந்துள்ளன. எக்ஸில் இதழில் கலாமோகனின் பல கதைகள் வெளிவந்துள்ளன.<br />
<br />
பிரான்ஸ் நாட்டின் அகதிகளுக்கான முக்கிய நிறுவனங்களில் கலாமோகனின் பிரஞ்சு கவிதைகள் சில சர்வதேச அரசியல் அகதிகளின் குரலாக அந்தஸ்து தரப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.<br />
<br />
கலாமோகனின் பிரஞ்சு கவிதைத் தொகுப்பை பேராசிரியை கிறிஸ்டின் மார்ஸ்ரண்ட் ‘Og I Morgen' என்ற நூலாக டேனிஷ் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார் . <br />
[[File:Image 03.png|thumb|249x249px|சிறுகதைத் தொகுப்பு (2003, மித்ர வெளியீடு)]]<br />
<br />
== இலக்கிய அழகியல் ==<br />
சமகாலத்தில் புகலிட இலக்கியத்தில் படைப்பாக்கத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர் கலாமோகன். எழுத்து தனது லட்சியமல்ல எனவும், சமூகத்துள் புதைக்கப்பட்ட, புதைந்துபோன அவலங்களுக்கும், ஓலங்களுக்கும் பின்னே கிடக்கின்ற சத்தியத்தை வெளியே கொண்டுவர அதுவே ஆயுதம் என கருதுவதாலேயே எழுதுவதாகவும் கூறுகிறார்.<br />
[[File:Image 04.png|thumb|197x197px|நாடகங்கள் (1990, விந்தன் வெளியீட்டகம்)]]<br />
கலாமோகனின் கதைகளின் உள்ளடக்கமாக ஆண் பெண் ஒழுக்கவியல், மரபினைக்கேள்விக்கு உட்படுத்துதல், குடும்ப உறவுநிலையில் ஏற்படும் சிக்கல்களை உணர்த்துதல், குருட்டு நம்பிக்கையும், பிரபல்யத் தேடலும் வளர்ந்து வருவதை ஏளனம் செய்தல், சூழலின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளல் ஆகியவற்றைக் கூறலாம். நிஷ்டை தொகுப்பில் உள்ள 12 சிறுகதைகளும், தனியாக வெளிவந்த புகார், பாம்பு, குளிர், 20 ஈரோ, ஆகியனவும் நவீன தமிழ்ச் சிறுகதை வடிவத்தின் சாத்தியங்களை உள்வாங்கிய கதைகள். ‘ஜெயந்தீசன் கதைகள்’தொகுப்பு, 67 குறுங்கதைகளைக் கொண்டது. இக்கதைகளை Satire (கேலி, வசை) வகைக் கதைகள் என எஸ்.பொ. குறிப்பிடுகிறார். இவை சிறுகதைகள் என்ற சட்டகத்துள் அமையாதவை. சமூகத்துள் உள்ளமுங்கியிருக்கும் பல விஷயங்களை வெளிக் கொண்டு வருவதும் அவற்றை ஏளனம் செய்வதுமே ஜெயந்தீசன் கதைகளின் முதன்மையான நோக்கமாகும்.<br />
<br />
கலாமோகனுடைய மொழி அகவய உரையாடல் தன்மை கொண்டது. மொழியில் ஒரு மெல்லிய இழையாக ஓடும் கவித்துவம் உரையாடல்களில் வெளிப்படுகிறது. கலாமோகனின் சொல்முறை வடிவம் என்று சொல்ல முடியாதவாறு சிதறிக்கொண்டே இருக்கின்றது. ஐரோப்பிய மரபின் மொந்தாஜ் (montage) கலை போல வெவ்வேறு சம்பவங்களைத் துண்டு துண்டுகளாக வெவ்வேறு கோணத்தில் ஒன்றின் மீது ஒன்றாகப் பொருத்தி முழுமையான இறுதிவடிவத்தை வளைத்து எடுக்கும் அழகியல். சிதறுண்ட மனங்களையும், இருத்தலியல் இடர்களையும் கலாமோகன் இந்த அழகியல் வடிவத்தில் எழுதியிருப்பது சிறுகதைப் பரப்பில் அவருக்கே உரிய தனித்துவ இடத்தை தக்கவைக்கிறது. நெருக்கடிகளும், சிதைவுறும் மனங்களும் எதிர்கொள்ளும் வலியின் வெளிப்பாட்டு வடிவமாகவே கலாமோகனின் கதைகள் உள்ளன. க.கலாமோகனைத்தான் புகலிட இலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவராகச் சொல்லமுடியும் என [[அனோஜன் பாலகிருஷ்ணன்]] கூறுகிறார். போரிலக்கியத்தை விட புலம்பெயர் எழுத்துதான் ஈழத்தின் சாதனை எனவும் புது உலகங்களை சந்திக்கும் போது அது உருவாக்கும் கலாச்சார முரண்பாடுகளை எதிர்கொண்டு தங்கி வாழும் போராட்டத்தை எழுதிய குறிப்பிடத்தகுந்தவர்களில் ஒருவராக கலாமோகனைக் குறிப்பிடுகிறார் [[ஜெயமோகன்]].<br />
<br />
== நூல்கள் ==<br />
<br />
* வீடும் வீதியும் (தமிழ் நாடகங்கள்) 1990, விந்தன் வெளியீட்டகம்<br />
* நிஷ்டை (சிறுகதைகள்) 1999, எக்ஸில் வெளியீடு.<br />
* ஜெயந்தீசன் கதைகள் (சிறுகதைகள்) 2003, மித்ர வெளியீடு.<br />
* Et damain (நாளையும்) - பிரஞ்சு கவிதைத் தொகுப்பு<br />
<br />
== உசாத்துணை ==<br />
[http://www.annogenonline.com/2019/04/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2/ பிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன் - அனோஜன் பாலகிருஷ்ணன்]<br />
<br />
[https://eathuvarai.wordpress.com/2009/08/07/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE/ கலாமோகனின் கதைகள் – திறனாய்வு]<br />
<br />
[http://sureshezhuthu.blogspot.com/2018/08/blog-post_29.html காலூன்றுதலின் கசப்புகள் - கலாமோகனின் நிஷ்டை சிறுகதை தொகுப்பை முன்வைத்து - சுரேஷ் பிரதீப்]<br />
<br />
== வெளி இணைப்புகள் ==<br />
<br />
# [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஜெயந்தீசன் கதைகள்]<br />
# [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88 நிஷ்டை]<br />
# [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D வீடும் வீதியும்]<br />
{{Being created}}<br />
[[Category:Being Created]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=File:Image_04.png&diff=38579File:Image 04.png2022-05-19T05:45:50Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=File:Image_03.png&diff=38578File:Image 03.png2022-05-19T05:44:26Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=File:Image_02.png&diff=38576File:Image 02.png2022-05-19T05:42:58Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=File:Image_01.png&diff=38575File:Image 01.png2022-05-19T05:41:38Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&diff=38411கலாமோகன்2022-05-18T10:56:37Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>Under progress - Thangapandiyan<br />
<br />
<br />
<br />
{{Being created}}<br />
[[Category:Being Created]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&diff=38410கலாமோகன்2022-05-18T10:53:12Z<p>Thangapandiyan: Created page with "Under progress - Thangapandiyan Category:Being Created"</p>
<hr />
<div>Under progress - Thangapandiyan<br />
<br />
<br />
[[Category:Being Created]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&diff=37338தானவன் என்ற போலிஸ் நிபுணன் கண்டுபிடித்த அற்புத குற்றங்கள்2022-05-11T12:21:14Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>[[File:Thanavan.jpg|thumb|தானவன் என்ற போலீஸ் நிபுணன் ]]<br />
தானவன் என்ற போலீஸ் நிபுணன் கண்டுபிடித்த அற்புத குற்றங்கள் (ஐந்து கதைகள்) (1894) தமிழின் முதல் துப்பறியும் கதைகளின் தொகுதி. பண்டித நடேச சாஸ்திரி எழுதியது. ஐந்து கதைகளுக்கும் பொதுவான சரடு இருப்பதனால் நாவல் என்றும் கொள்ளப்படுகிறது. தமிழ் நவீன இலக்கியத்தின் முதல் துப்பறியும் நிபுணர் தானவன்.<br />
== எழுத்து, பிரசுரம் ==<br />
பண்டித நடேச சாஸ்திரியின் நண்பரான A. Porteous என்னும் ஆங்கில நண்பர் தமிழில் துப்பறியும் கதைகள் உண்டா என்று கேட்டார். அதனால் தூண்டுதல் கொண்ட நடேச சாஸ்திரி தானவன் என்னும் துப்பறியும் நிபுணரை நாயகனாக்கி தானவன் துப்பறிந்த வழக்குகளை கதைத்தொகையாக வெளியிட்டார். Joyce Emmerson Preston Muddock (1842-1934) எழுதிய Dick Donovan என்ற பிரிட்டிஷ் துப்பறியும் நிபுணர் இக்கதாபாத்திரத்தின் முன்மாதிரி. தமிழின் முதல் துப்பறியும் கதாபாத்திரம் தானவன்தான். ”தானவன் என்ற போலீஸ் நிபுணன் கண்டுபிடித்த அத்புத குற்றங்கள் என்று பெயரிட்டிருக்கும் இச்சிறு புத்தகத்தை நமது நாட்டு போலீஸ் டிபார்ட்மெண்டுக்குத் தலைவரான ஸ்ரீ கர்னல் போரிஸியஸ் துரை அவர்கள் வேண்டுகோளின்படி நமது தமிழ் தேசிய போலிஸ் உத்தியோகஸ்தர் அனைவருக்கும் பயன்படும் பொருட்டு நாம் எழுதி அச்சிடத் துணிந்தோம்.” என்று முன்னுரையில் நடேச சாஸ்திரி குறிப்பிடுகிறார்.<br />
== இலக்கிய இடம் ==<br />
தானவன் தமிழில் முதல் துப்பறியும் நிபுணர். இந்நூலே தமிழில் எழுதப்பட்ட முதல் துப்பறியும் கதைகளின் தொகுதி. இது பின்னாளில் வந்த எழுத்தாளர்கள் மர்மநாவல்களையும் துப்பறியும் நாவல்களையும் எழுத பெரும் தூண்டுதலை அளித்தது. <br />
== முகப்புச் செய்யுள்கள் ==<br />
இந்நாவலில் பழைய காவியங்களைப்போல அர்ப்பணச் செய்யுள் ஒன்றும் காப்புச்செய்யுள் ஒன்றும் நூலின் முகப்பில் அளிக்கப்பட்டுள்ளன. கும்பகோணம் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் பிரம்மஸ்ரீ வே. சாமிநாதய்யரால் இயற்றப்பட்டவை எனக் குறிக்கப்பட்டுள்ளது. அச்செய்யுட்கள்: <blockquote>அயன்படைத்த புவியுடையூர் காப்பாளர் மதிநுட்பம் அடையும்வண்ணம்<br />
நயன்படைத்த கதை மிகுத்த நலம்படைத்த ஒரு நூலை நவிலுகென்று<br />
<br />
வியன்படைத்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் போர்சியஸவர்கள் விளம்ப யான்செய்<br />
<br />
பயன்படைத்த இந்நூலை அக்கனவான் பேருக்கர்ப்பணம் செய்தேனால்<br />
<br />
<br />
மன்னிய வரசி செங்கோல் வாழ்க நல்லோர்கள் வாழ்க<br />
<br />
துன்னிய புல்லோர் மாய்க தோன்றுமிந்நூலை கற்று<br />
<br />
பின்னிய திருட்டை கண்டுபிடித்தென்றும் ஊர்க்காப்பாளர்<br />
<br />
உன்னிய பகையை வெல்க ஒரு தனிக் கடவுள் காக்க</blockquote><br />
==உள்ளடக்கம்==<br />
இந்நூலில் உள்ள ஐந்து துப்பறியும் கதைகள்<br />
* சாமர்த்தியத் திருட்டு<br />
* விசித்திரக்கொலை<br />
* விஷக்கொலை<br />
* சம்மனைக் கிழித்த முத்தண்ணாவின் கேஸ்<br />
* நீலியின் கதை<br />
[[Category:நாவல்கள்]]<br />
{{finalised}}<br />
[[Category:Tamil Content]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE&diff=36597சாரு நிவேதிதா2022-05-07T11:50:57Z<p>Thangapandiyan: /* பிறப்பு, கல்வி */</p>
<hr />
<div>[[File:சாரு நிவேதிதா.jpg|thumb|சாரு நிவேதிதா]]<br />
[[File:சாரு நிவேதிதா1.jpg|thumb|சாரு நிவேதிதா]]<br />
[[File:சாரு நிவேதிதா2.jpg|thumb|சாரு நிவேதிதா]]<br />
[[File:சாரு நிவேதிதா5.jpg|thumb|[[File:சாரு நிவேதிதா9.jpg|thumb|சாரு நிவேதிதா]]சாரு நிவேதிதா]]<br />
[[File:சாரு நிவேதிதாஒ.jpg|thumb|சாரு நிவேதிதா]]<br />
சாரு நிவேதிதா (18 டிசம்பர் 1953) தமிழ் எழுத்தாளர். தமிழில் பின்நவீனத்துவ - பின் அமைப்பியல் சார்ந்த அழகியலைக் கொண்ட எழுத்தாளர்களில் முதன்மையானவராகவும், பிறழ்வெழுத்து என்னும் இலக்கியவகைமையின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். பலதுறைசெய்திகளை இணைத்து எழுதும் கலைக்களஞ்சியத்தன்மை, எழுத்தைப்பற்றியே எழுதும் மீபுனைவுத்தன்மை, அனைத்தையும் விளையாட்டாக ஆக்கும் தன்மை, ஒழுக்கவியல் எல்லைகளையும் அரசியல்சரிநிலைகளையும் மீறிச்செல்லும் தன்மை, அமைப்புகளுக்கு எதிரான கலகத்தன்மை ஆகியவற்றைக் கொண்ட எழுத்துக்களை எழுதியவராக அறியப்படுகிறார். <br />
== பிறப்பு, கல்வி ==<br />
சாரு நிவேதிதாவின் இயற்பெயர் அறிவழகன். அரசுவேலையில் இருந்தமையால் சாரு நிவேதிதா என்று பெயர் சூட்டிக்கொண்டார். அக்காலகட்டத்தில் இடதுசாரி புரட்சிகர இயக்கங்களின் ஆதராவாளராக இருந்தமையால் நக்ஸலைட் இயக்கத்தின் கோட்பாட்டாளரும் நிறுவனருமான சாரு மஜூம்தாரின் பெயரில் இருந்து தன் பெயரை உருவாக்கிக் கொண்டார். திருவாரூர் அருகிலுள்ள இடும்பாவனம் என்னும் ஊரில் ஜி.கிருஷ்ணசாமி- பார்வதி இணையருக்கு 18 டிசம்பர் 1953 ல் சாரு நிவேதிதா பிறந்தார். நாகூரில் பள்ளிக் கல்வியை முடித்தார். காரைக்காலில் புகுமுக வகுப்பை முடித்து தஞ்சாவூரில் பி.எஸ்ஸி. இயற்பியல் பயின்றார். படிப்பை முடிக்காமல் அரசுவேலையில் சேர்ந்தார். தஞ்சாவூரில் சாரு நிவேதிதாவுக்கு இயற்பியல் ஆசிரியராக இருந்தவர் [[அ. மார்க்ஸ்]]<br />
== தனிவாழ்க்கை ==<br />
சாரு நிவேதிதா மொழிபெயர்ப்பாளரும் இடதுசாரி செயல்பாட்டாளருமான விசாலாட்சியுடன் இணைந்து வாழ்ந்தார். அவர்களுக்கு ஒரு மகள், ரேஷ்மா. பின்னர் 1992 ல் டி. ஜி. சுகந்தா (அவந்திகா)வை மணந்தார். சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்வில் வென்று மத்திய அரசுப்பணியில் இடைநிலை ஊழியராகச் சேர்ந்தார். சென்னையில் சிறைத்துறை இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் உதவியாளராகச் சேர்ந்தார். அதன்பின் டெல்லியில் பொதுவினியோகத்துறையில் பணியாற்றினார். சென்னை திரும்பி தபால்துறை மேலாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றினார். 2001ல் விருப்ப ஓய்வுபெற்றார்.<br />
== இலக்கியவாழ்க்கை ==<br />
சாரு நிவேதிதாவின் இலக்கியவாழ்க்கை மூன்று காலகட்டங்களால் ஆனது. <br />
====== முதற் காலகட்டம் ======<br />
சாரு நிவேதிதா தொடக்கத்திலேயே தமிழ் சிற்றிதழ் சார்ந்து இயங்கிய நவீன இலக்கியத்துடன் விலக்கம் கொண்டிருந்தார். இடதுசாரி இயக்கங்களுடன் அணுக்கம் கொண்டவராகவும், சிறு குழுவுக்குள் எழுதப்படும் நவீன எழுத்துக்கள் பயனற்றவை என்னும் எண்ணம் கொண்டவராகவும் இருந்தார். தமிழ் நவீன இலக்கியம் என்பது நவீனத்துவ இலக்கியமே என்றும், அது சமூகப்போக்குகள் அரசியலியக்கங்கள் ஆகியவற்றை பற்றிய கவலை இன்றி தனிமனித அகஅவசங்களை மட்டுமே கருத்தில் கொள்வது என்றும் விமர்சித்தார். அந்தத் தனிமனித அகஅவசங்கள் தமிழ்ச்சூழலில் உருவான வெகுஜன அரசியல் மாற்றங்களால் ஒதுக்கப்பட்ட உயர்குடியினருக்கு உரியவை, பெரும்பாலும் பொய்யாகவும் மிகையாகவும் கற்பனை செய்யப்படுபவை, சிறு வட்டத்திற்குள் தங்களுக்குள் புழங்குபவை என்று கூறினார். இதைச் சுட்ட அவர் உருவாக்கிய ‘தயிர்சாத நுண்ணுணர்வு’ என்னும் கேலிச்சொல் பின்னர் புகழ்பெற்றது <br />
<br />
சாரு நிவேதிதா பொதுவாசிப்புக்குரிய சாவி இதழில் 19--ல் நிவேதிதா என்ற பெயரில் எழுதிய கனவுகள் சிதைதல் என்பது முதல் படைப்பு. பின்னர் தினமலர் வாரமலர் போன்ற பொதுவாசிப்புக்குரிய இதழ்களில் எளிய கதைகளை எழுதினார். தொடர்ந்து நவீனத்தமிழிலக்கியம் மீது கடுமையான ஒவ்வாமையையும் விமர்சனத்தையும் முன்வைத்துக் கொண்டும் இருந்தார். 1982ல் [[சுந்தர ராமசாமி]]யின் [[ஜே.ஜே.சில குறிப்புகள்]] நாவல் வெளிவந்தபோது சாரு நிவேதிதா அதை மிகக்கடுமையாக விமர்சனம் செய்து சிறு வெளியீடொன்றை தன் செலவில் பிரசுரித்தார். அதில் ஜே.ஜே.சில குறிப்புகள் நவீனத்துவத்தின் தனிமனிதவாதம், குறுங்குழுவாதம் ஆகியவற்றை முன்வைக்கிறது என்றும் அது ஃபாசிசத்திற்கு மிக அணுக்கமான பார்வை என்றும், மார்க்ஸியம் உட்பட எல்லாவகையான புரட்சிகர அரசியல்செயல்பாடுகளையும் அது கேலிசெய்து சிறுமைக்குள்ளாக்குகிறது என்றும் கண்டித்திருந்தார். <br />
<br />
இக்காலகட்டத்தில் சாரு நிவேதிதா டெல்லியின் தெருநாடக இயக்கங்களுடன் தொடர்பிலிருந்தார். சார்த்ர் முன்வைத்த புரட்சிகர அரசியல் பற்றிய சிறு நூல் ஒன்றை எழுதினார். பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள் வழியாக தீவிர இடதுசாரி அரசியல் பார்வையை முன்வைத்தார். அன்று அதிகமாக பேசப்பட்ட இருத்தலியல் கருத்துக்களின் தீவிரமான எதிரியாக அறியப்பட்டார்.<br />
====== இரண்டாம் காலகட்டம் ======<br />
டெல்லியில் இருந்து சென்னைக்கு பணிமாறுதலாகி வந்தபோது சாரு நிவேதிதாவுக்கு [[ரமேஷ் பிரேதன்]], [[பிரேம்]], [[நாகார்ஜுனன்]] ஆகியோரின் நட்பு உருவானது. அவர்களுடன் இணைந்து பின்நவீனத்துவ - பின் அமைப்பு வாத சிந்தனைகளில் ஈடுபாடு உருவானது. பாண்டிச்சேரியில் இருந்து வெளியான நிறப்பிரிகை இதழுடன் இணைந்து செயல்பட்டார். [[நிறப்பிரிகை]] இடதுசாரிச் சிந்தனைகளையும், பெரியாரியச் சிந்தனைகளையும் பின்நவீனத்துவ பார்வையுடன் இணைக்கும் முயற்சியை முன்னெடுத்த இதழ். <br />
<br />
பின்நவீனத்துவம் மீதான ஈடுபாடு சாரு நிவேதிதாவை நேர்கோடற்ற எழுத்து முறை, மீபுனைவு எழுத்துமுறை ஆகியவற்றில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. 1988- ல் மீட்சி 26 ஆவது இதழில் வெளிவந்த ‘கிரிக்கெட்டை முன்வைத்து புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொல்லிக் கொண்டது ‘ என்னும் சிறுகதை அத்தகைய இலக்கிய வடிவங்களுக்கு முன்னோடியானது. (முனியாண்டி என்ற பெயரில் வெளியானது) அது நவீனத்துவ எழுத்துமுறையையும் அதன் அகச்சித்தரிப்புகளையும் கேலிசெய்து நிராகரிக்கிறது. கதையை தன்னைத்தானே மறுத்துக்கொண்டு நகரும் ஒருவகை உரையாடலாக ஆக்கிக் காட்டுகிறது.<br />
<br />
நேர்கோடற்ற, மீபுனைவு முறையில் சாரு நிவேதிதா எழுதிய ‘எக்ஸிஸ்டென்ஷலிசமும் ஃபேன்சி பனியனும்’ என்னும் முதல் நாவல் அவருடைய முந்தைய இடதுசாரிப் பார்வையை கேலிசெய்து நிராகரிக்கிறது. இடதுசாரிப் பார்வையிலுள்ள தன்முனைப்பு, ஒழுக்கவியல் பார்வை ஆகியவற்றை நிராகரித்து அனைத்துக்கும் எதிரான கலகத்தை முன்வைக்கிறது. அதைத் தொடர்ந்து சாரு நிவேதிதா எழுதிய ஸீரோ டிகிரி அவருடைய நாவல்களில் முதன்மையானது என விமர்சகர்களால் கருதப்படுகிறது. டைரி போன்ற குறிப்புகள், வெட்டி ஒட்டியதுபோன்ற செய்தித்துணுக்குகள், கட்டற்ற உரைநடைப்பகுதிகள் என கலவைவடிவில் அமைந்த இந்நாவல் தன்னையும் புறத்தையும் மறுக்கும் கலகத்தை முன்வைப்பது. வெவ்வேறு ஒவ்வாமைகள் வழியாக தன் காலகட்டத்தை எதிர்கொள்ளும் நாவல் இது <br />
<br />
சாரு நிவேதிதாவின் இந்த இரண்டாம் காலகட்டத்தின் முகப்பு நூல் என சொல்லத்தக்கது அவர் விகடன் இணைய இதழில் எழுதிய கோணல் பக்கங்கள். அது ஜான் ஜெனே, மார்க்கி டி ஸாத், கேத்தி ஆக்கர், அந்தோனின் ஆர்த்தோ போன்ற உலகம் முழுக்க வகுக்கப்பட்ட எல்லைகளை மீறிச்சென்ற எழுத்தாளர்களையும்; இசைமரபுகளை உடைத்துச் சென்ற Cradle of Filth போன்ற மாற்று இசைப்போக்குகளையும் அறிமுகம் செய்து அவற்றைi இணைத்து தமிழில் அறியப்படாதிருந்த ஒரு வெளியை உருவாக்கியது. சாரு நிவேதிதாவை நோக்கி ஏராளமான இளைஞர்கள் வருவதற்கு வழியமைத்தது அக்கட்டுரைத்தொடர். <br />
[[File:சாரு- அவந்திகா.jpg|thumb|சாரு- அவந்திகா]]<br />
====== மூன்றாம் காலகட்டம் ======<br />
ஸீரோ டிகிரி நாவலின் வழியாகவே சாரு நிவேதிதா இரண்டாம் காலகட்டத்தைக் கடந்து வந்தார். அந்நாவல் அதன் முடிவில் கதைசொல்லியின் மகள் சார்ந்த உணர்வுகள் வழியாக ஓர் மதம்சாரா ஆன்மிகத்தை தொட்டது. மூன்றாம் காலகட்டம் அந்த உணர்வுகளில் இருந்து உருவானது. இக்காலகட்டத்தில் சாரு நிவேதிதா வெவ்வேறு ஆன்மிகவாதிகளை கருத்தில்கொள்ளவும், முன்பு அவர் பொருட்படுத்தாத செவ்வியல் இசை போன்றவற்றை உள்வாங்கவும் முயன்றார். எதிர்நிலைகளினூடாகச் சென்றடையும் ஓர் ஆன்மிகத்தை முன்வைக்கும் காலகட்டம் இது . அழகியல், அறம் போன்ற முன்பு அவர் ஏளனம் செய்து விலக்கிய சொற்களை தனக்குரிய பொருளில் பயன்படுத்தத் தொடங்கினார். தமிழ் நவீன இலக்கியத்தில் அவர் முழுமையாக நிராகரித்த [[புதுமைப்பித்தன்]], [[ந. பிச்சமூர்த்தி]], [[கு. அழகிரிசாமி]] முதலிய படைப்பாளிகளை மறுபரிசீலனை செய்து அவர்களில் தனக்கு உவப்பான பகுதிகளை அடையாளம் காட்டிய பழுப்புநிறப் பக்கங்கள் என்னும் நூலை எழுதினார். எக்ஸைல் என்னும் நாவல் இந்தக் காலகட்டத்தின் முகப்புநூல்.<br />
== விவாதங்கள் ==<br />
1982ல் சாரு நிவேதிதா [[சுந்தர ராமசாமி]] எழுதிய ஜே.ஜே.சில குறிப்புகளை கடுமையாக கண்டித்து வெளியிட்ட பிரசுரம் விரிவான விவாதத்திற்கு ஆளாகியது<br />
<br />
1992-ஆம் ஆண்டில் மதுரையில் சாரு நிவேதிதா தன் நண்பர்களுடன் இணைந்து நடத்திய ரெண்டாவது ஆட்டம் என்னும் நாடகம் ஒழுக்க எல்லைகளை மீறியது என குற்றம் சாட்டப்பட்டு அரங்கிலிருந்த சிலரால் தாக்கப்பட்டார்<br />
<br />
2010 ல் சர்ச்சைக்குரிய துறவியான நித்யானந்தாவை ஆதரித்து சாரு நிவேதிதா கட்டுரைகள் எழுதினார். நித்யானந்தா ஒரு பாலியல் குற்றச்சாட்டில் கைதானபோது அவரை விமரிசித்து ‘சரசம் சல்லாபம் சாமியார்’ என்ற பெயரில் எழுதிய கட்டுரைகளுக்காக நித்யானந்தா குற்றவழக்குகள் தொடர்ந்தார்.<br />
<br />
2015ல் [[பெருமாள் முருகன்]] அவர் எழுதிய திருச்செங்கோடு என்னும் நாவல் ஒரு குறிப்பிட்ட சாதியினரை இழிவுசெய்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டு எதிர்க்கப்பட்டபோது சாரு நிவேதிதா பெருமாள் முருகனுக்கு எதிரான நிலைபாடு எடுத்தார். மக்களின் உணர்வுகளுக்கு எதிராக எழுதுவது கலகமோ புரட்சியோ அல்ல, அதிகார அமைப்புகளுக்கு எதிராகவே எழுத்தாளன் எழுதவேண்டும், கருத்துச்சுதந்திரத்தின் எல்லை அது என்று கூறினார்.<br />
== விருதுகள்,ஏற்புகள் ==<br />
* சீரோ டிகிரி சந்த்ரா சித்தன் மற்றும் பிரதீப் செபாஸ்டியன் தேர்வு செய்த ஐம்பது இந்திய படைப்பிலக்கிய நூல்கள் என்னும் பட்டியலில் இடம்பெற்றுள்ள[https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-literaryreview/the-best-of-indian-fiction/article4890205.ece து] ''.''<br />
* 2001 முதல் 2010 வரையிலான சிறந்த பத்து இந்திய எழுத்தாளர்களில் ஒருவராக எகனாமிக்ஸ் டைக்ஸ் இதழால் தேர்வு செய்யப்பட்டுள்ளா[[He was selected as one among 'Top Ten Indians of the Decade 2001 - 2010'|ர்]]<br />
* சீரோ டிகிரி 2013 யான் மிக்கால்ஸ்கி விருது நெடும்பட்டியலில் இடம்பெற்றிருந்தது (Jan Michalski)<br />
* சீரோ டிகிரி இந்தியாவின் பதினைந்து முக்கியமான இலக்கிய நூல்களின் பட்டியலில் விமர்சகர் Dessidre Fleming ஆல் பட்டியலிடப்பட்டிருந்த[https://www.mensxp.com/culture/arts/36811-15-lesser-known-yet-incredible-indian-authors-you-should-read-instead-of-chetan-bhagat-durjoy-dutta.html து]<br />
*2019 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருது சாரு நிவேதிதாவுக்கு வழங்கப்பட்டது<br />
== இலக்கிய இடம் ==<br />
தொடர்ச்சியாக கடுமையாக மறுக்கப்பட்டும், ஏற்கப்பட்டும் தமிழ் வாசகச்சூழலால் எதிர்கொள்ளப்பட்டு வருபவர் சாரு நிவேதிதா. சாரு நிவேதிதாவின் இலக்கிய இடம் அவர் ஓர் இலக்கியச் செயல்பாட்டாளர், படைப்பிலக்கியவாதி என்னும் இரு தளங்களைச் சேர்ந்தது,<br />
<br />
ஓர் இலக்கியச் செயல்பாட்டாளராக சாரு நிவேதிதா சாதாரணமாக தமிழ் நவீன இலக்கியச் சூழலில் பேசப்படாத ஐரோப்பிய, அமெரிக்க கலகக்காரப் படைப்பிலக்கியவாதிகளையும் எதிர்அழகியலை முன்வைத்தவர்களையும் அறிமுகம் செய்தார். இலக்கியத்தை இசை, ஓவியம், சினிமா ஆகியவற்றுடன் இணைத்து ஒரே கலைச்செயல்பாடாக விவாதித்தார். தொடர்ச்சியாக கட்டுரைகள், பத்திகள் வழியாக பேசி அந்த மாற்றுமரபை ஒரு வலுவான தரப்பாக தமிழில் நிலைநாட்டினார். அதை ஏற்று எழுதும் ஒரு படைப்பிலக்கியவாதிகளின் வரிசையையும் உருவாக்கினார்.<br />
<br />
படைப்பு சமூகத்தின் உண்மையையோ, ஆசிரியர் அறிந்த மெய்மையையோ முன்வைப்பது என்னும் வரையறையை மீறும் பிறழ்வெழுத்து (Transgressive Fiction) என்னும் வகைமையில் தன் நாவல்களையும் கதைகளையும் எழுதியவர் சாரு நிவேதிதா. எந்த வகையான இலக்கணங்களுக்குள்ளும் அடங்காத படைப்புக்கள் அவை. கட்டுரை, கதை, தன்வரலாறு, டைரிக்குறிப்பு ஆகிய எல்லாவற்றையும் கலந்து உருவாக்கப்பட்ட மீபுனைவு வடிவங்கள். பாலியல் மீறல்களும் அறமீறல்களும் தன்னைத்தானே ரத்துசெய்துகொள்ளும் வடிவமீறல்களும் கொண்ட படைப்புகள். <br />
<br />
“தமிழில் இன்று பிறழ்வெழுத்தின் முதன்மை உதாரணம் சாரு நிவேதிதாதான். இந்திய அளவில் நான் வாசித்தவரை இன்னொரு படைப்பாளியை தயக்கமில்லாமல் பிறழ்வெழுத்தை உருவாக்கியவர் என்று சொல்லமுடிவதில்லை. சாரு நிவேதிதாவின் எழுத்தில் விழுமியங்கள் மட்டுமல்ல புனைவின் ஒழுங்குகள் கூட சிதறிக்கிடக்கின்றன. அவற்றிலிருந்து எந்த உண்மையையும் நாம் கண்டடைய முடிவதில்லை. விழுந்துடைந்த கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல அதை நாம் பார்க்கிறோம். எந்த ஒரு நியதியைக்கொண்டு பார்த்தாலும் அவருடைய எழுத்து வெளியே கிடக்கிறது.” என்று விமர்சகர் [[ஜெயமோகன்]] குறிப்பிடுகிறார்<br />
== நூல்கள் ==<br />
====== நாவல் ======<br />
* எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்<br />
* ஸீரோ டிகிரி<br />
* ராஸ லீலா<br />
* காமரூப கதைகள்<br />
* தேகம்<br />
* எக்ஸைல்<br />
*ஔரங்கசீப்<br />
====== சிறுகதை ======<br />
* கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் - நாகார்ச்சுனன் மற்றும் சில்வியா (எம்.டி.முத்துக்குமாரசாமி) கதைகளுடன் வந்த தொகுதி<br />
* நேநோ<br />
* மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்<br />
* ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி<br />
* கடல் கன்னி (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)<br />
* ஊரின் மிக அழகான பெண் (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)<br />
====== கட்டுரைத் தொகுப்பு ======<br />
* கோணல் பக்கங்கள் - பாகம் 1<br />
* கோணல் பக்கங்கள் - பாகம் 2<br />
* கோணல் பக்கங்கள் - பாகம் 3<br />
* திசை அறியும் பறவைகள்<br />
* வரம்பு மீறிய பிரதிகள்<br />
* தப்புத் தாளங்கள்<br />
* தாந்தேயின் சிறுத்தை<br />
* மூடுபனிச் சாலை<br />
* எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது<br />
* கடவுளும் நானும்<br />
* வாழ்வது எப்படி?<br />
* மலாவி என்றொரு தேசம்<br />
* கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்<br />
* கெட்ட வார்த்தை<br />
* கடவுளும் சைத்தானும்<br />
* கலையும் காமமும்<br />
* சரசம் சல்லாபம் சாமியார்<br />
* மனம் கொத்திப் பறவை<br />
* கடைசிப் பக்கங்கள்<br />
* வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள்<br />
* பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் 1<br />
* பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் 2<br />
<br />
* பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் 3<br />
====== நாடகம் ======<br />
* ரெண்டாம் ஆட்டம்<br />
====== சினிமா விமர்சனம் ======<br />
* லத்தீன் அமெரிக்க சினிமா: ஒரு அறிமுகம்<br />
* தீராக்காதலி<br />
* கலகம் காதல் இசை<br />
* சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல்<br />
* சினிமா சினிமா<br />
* நரகத்திலிருந்து ஒரு குரல்<br />
* கனவுகளின் நடனம்<br />
====== அரசியல் ======<br />
* அஸாதி அஸாதி அஸாதி<br />
* அதிகாரம் அமைதி சுதந்திரம்<br />
* எங்கே உன் கடவுள்?<br />
====== நேர்காணல்கள் ======<br />
* ஒழுங்கின்மையின் வெறியாட்டம்<br />
* இச்சைகளின் இருள்வெளி ('பாலியல் - நளினி ஜமீலாவுடன் ஒரு உரையாடல்' புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு)<br />
====== கேள்வி பதில் ======<br />
* அருகில் வராதே<br />
* அறம் பொருள் இன்பம்<br />
====== ஆங்கிலம் ======<br />
* Zero Degree (Novel)<br />
* Marginal Man (Novel)<br />
* To Byzantium: A Turkey Travelogue<br />
* Unfaithfully Yours (Collection of articles)<br />
* Morgue Keeper (Selected short stories)<br />
* Towards a Third Cinema (Articles on Latin American Cinema)<br />
== உசாத்துணை ==<br />
* சாரு நிவேதிதா இணையதளம் https://charuonline.com/<br />
* சாரு நிவேதிதா ஆங்கில இணையதளம் https://charunivedita.com/<br />
*https://youtu.be/c3Rg_-5iI34<br />
*https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-literaryreview/the-best-of-indian-fiction/article4890205.ece<br />
*[https://www.mensxp.com/culture/arts/36811-15-lesser-known-yet-incredible-indian-authors-you-should-read-instead-of-chetan-bhagat-durjoy-dutta.html https://www.mensxp.com/culture/arts/36811-15-lesser-known-yet-incredhagat-durjoy-dutta.html]<br />
*[https://www.amazon.co.uk/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-26-MEETCHI-Issue-ebook/dp/B07PRCVQJK https://www.amazon.co.uk/%E0%AEமீட்சி 26]<br />
*[https://www.jeyamohan.in/21260/ பிறழ்வெழுத்து- சாரு நிவேதிதா- ஜெயமோகன்]<br />
*<br />
*<br />
{{finalised}}<br />
[[Category:Tamil Content]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=User:Thangapandiyan&diff=36575User:Thangapandiyan2022-05-07T10:50:27Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>[[File:Thangapandiyan.png|thumb|தங்கபாண்டியன்]]<br />
தங்கபாண்டியன் தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் பங்களிப்பாளர்.<br />
<br />
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=User:Thangapandiyan&diff=36571User:Thangapandiyan2022-05-07T10:44:27Z<p>Thangapandiyan: /* பிறப்பு, கல்வி, தொழில் */</p>
<hr />
<div>[[File:Thangapandiyan.png|thumb|தங்கபாண்டியன்]]<br />
தங்கபாண்டியன் (09 ஜூலை 1975) தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் பங்களிப்பாளர்.<br />
<br />
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE&diff=36569சாரு நிவேதிதா2022-05-07T10:38:19Z<p>Thangapandiyan: /* இரண்டாம் காலகட்டம் */</p>
<hr />
<div>[[File:சாரு நிவேதிதா.jpg|thumb|சாரு நிவேதிதா]]<br />
[[File:சாரு நிவேதிதா1.jpg|thumb|சாரு நிவேதிதா]]<br />
[[File:சாரு நிவேதிதா2.jpg|thumb|சாரு நிவேதிதா]]<br />
[[File:சாரு நிவேதிதா5.jpg|thumb|[[File:சாரு நிவேதிதா9.jpg|thumb|சாரு நிவேதிதா]]சாரு நிவேதிதா]]<br />
[[File:சாரு நிவேதிதாஒ.jpg|thumb|சாரு நிவேதிதா]]<br />
சாரு நிவேதிதா (18 டிசம்பர் 1953) தமிழ் எழுத்தாளர். தமிழில் பின்நவீனத்துவ - பின் அமைப்பியல் சார்ந்த அழகியலைக் கொண்ட எழுத்தாளர்களில் முதன்மையானவராகவும், பிறழ்வெழுத்து என்னும் இலக்கியவகைமையின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். பலதுறைசெய்திகளை இணைத்து எழுதும் கலைக்களஞ்சியத்தன்மை, எழுத்தைப்பற்றியே எழுதும் மீபுனைவுத்தன்மை, அனைத்தையும் விளையாட்டாக ஆக்கும் தன்மை, ஒழுக்கவியல் எல்லைகளையும் அரசியல்சரிநிலைகளையும் மீறிச்செல்லும் தன்மை, அமைப்புகளுக்கு எதிரான கலகத்தன்மை ஆகியவற்றைக் கொண்ட எழுத்துக்களை எழுதியவராக அறியப்படுகிறார். <br />
== பிறப்பு, கல்வி ==<br />
சாரு நிவேதிதாவின் இயற்பெயர் அறிவழகன். அரசுவேலையில் இருந்தமையால் சாரு நிவேதிதா என்று பெயர் சூட்டிக்கொண்டார். அக்காலகட்டத்தில் இடதுசாரி புரட்சிகர இயக்கங்களின் ஆதராவாளராக இருந்தமையால் நக்ஸலைட் இயக்கத்தின் கோட்பாட்டாளரும் நிறுவனருமான துசாரு மஜூம்தாரின் பெயரில் இருந்து தன் பெயரை உருவாக்கிக் கொண்டார். திருவாரூர் அருகிலுள்ள இடும்பாவனம் என்னும் ஊரில் ஜி.கிருஷ்ணசாமி- பார்வதி இணையருக்கு 18 டிசம்பர் 1953 ல் சாரு நிவேதிதா பிறந்தார். நாகூரில் பள்ளிக் கல்வியை முடித்தார். காரைக்காலில் புகுமுக வகுப்பை முடித்து தஞ்சாவூரில் பி.எஸ்ஸி. இயற்பியல் பயின்றார். படிப்பை முடிக்காமல் அரசுவேலையில் சேர்ந்தார். தஞ்சாவூரில் சாரு நிவேதிதாவுக்கு இயற்பியல் ஆசிரியராக இருந்தவர் [[அ. மார்க்ஸ்]]<br />
== தனிவாழ்க்கை ==<br />
சாரு நிவேதிதா மொழிபெயர்ப்பாளரும் இடதுசாரி செயல்பாட்டாளருமான விசாலாட்சியுடன் இணைந்து வாழ்ந்தார். அவர்களுக்கு ஒரு மகள், ரேஷ்மா. பின்னர் 1992 ல் டி. ஜி. சுகந்தா (அவந்திகா)வை மணந்தார். சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்வில் வென்று மத்திய அரசுப்பணியில் இடைநிலை ஊழியராகச் சேர்ந்தார். சென்னையில் சிறைத்துறை இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் உதவியாளராகச் சேர்ந்தார். அதன்பின் டெல்லியில் பொதுவினியோகத்துறையில் பணியாற்றினார். சென்னை திரும்பி தபால்துறை மேலாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றினார். 2001ல் விருப்ப ஓய்வுபெற்றார்.<br />
== இலக்கியவாழ்க்கை ==<br />
சாரு நிவேதிதாவின் இலக்கியவாழ்க்கை மூன்று காலகட்டங்களால் ஆனது. <br />
====== முதற் காலகட்டம் ======<br />
சாரு நிவேதிதா தொடக்கத்திலேயே தமிழ் சிற்றிதழ் சார்ந்து இயங்கிய நவீன இலக்கியத்துடன் விலக்கம் கொண்டிருந்தார். இடதுசாரி இயக்கங்களுடன் அணுக்கம் கொண்டவராகவும், சிறு குழுவுக்குள் எழுதப்படும் நவீன எழுத்துக்கள் பயனற்றவை என்னும் எண்ணம் கொண்டவராகவும் இருந்தார். தமிழ் நவீன இலக்கியம் என்பது நவீனத்துவ இலக்கியமே என்றும், அது சமூகப்போக்குகள் அரசியலியக்கங்கள் ஆகியவற்றை பற்றிய கவலை இன்றி தனிமனித அகஅவசங்களை மட்டுமே கருத்தில் கொள்வது என்றும் விமர்சித்தார். அந்தத் தனிமனித அகஅவசங்கள் தமிழ்ச்சூழலில் உருவான வெகுஜன அரசியல் மாற்றங்களால் ஒதுக்கப்பட்ட உயர்குடியினருக்கு உரியவை, பெரும்பாலும் பொய்யாகவும் மிகையாகவும் கற்பனை செய்யப்படுபவை, சிறு வட்டத்திற்குள் தங்களுக்குள் புழங்குபவை என்று கூறினார். இதைச் சுட்ட அவர் உருவாக்கிய ‘தயிர்சாத நுண்ணுணர்வு’ என்னும் கேலிச்சொல் பின்னர் புகழ்பெற்றது <br />
<br />
சாரு நிவேதிதா பொதுவாசிப்புக்குரிய சாவி இதழில் 19--ல் நிவேதிதா என்ற பெயரில் எழுதிய கனவுகள் சிதைதல் என்பது முதல் படைப்பு. பின்னர் தினமலர் வாரமலர் போன்ற பொதுவாசிப்புக்குரிய இதழ்களில் எளிய கதைகளை எழுதினார். தொடர்ந்து நவீனத்தமிழிலக்கியம் மீது கடுமையான ஒவ்வாமையையும் விமர்சனத்தையும் முன்வைத்துக் கொண்டும் இருந்தார். 1982ல் [[சுந்தர ராமசாமி]]யின் [[ஜே.ஜே.சில குறிப்புகள்]] நாவல் வெளிவந்தபோது சாரு நிவேதிதா அதை மிகக்கடுமையாக விமர்சனம் செய்து சிறு வெளியீடொன்றை தன் செலவில் பிரசுரித்தார். அதில் ஜே.ஜே.சில குறிப்புகள் நவீனத்துவத்தின் தனிமனிதவாதம், குறுங்குழுவாதம் ஆகியவற்றை முன்வைக்கிறது என்றும் அது ஃபாசிசத்திற்கு மிக அணுக்கமான பார்வை என்றும், மார்க்ஸியம் உட்பட எல்லாவகையான புரட்சிகர அரசியல்செயல்பாடுகளையும் அது கேலிசெய்து சிறுமைக்குள்ளாக்குகிறது என்றும் கண்டித்திருந்தார். <br />
<br />
இக்காலகட்டத்தில் சாரு நிவேதிதா டெல்லியின் தெருநாடக இயக்கங்களுடன் தொடர்பிலிருந்தார். சார்த்ர் முன்வைத்த புரட்சிகர அரசியல் பற்றிய சிறு நூல் ஒன்றை எழுதினார். பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள் வழியாக தீவிர இடதுசாரி அரசியல் பார்வையை முன்வைத்தார். அன்று அதிகமாக பேசப்பட்ட இருத்தலியல் கருத்துக்களின் தீவிரமான எதிரியாக அறியப்பட்டார்.<br />
====== இரண்டாம் காலகட்டம் ======<br />
டெல்லியில் இருந்து சென்னைக்கு பணிமாறுதலாகி வந்தபோது சாரு நிவேதிதாவுக்கு [[ரமேஷ் பிரேதன்]], [[பிரேம்]], [[நாகார்ஜுனன்]] ஆகியோரின் நட்பு உருவானது. அவர்களுடன் இணைந்து பின்நவீனத்துவ - பின் அமைப்பு வாத சிந்தனைகளில் ஈடுபாடு உருவானது. பாண்டிச்சேரியில் இருந்து வெளியான நிறப்பிரிகை இதழுடன் இணைந்து செயல்பட்டார். [[நிறப்பிரிகை]] இடதுசாரிச் சிந்தனைகளையும், பெரியாரியச் சிந்தனைகளையும் பின்நவீனத்துவ பார்வையுடன் இணைக்கும் முயற்சியை முன்னெடுத்த இதழ். <br />
<br />
பின்நவீனத்துவம் மீதான ஈடுபாடு சாரு நிவேதிதாவை நேர்கோடற்ற எழுத்து முறை, மீபுனைவு எழுத்துமுறை ஆகியவற்றில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. 1988- ல் மீட்சி 26 ஆவது இதழில் வெளிவந்த ‘கிரிக்கெட்டை முன்வைத்து புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொல்லிக் கொண்டது ‘ என்னும் சிறுகதை அத்தகைய இலக்கிய வடிவங்களுக்கு முன்னோடியானது. (முனியாண்டி என்ற பெயரில் வெளியானது) அது நவீனத்துவ எழுத்துமுறையையும் அதன் அகச்சித்தரிப்புகளையும் கேலிசெய்து நிராகரிக்கிறது. கதையை தன்னைத்தானே மறுத்துக்கொண்டு நகரும் ஒருவகை உரையாடலாக ஆக்கிக் காட்டுகிறது.<br />
<br />
நேர்கோடற்ற, மீபுனைவு முறையில் சாரு நிவேதிதா எழுதிய ‘எக்ஸிஸ்டென்ஷலிசமும் ஃபேன்சி பனியனும்’ என்னும் முதல் நாவல் அவருடைய முந்தைய இடதுசாரிப் பார்வையை கேலிசெய்து நிராகரிக்கிறது. இடதுசாரிப் பார்வையிலுள்ள தன்முனைப்பு, ஒழுக்கவியல் பார்வை ஆகியவற்றை நிராகரித்து அனைத்துக்கும் எதிரான கலகத்தை முன்வைக்கிறது. அதைத் தொடர்ந்து சாரு நிவேதிதா எழுதிய ஸீரோ டிகிரி அவருடைய நாவல்களில் முதன்மையானது என விமர்சகர்களால் கருதப்படுகிறது. டைரி போன்ற குறிப்புகள், வெட்டி ஒட்டியதுபோன்ற செய்தித்துணுக்குகள், கட்டற்ற உரைநடைப்பகுதிகள் என கலவைவடிவில் அமைந்த இந்நாவல் தன்னையும் புறத்தையும் மறுக்கும் கலகத்தை முன்வைப்பது. வெவ்வேறு ஒவ்வாமைகள் வழியாக தன் காலகட்டத்தை எதிர்கொள்ளும் நாவல் இது <br />
<br />
சாரு நிவேதிதாவின் இந்த இரண்டாம் காலகட்டத்தின் முகப்பு நூல் என சொல்லத்தக்கது அவர் விகடன் இணைய இதழில் எழுதிய கோணல் பக்கங்கள். அது ஜான் ஜெனே, மார்க்கி டி ஸாத், கேத்தி ஆக்கர், அந்தோனின் ஆர்த்தோ போன்ற உலகம் முழுக்க வகுக்கப்பட்ட எல்லைகளை மீறிச்சென்ற எழுத்தாளர்களையும்; இசைமரபுகளை உடைத்துச் சென்ற Cradle of Filth போன்ற மாற்று இசைப்போக்குகளையும் அறிமுகம் செய்து அவற்றைi இணைத்து தமிழில் அறியப்படாதிருந்த ஒரு வெளியை உருவாக்கியது. சாரு நிவேதிதாவை நோக்கி ஏராளமான இளைஞர்கள் வருவதற்கு வழியமைத்தது அக்கட்டுரைத்தொடர். <br />
[[File:சாரு- அவந்திகா.jpg|thumb|சாரு- அவந்திகா]]<br />
====== மூன்றாம் காலகட்டம் ======<br />
ஸீரோ டிகிரி நாவலின் வழியாகவே சாரு நிவேதிதா இரண்டாம் காலகட்டத்தைக் கடந்து வந்தார். அந்நாவல் அதன் முடிவில் கதைசொல்லியின் மகள் சார்ந்த உணர்வுகள் வழியாக ஓர் மதம்சாரா ஆன்மிகத்தை தொட்டது. மூன்றாம் காலகட்டம் அந்த உணர்வுகளில் இருந்து உருவானது. இக்காலகட்டத்தில் சாரு நிவேதிதா வெவ்வேறு ஆன்மிகவாதிகளை கருத்தில்கொள்ளவும், முன்பு அவர் பொருட்படுத்தாத செவ்வியல் இசை போன்றவற்றை உள்வாங்கவும் முயன்றார். எதிர்நிலைகளினூடாகச் சென்றடையும் ஓர் ஆன்மிகத்தை முன்வைக்கும் காலகட்டம் இது . அழகியல், அறம் போன்ற முன்பு அவர் ஏளனம் செய்து விலக்கிய சொற்களை தனக்குரிய பொருளில் பயன்படுத்தத் தொடங்கினார். தமிழ் நவீன இலக்கியத்தில் அவர் முழுமையாக நிராகரித்த [[புதுமைப்பித்தன்]], [[ந. பிச்சமூர்த்தி]], [[கு. அழகிரிசாமி]] முதலிய படைப்பாளிகளை மறுபரிசீலனை செய்து அவர்களில் தனக்கு உவப்பான பகுதிகளை அடையாளம் காட்டிய பழுப்புநிறப் பக்கங்கள் என்னும் நூலை எழுதினார். எக்ஸைல் என்னும் நாவல் இந்தக் காலகட்டத்தின் முகப்புநூல்.<br />
== விவாதங்கள் ==<br />
1982ல் சாரு நிவேதிதா [[சுந்தர ராமசாமி]] எழுதிய ஜே.ஜே.சில குறிப்புகளை கடுமையாக கண்டித்து வெளியிட்ட பிரசுரம் விரிவான விவாதத்திற்கு ஆளாகியது<br />
<br />
1992-ஆம் ஆண்டில் மதுரையில் சாரு நிவேதிதா தன் நண்பர்களுடன் இணைந்து நடத்திய ரெண்டாவது ஆட்டம் என்னும் நாடகம் ஒழுக்க எல்லைகளை மீறியது என குற்றம் சாட்டப்பட்டு அரங்கிலிருந்த சிலரால் தாக்கப்பட்டார்<br />
<br />
2010 ல் சர்ச்சைக்குரிய துறவியான நித்யானந்தாவை ஆதரித்து சாரு நிவேதிதா கட்டுரைகள் எழுதினார். நித்யானந்தா ஒரு பாலியல் குற்றச்சாட்டில் கைதானபோது அவரை விமரிசித்து ‘சரசம் சல்லாபம் சாமியார்’ என்ற பெயரில் எழுதிய கட்டுரைகளுக்காக நித்யானந்தா குற்றவழக்குகள் தொடர்ந்தார்.<br />
<br />
2015ல் [[பெருமாள் முருகன்]] அவர் எழுதிய திருச்செங்கோடு என்னும் நாவல் ஒரு குறிப்பிட்ட சாதியினரை இழிவுசெய்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டு எதிர்க்கப்பட்டபோது சாரு நிவேதிதா பெருமாள் முருகனுக்கு எதிரான நிலைபாடு எடுத்தார். மக்களின் உணர்வுகளுக்கு எதிராக எழுதுவது கலகமோ புரட்சியோ அல்ல, அதிகார அமைப்புகளுக்கு எதிராகவே எழுத்தாளன் எழுதவேண்டும், கருத்துச்சுதந்திரத்தின் எல்லை அது என்று கூறினார்.<br />
== விருதுகள்,ஏற்புகள் ==<br />
* சீரோ டிகிரி சந்த்ரா சித்தன் மற்றும் பிரதீப் செபாஸ்டியன் தேர்வு செய்த ஐம்பது இந்திய படைப்பிலக்கிய நூல்கள் என்னும் பட்டியலில் இடம்பெற்றுள்ள[https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-literaryreview/the-best-of-indian-fiction/article4890205.ece து] ''.''<br />
* 2001 முதல் 2010 வரையிலான சிறந்த பத்து இந்திய எழுத்தாளர்களில் ஒருவராக எகனாமிக்ஸ் டைக்ஸ் இதழால் தேர்வு செய்யப்பட்டுள்ளா[[He was selected as one among 'Top Ten Indians of the Decade 2001 - 2010'|ர்]]<br />
* சீரோ டிகிரி 2013 யான் மிக்கால்ஸ்கி விருது நெடும்பட்டியலில் இடம்பெற்றிருந்தது (Jan Michalski)<br />
* சீரோ டிகிரி இந்தியாவின் பதினைந்து முக்கியமான இலக்கிய நூல்களின் பட்டியலில் விமர்சகர் Dessidre Fleming ஆல் பட்டியலிடப்பட்டிருந்த[https://www.mensxp.com/culture/arts/36811-15-lesser-known-yet-incredible-indian-authors-you-should-read-instead-of-chetan-bhagat-durjoy-dutta.html து]<br />
*2019 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருது சாரு நிவேதிதாவுக்கு வழங்கப்பட்டது<br />
== இலக்கிய இடம் ==<br />
தொடர்ச்சியாக கடுமையாக மறுக்கப்பட்டும், ஏற்கப்பட்டும் தமிழ் வாசகச்சூழலால் எதிர்கொள்ளப்பட்டு வருபவர் சாரு நிவேதிதா. சாரு நிவேதிதாவின் இலக்கிய இடம் அவர் ஓர் இலக்கியச் செயல்பாட்டாளர், படைப்பிலக்கியவாதி என்னும் இரு தளங்களைச் சேர்ந்தது,<br />
<br />
ஓர் இலக்கியச் செயல்பாட்டாளராக சாரு நிவேதிதா சாதாரணமாக தமிழ் நவீன இலக்கியச் சூழலில் பேசப்படாத ஐரோப்பிய, அமெரிக்க கலகக்காரப் படைப்பிலக்கியவாதிகளையும் எதிர்அழகியலை முன்வைத்தவர்களையும் அறிமுகம் செய்தார். இலக்கியத்தை இசை, ஓவியம், சினிமா ஆகியவற்றுடன் இணைத்து ஒரே கலைச்செயல்பாடாக விவாதித்தார். தொடர்ச்சியாக கட்டுரைகள், பத்திகள் வழியாக பேசி அந்த மாற்றுமரபை ஒரு வலுவான தரப்பாக தமிழில் நிலைநாட்டினார். அதை ஏற்று எழுதும் ஒரு படைப்பிலக்கியவாதிகளின் வரிசையையும் உருவாக்கினார்.<br />
<br />
படைப்பு சமூகத்தின் உண்மையையோ, ஆசிரியர் அறிந்த மெய்மையையோ முன்வைப்பது என்னும் வரையறையை மீறும் பிறழ்வெழுத்து (Transgressive Fiction) என்னும் வகைமையில் தன் நாவல்களையும் கதைகளையும் எழுதியவர் சாரு நிவேதிதா. எந்த வகையான இலக்கணங்களுக்குள்ளும் அடங்காத படைப்புக்கள் அவை. கட்டுரை, கதை, தன்வரலாறு, டைரிக்குறிப்பு ஆகிய எல்லாவற்றையும் கலந்து உருவாக்கப்பட்ட மீபுனைவு வடிவங்கள். பாலியல் மீறல்களும் அறமீறல்களும் தன்னைத்தானே ரத்துசெய்துகொள்ளும் வடிவமீறல்களும் கொண்ட படைப்புகள். <br />
<br />
“தமிழில் இன்று பிறழ்வெழுத்தின் முதன்மை உதாரணம் சாரு நிவேதிதாதான். இந்திய அளவில் நான் வாசித்தவரை இன்னொரு படைப்பாளியை தயக்கமில்லாமல் பிறழ்வெழுத்தை உருவாக்கியவர் என்று சொல்லமுடிவதில்லை. சாரு நிவேதிதாவின் எழுத்தில் விழுமியங்கள் மட்டுமல்ல புனைவின் ஒழுங்குகள் கூட சிதறிக்கிடக்கின்றன. அவற்றிலிருந்து எந்த உண்மையையும் நாம் கண்டடைய முடிவதில்லை. விழுந்துடைந்த கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல அதை நாம் பார்க்கிறோம். எந்த ஒரு நியதியைக்கொண்டு பார்த்தாலும் அவருடைய எழுத்து வெளியே கிடக்கிறது.” என்று விமர்சகர் [[ஜெயமோகன்]] குறிப்பிடுகிறார்<br />
== நூல்கள் ==<br />
====== நாவல் ======<br />
* எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்<br />
* ஸீரோ டிகிரி<br />
* ராஸ லீலா<br />
* காமரூப கதைகள்<br />
* தேகம்<br />
* எக்ஸைல்<br />
*ஔரங்கசீப்<br />
====== சிறுகதை ======<br />
* கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் - நாகார்ச்சுனன் மற்றும் சில்வியா (எம்.டி.முத்துக்குமாரசாமி) கதைகளுடன் வந்த தொகுதி<br />
* நேநோ<br />
* மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்<br />
* ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி<br />
* கடல் கன்னி (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)<br />
* ஊரின் மிக அழகான பெண் (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)<br />
====== கட்டுரைத் தொகுப்பு ======<br />
* கோணல் பக்கங்கள் - பாகம் 1<br />
* கோணல் பக்கங்கள் - பாகம் 2<br />
* கோணல் பக்கங்கள் - பாகம் 3<br />
* திசை அறியும் பறவைகள்<br />
* வரம்பு மீறிய பிரதிகள்<br />
* தப்புத் தாளங்கள்<br />
* தாந்தேயின் சிறுத்தை<br />
* மூடுபனிச் சாலை<br />
* எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது<br />
* கடவுளும் நானும்<br />
* வாழ்வது எப்படி?<br />
* மலாவி என்றொரு தேசம்<br />
* கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்<br />
* கெட்ட வார்த்தை<br />
* கடவுளும் சைத்தானும்<br />
* கலையும் காமமும்<br />
* சரசம் சல்லாபம் சாமியார்<br />
* மனம் கொத்திப் பறவை<br />
* கடைசிப் பக்கங்கள்<br />
* வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள்<br />
* பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் 1<br />
* பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் 2<br />
<br />
* பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் 3<br />
====== நாடகம் ======<br />
* ரெண்டாம் ஆட்டம்<br />
====== சினிமா விமர்சனம் ======<br />
* லத்தீன் அமெரிக்க சினிமா: ஒரு அறிமுகம்<br />
* தீராக்காதலி<br />
* கலகம் காதல் இசை<br />
* சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல்<br />
* சினிமா சினிமா<br />
* நரகத்திலிருந்து ஒரு குரல்<br />
* கனவுகளின் நடனம்<br />
====== அரசியல் ======<br />
* அஸாதி அஸாதி அஸாதி<br />
* அதிகாரம் அமைதி சுதந்திரம்<br />
* எங்கே உன் கடவுள்?<br />
====== நேர்காணல்கள் ======<br />
* ஒழுங்கின்மையின் வெறியாட்டம்<br />
* இச்சைகளின் இருள்வெளி ('பாலியல் - நளினி ஜமீலாவுடன் ஒரு உரையாடல்' புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு)<br />
====== கேள்வி பதில் ======<br />
* அருகில் வராதே<br />
* அறம் பொருள் இன்பம்<br />
====== ஆங்கிலம் ======<br />
* Zero Degree (Novel)<br />
* Marginal Man (Novel)<br />
* To Byzantium: A Turkey Travelogue<br />
* Unfaithfully Yours (Collection of articles)<br />
* Morgue Keeper (Selected short stories)<br />
* Towards a Third Cinema (Articles on Latin American Cinema)<br />
== உசாத்துணை ==<br />
* சாரு நிவேதிதா இணையதளம் https://charuonline.com/<br />
* சாரு நிவேதிதா ஆங்கில இணையதளம் https://charunivedita.com/<br />
*https://youtu.be/c3Rg_-5iI34<br />
*https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-literaryreview/the-best-of-indian-fiction/article4890205.ece<br />
*[https://www.mensxp.com/culture/arts/36811-15-lesser-known-yet-incredible-indian-authors-you-should-read-instead-of-chetan-bhagat-durjoy-dutta.html https://www.mensxp.com/culture/arts/36811-15-lesser-known-yet-incredhagat-durjoy-dutta.html]<br />
*[https://www.amazon.co.uk/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-26-MEETCHI-Issue-ebook/dp/B07PRCVQJK https://www.amazon.co.uk/%E0%AEமீட்சி 26]<br />
*[https://www.jeyamohan.in/21260/ பிறழ்வெழுத்து- சாரு நிவேதிதா- ஜெயமோகன்]<br />
*<br />
*<br />
{{finalised}}<br />
[[Category:Tamil Content]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=Main_Page_(English)&diff=36463Main Page (English)2022-05-07T04:36:12Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>{{DISPLAYTITLE:Tamil Wiki}}<br />
<div style="text-align:right;"><br />
[[தமிழ் விக்கி|'''''கலைக்களஞ்சியம் - தமிழில்''''']]<br />
</div><br />
{| class="wikitable" style="width: 85%;margin: auto; background-color:#F5FAFF;"<br />
|'''[[Literary_Tamil_Wiki:Board_of_Editors|Board of Editors]]'''<br />
|'''Page Categories'''<br />
|'''Participate'''<br />
|'''[[Literary_Tamil_Wiki:Contact|Contact]]'''<br />
|}<br />
[[File:TamilWiki Logo.jpg|left|180x180px|border]]<br />
Tamil wiki is an online encyclopedia that seeks to grow through public collaboration. It is a repository of information about Tamil literature, art and culture. The goal of Tamil wiki is not to just document data, but to write about various topics in clear, precise language and include photographs and other media that create an immersive reading experience for the reader. Tamil wiki provides extensive internal links, connecting a topic to every other related topic, thus creating a complete knowledge map. Readers will find the substantial references and links provided under each article helpful in their research.<br />
<br />
This public wiki welcomes readers to contribute suggestions and edits to articles. All submissions are checked for accuracy by our board of editors comprised of academics and senior writers and published upon approval by the advisory team. <br />
<br />
All the articles on Tamil wiki are being translated into English so that a central repository of information on Tamil literature, art and culture is made available to the English reader. Tamil wiki invites readers with a strong grasp of both languages to contribute to our ongoing translation work. <br />
== Board of Editors ==<br />
{| class="wikitable"<br />
|- style="vertical-align:middle; background-color:#F5FFFA;"<br />
| style="width:130px; text-align:center;" rowspan="2" |'''General Editor'''<gallery mode="nolines" widths="130"><br />
File:அ.கா.பெருமாள்.png|[[A.K. Perumal]] <br />
</gallery><br />
|'''Editors - Academia'''<gallery mode="nolines" widths="140" heights="140"><br />
File:Maunaguru home 1.jpg|'''Professor [[Maunaguru]]'''<br />
File:M Subramaniam 2.jpg|'''Professor [[M. Subramoniam]]'''<br />
File:Sivakumaran.a ra.jpg|'''Professor [[A.Ra.Sivakumaran]]'''<br />
File:TV Jegatheesan.jpg|'''Professor [[T.V.Jegatheesan]]'''<br />
File:P Saravanan Madurai.jpg|'''[[P. Saravanan]]''' <br />
</gallery><br />
|-style="vertical-align:middle; background-color:#F5FFFA;"<br />
|'''Editors - Creative Writers''' <gallery mode="nolines" heights="140" widths="140"><br />
File:Nanjilnadan 150.jpg|'''[[Nanjil Nadan]]'''<br />
File:Cho dharuman 150.jpg|'''[[Cho Dharman]]'''<br />
File:Suneel Krishnan 3.jpg|'''[[Suneel Krishnan]]'''<br />
File:Jeyamohan 150.jpg|'''[[Jeyamohan]]'''<br />
File:Suchitra 150px.jpg|'''[[Suchitra]]''' <br />
</gallery><br />
|}<br />
== Content ==<br />
{|class="wikitable" style="width: 100%;"<br />
|style="width: 80%" |<br />
{| class="wikitable" style="margin: auto;"<br />
|+Categories<br />
|'''Literature'''<br />
|'''Art'''<br />
|'''Culture'''<br />
|-<br />
|Personalities<br />
* Novelists<br />
* Short Story writers<br />
|Music<br />
* Carnatic/Classical Music <br />
|Magazines, Journals<br />
* Children's magazines<br />
|-<br />
|Literary Forms<br />
* Novels<br />
|<br />
|<br />
|-<br />
|Diaspora Literature<br />
Regional Literature<br />
|<br />
|<br />
|}<br />
|style="width: 20%" |<br />
{| class="wikitable"<br />
|+Pages in Alphabetical order<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=A&to=B&namespace=0 A]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=B&to=C&namespace=0 B]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=C&to=D&namespace=0 C]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=D&to=E&namespace=0 D]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=E&to=F&namespace=0 E]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=F&to=G&namespace=0 F]<br />
|-<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=G&to=H&namespace=0 G]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=H&to=I&namespace=0 H]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=I&to=J&namespace=0 I]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=J&to=K&namespace=0 J]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=K&to=L&namespace=0 K]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=L&to=M&namespace=0 L]<br />
|-<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=M&to=N&namespace=0 M]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=N&to=O&namespace=0 N]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=O&to=P&namespace=0 O]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=P&to=Q&namespace=0 P]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=Q&to=R&namespace=0 Q]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=R&to=S&namespace=0 R]<br />
|-<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=S&to=T&namespace=0 S]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=T&to=U&namespace=0 T]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=U&to=V&namespace=0 U]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=V&to=W&namespace=0 V]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=W&to=X&namespace=0 W]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=X&to=Y&namespace=0 X]<br />
|-<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=Y&to=Z&namespace=0 Y]<br />
|[https://tamil.wiki/wiki/Special:AllPages?from=Z&to=&namespace=0 Z]<br />
|}<br />
|}<br />
== Coordinators ==<br />
{| class="wikitable" style="margin: auto; background-color:#F5FFFA;"<br />
|+<br />
|-<br />
|[[File:Chaidhanya2.jpg|150x150px|link=சைதன்யா|[[சைதன்யா|'''Je. Chaidhanya''']]|center|thumb]]<br />
|[[File:Santhosh Saravanan.jpg|link=சந்தோஷ் சரவணன்|center|thumb|150x150px|'''[[சந்தோஷ் சரவணன்|Santhosh Saravanan]]''']]<br />
|[[File:மதுசூதனன் சம்பத்.jpg|link=மதுசூதனன் சம்பத்|150x150px|[[மதுசூதனன் சம்பத்|'''Madhusudhanan Sampath''']]|center|thumb]]<br />
|}<br />
{| class="wikitable" style="margin: auto; background-color:#F5FAFF;"<br />
|+<br />
|'''[[பங்களிப்பாளர்கள் - Contributors|Contributors]]'''<br />
|'''[[தொழில்நுட்ப குழு Technical Team|Technical Team]]'''<br />
|}<br />
[[Category:Main Page]]<br />
__NOTOC__</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=User:Thangapandiyan&diff=36130User:Thangapandiyan2022-05-05T07:34:49Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>[[File:Thangapandiyan.png|thumb|தங்கபாண்டியன்]]<br />
தங்கபாண்டியன் (09 ஜூலை 1975) தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் பங்களிப்பாளர்.<br />
== பிறப்பு, கல்வி, தொழில் ==<br />
தங்கபாண்டியன் (09 ஜூலை 1975) கள்ளக்குறிச்சி மாவட்டம், பெத்தாசமுத்திரம் கிராமத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியை சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் இளங்கலை கால்நடை மருத்துவமும், கால்நடை நோய்க்குறியியல் துறையில் முதுகலையும் முனைவர் படிப்பும் முடித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%A4.%E0%AE%A8%E0%AE%BE.%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&diff=36128த.நா.குமாரசாமி2022-05-05T06:17:37Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>[[File:Tha.waa.jpg|thumb|த.நா.குமாரசாமி]]<br />
த.நா. குமாரசாமி (தண்டலம் நாராயணசாமி குமாரசாமி) (த.நா.குமாரசுவாமி) (த.நா.குமாரஸ்வாமி) (டிசம்பர் 24, 1907 - செப்டம்பர் 17, 1982) தமிழில் நாவல், சிறுகதை ஆகியவற்றை எழுதிய எழுத்தாளர். முதன்மையாக வங்கமொழி நாவல்களை மொழியாக்கம் செய்தவராக அறியப்படுகிறார். இதழாளர், பல நவீன இலக்கியப் படைப்புக்களை செம்மைசெய்து உதவியவர்.<br />
== பிறப்பு, கல்வி ==<br />
த. நா. குமாரசாமி, தண்டலம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த நாராயண சாஸ்திரி - ராஜம்மாள் தம்பதியருக்கு டிசம்பர் 24, 1907-ல் மகனாகப் பிறந்தவர். த.நா.குமாரசாமியின் தந்தை நாராயண சாஸ்திரியும் ஓர் எழுத்தாளர். போஜ சாத்திரம் என்னும் நாடகத்தை எழுதியவர். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு எழுத்தாளரான த. நா. சேனாபதி இவருடைய மூத்த சகோதரர். த.நா.குமாரசாமி சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று பி.ஏ பட்டம் பெற்றார். சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.<br />
== தனிவாழ்க்கை ==<br />
[[File:Tnk.png|thumb|த.நா.குமாரசாமி]]<br />
த.நா.குமாரசாமி 1925-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ருக்மணியை திருமணம் செய்து கொண்டார். த.நா. குமாரசுவாமியின் மகன் த.கு. அஸ்வின்குமார் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் எழுதிய ''சிந்தனை செயல் சாதனை'' எனும் நூல் 1987-ல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. அஸ்வின்குமார் சென்னை வானொலி நிலைய உதவி இயக்குநராக பணியாற்றினார்.<br />
== இலக்கியவாழ்க்கை ==<br />
1930-ல் வங்கம் சென்று, சாந்தி நிகேதனில் இரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். தான் மொழியாக்கம் செய்த கவிதைகளை காட்டி வாழ்த்து பெற்றார். த.நா. குமாரசாமி 1934-ஆம் ஆண்டு ’கன்னியாகுமரி’ என்ற முதல் கதையை தினமணியில் எழுதினார்.1947 – 1948-ஆம் ஆண்டுகளில் மாத இதழ் ஒன்றைத் தொடங்கி சில மாதங்கள் நடத்தினார். காந்தியின் நூல்களைத் தமிழ்ப்படுத்தும் குழுவில் மொழியாக்கப் பணியில் ஈடுபட்டு, முதல் தொகுதி தயாராகும் வரையில் பணியாற்றினார் . அக்குழுவின் தலைவருக்கும் அவருக்கும் குஜராத்திச் சொல்லொன்றைத் தமிழாக்கம் செய்வதில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாகப் பதவி விலகினார்."கருத்துகள் உள்ளது உள்ளபடி மொழிபெயர்க்கும் அதிகாரம்தான் நமக்கு உண்டே ஒழிய, நம் மனம் போனபடி மொழிபெயர்க்கும் உரிமை நமக்குக் கிடையாது. அதனால்தான் அந்தக் காலத்திலேயே ஐநூறு ரூபாய் ஊதியம் தந்த அந்தப் பணியை விட்டுவிட்டேன்’ என்று அதை அவர் குறிப்பிட்டார்.<br />
[[File:Tnk2.png|thumb|த.நா.குமாரசாமி]]<br />
த.நா.குமாரசாமி 1962-ஆம் ஆண்டு எழுத்தாளர்கள் பரிவர்த்தனத் திட்டப்படி தமிழ் எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என்ற தகுதியில், வங்க மொழி எழுத்தாளர் நிகார் ரஞ்சன் ரே, அசாமிய எழுத்தாளர் ஹேம் காந்த் பரூவா ஆகியோருடன் இரண்டு மாதம் சோவியத் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார் . முதன்மையாக மொழியாக்கத்தில் ஈடுபட்டார். அவருடைய வங்க நூல்களின் மொழியாக்கங்கள் புகழ்பெற்றவை ‘ஒரு மொழியின் இலக்கியத்தில் புதிய கருத்துகள், புதிய உவமைகள், புதிய சொற்கள் புகுவதனாலேயே அம்மொழி வளர்ச்சியும் செழுமையும் பெறுகிறது. ஒரே ஒரு வழியுடைய அறையில் இருந்தால் புழுங்கித்தான் போக வேண்டும். சுற்றுப்புறத்தில் சாளரங்கள் இருந்தால்தான் நல்லன உள்ளே புகவும், நம்மைப் பற்றி பிறர் அறியவும் வழி ஏற்படும்’ என அவர் எழுதினார். த.நா.குமாரசாமியின் படைப்புகளைத் தமிழக அரசு 2006 - 2007-ஆம் நிதியாண்டில் நாட்டுடைமை ஆக்கியிருக்கிறது<br />
== விருதுகள் ==<br />
வங்க அரசு, தமிழ் – வங்க மொழிக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டி "நேதாஜி இலக்கிய விருது" அளிதது. தமிழக விருதுகள் எவையும் கிடைக்கவில்லை.<br />
== மறைவு ==<br />
த.நா.கு. தமது 75-வது வயதில் செப்டம்பர் 17, 1982 அன்று காலமானார்.<br />
== நூல்கள் ==<br />
====== சிறுகதை ======<br />
* கன்யாகுமாரி<br />
* குழந்தை மனம்<br />
* சக்தி வேல்<br />
* தேவகி<br />
* மோகினி<br />
* பிள்ளைவரம்<br />
* போகும் வழியில்<br />
* வஸந்தா<br />
* கதைக்கொடி<br />
* அன்னபூரணி<br />
* கதைக் கோவை-3<br />
* கதைக் கோவை-4<br />
* இக்கரையும் அக்கரையும்<br />
* நீலாம்பரி<br />
* சந்திரகிரகணம்<br />
====== நாவல் ======<br />
* ராஜகுமாரி விபா<br />
* சந்திரிகா<br />
* இல்லொளி<br />
* மனைவி<br />
* உடைந்தவளையல்<br />
* ஶ்ரீகண்டனின் புனர்ஜன்மம்<br />
* தீனதயாளு<br />
* மிருணாளினி<br />
* இந்திரா<br />
* தேவதாஸ்<br />
* ஸெளதாமினி<br />
* லலிதா<br />
* கானல் நீர்<br />
* அன்பின் எல்லை<br />
* ஒட்டுச்செடி<br />
* வீட்டுப்புறா<br />
====== மொழிபெயர்ப்பு ======<br />
* கோரா – ரவீந்திரநாத் தாகூர்<br />
* புயல் - ரவீந்திரநாத் தாகூர்<br />
* விஷ விருட்சம் – பக்கிம் சந்திரர்<br />
* இளைஞனின் கனவு – நேதாஜி சுபாஸ்சந்திர போசு<br />
* ஆரோக்கிய நிகேதனம் - தாராசங்கர் பந்தோபாத்தியாய்<br />
* பொம்மலாடம் - ”''புதுல் நாச்சார் கி இதிகதா”,'' வங்காளி, மாணிக் பந்தோபாத்யாய<br />
* வினோதினி - இரபீந்திரநாத் தாகூர்)<br />
* யாத்ரீகன் - பிரபோத் குமார் சான்யாஸ்<br />
== உசாத்துணை ==<br />
*[https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/apr/21/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12-3137325.html சா.கந்தசாமி, த.நா.குமாரசாமி பற்றி எழுதிய கட்டுரை]<br />
*[https://www.jeyamohan.in/54010/ நேற்றைய புதுவெள்ளம் | ஜெயமோகன்]<br />
*[https://thfcms.tamilheritage.org/%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/ விக்ரமன் த.நா.குமாரசாமி பற்றி]<br />
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUelZQy&tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%2C+%E0%AE%A4.+%E0%AE%A8%E0%AE%BE.#book1/ தாராசங்கரின் கவி இணையநூலகம்]<br />
{{finalised}}<br />
[[Category:Tamil Content]]<br />
[[Category:நாவலாசிரியர்கள்]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&diff=36100எஸ். ராமகிருஷ்ணன்2022-05-04T13:14:54Z<p>Thangapandiyan: /* இலக்கிய இடம் */</p>
<hr />
<div>[[File:எஸ்.ராமகிருஷ்ணன்2.png|thumb|308x308px|எஸ். ராமகிருஷ்ணன்]]<br />
[[File:எஸ்.ரா சாகித்ய அக்காதமி.jpg|thumb|எஸ்.ரா சாகித்ய அக்காதமி]]<br />
[[File:எஸ்.ராமகிருஷ்ணன் குடும்பம்.jpg|thumb|எஸ்.ராமகிருஷ்ணன் குடும்பம்]]<br />
[[File:S.ramakrish thumb4.png|thumb|எஸ்.ரா]]<br />
எஸ். ராமகிருஷ்ணன் (ஏப்ரல் 13, 1966) தமிழில் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம்,குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றை சினிமா, ஊடகம், இணையம் ஆகிய தளங்களில் எழுதி வருபவர். உலக இலக்கியம் மற்றும் உலக சினிமா குறித்த உரைகள் நிகழ்த்திவருகிறார்.<br />
<br />
எஸ். ராமகிருஷ்ணனின் ஆரம்பகட்ட கதைகள் கறாரான யதார்த்தவாத அல்லது இயல்புவாத வகைமையை சேர்ந்தவை. பின்னர் மாய யதார்த்தப் புனைவுகளை எழுதினார். கரிசல் நில மக்களின் உள்ளங்களை கட்டமைத்திருக்கும் தொன்மங்களையும் ஆழ்படிமங்களையும் எழுத்திற்குள் கொண்டுவந்தவர்.<br />
<br />
பார்க்க : [[எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்)|எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே)]]<br />
== பிறப்பு,கல்வி ==<br />
எஸ். ராமகிருஷ்ணன், ஏப்ரல் 13, 1966 ல் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர் என்ற ஊரில் சண்முகம் - மங்கையர்க்கரசி இணையருக்குப் பிறந்தவர். ஆங்கில இலக்கியம் முதுகலையும் ஆய்வுநிறைஞர் பட்டமும் பெற்றார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி நிறைவுசெய்யவில்லை.<br />
== தனிவாழ்க்கை ==<br />
மனைவி சந்திர பிரபா. மகன்கள் ஹரிபிரசாத், ஆகாஷ். சென்னையில் வசித்து வருகிறார். படிப்பை முடித்தபின்னர் சில ஆண்டுகள் எதிலும் நிலைகொள்ளாமல் அலைந்த பின்னர் குங்குமம் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் திரைப்படங்களுக்கு எழுதத் தொடங்கினார். வசந்தபாலன் இயக்கிய ஆல்பம் முதல்படம். அதன்பின் முழுநேர எழுத்தாளராக வாழ்கிறார். <br />
== இலக்கியவாழ்க்கை ==<br />
[[File:S.Ra sakit.jpg|thumb|எஸ். ராமகிருஷ்ணன் - சஞ்சாரம் ]]<br />
எஸ். ராமகிருஷ்ணனின் தந்தைவழித் தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர். தாய்வழித் தாத்தா சைவ சமயப் பற்றுடையவர். இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள், சமூகச் சிந்தனைகளைப் படித்தும், பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார். ராமகிருஷ்ணனின் அண்ணா டாக்டர் வெங்கடாசலம் சிறந்த இலக்கிய வாசகர்.<br />
<br />
1984ல் மாணவராக இருக்கையிலேயே எழுத ஆரம்பித்த எஸ். ராமகிருஷ்ணனின் முதல் கதையான "பழைய தண்டவாளம்" கணையாழியில் வெளியாகியது. கோயில்பட்டியில் இருந்த இலக்கியச் சூழல் அவரை தீவிர இலக்கியத்தின்பால் ஈர்த்தது. தேவதச்சன், எஸ்.ஏ.பெருமாள், ஜோதிவினாயகம் ஆகியோர் அவருக்கு இலக்கியத்தில் முன்னோடிகள். கோணங்கி இலக்கியவழிகாட்டியும் நண்பருமாக இருந்தார். கோணங்கியுடன் எஸ்.ராமகிருஷ்ணன் தமிழகத்தின் பல ஊர்களிலும் அலைந்து திரிந்திருக்கிறார். தன் அலைச்சல்களைப் பற்றி தேசாந்தரி என்னும் நூலில் விவரிக்கிறார்.<br />
<br />
1990ல் எஸ்.ராமகிருஷ்ணனின் முதல்தொகுதி வெளியிலிருந்து வந்தவன் சென்னை புக்ஸ் வெளியீடாக வெளிவந்து இலக்கிய வாசகர்களின் கவனத்தை கவர்ந்தது. தொடர்ந்து லத்தீனமேரிக்க மாய யதார்த்தவாதச் சாயல் கொண்ட கதைகளை எழுதினார். பின்னர் தூய யதார்த்தவாதம் நோக்கி திரும்பினார். அவருடைய மகாபாரத மறுஆக்க நாவலான ‘உபபாண்டவம்” அவரை நாவலாசிரியராக நிலைநிறுத்தியது.<br />
<br />
குங்குமம் இதழில் பணியாற்றினாலும் எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் நவீன இலக்கியம் சார்ந்த சிற்றிதழ்களில் எழுதுபவராகவே இருந்தார். 2001 முதல் ஆனந்தவிகடன் இதழில் அவர் எழுதத் தொடங்கிய துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி ஆகிய தொடர்கள் அவருக்கு பொதுவாசகர்களிடையே பெரும் புகழை உருவாக்கி அளித்தன. கதாவிலாசம் தொடர்வழியாக நவீன இலக்கியத்தை பொதுவாசகர்களுக்கு விரிவாக அறிமுகம் செய்தார். <br />
<br />
எஸ்.ராமகிருஷ்ணன் தமிழில் ஓர் அறிவியக்கம் என்றவகையில் எல்லா களங்களிலும் செயல்படுபவர். தமிழகத்தின் சிறந்த இலக்கியப் பேச்சாளர்களில் ஒருவர். பயணக்கட்டுரை எழுத்தாளர், திரைப்படங்களை அறிமுகம் செய்பவர், நூலறிமுகங்களை விரிவாக நிகழ்த்துபவர், இலக்கிய முகாம்களை ஒருங்கிணைப்பவர் என தொடர்ந்து வாசகர்களுடன் உரையாடலில் இருப்பவர். பரவலான பல களங்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்பவர். எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா என இரண்டு வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார். <br />
<br />
தமிழுக்கு வெளியிலும் பரவலாக கவனிக்கப்பட்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய படைப்புகள் இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன.<br />
[[File:எஸ்.ராமகிருஷ்ணன் கோணங்கியுடன்.png|thumb|எஸ்.ராமகிருஷ்ணன் கோணங்கியுடன்]]<br />
== இதழியல் ==<br />
எஸ்.ராமகிருஷ்ணன் அட்சரம் என்னும் சிற்றிதழை நடத்தினார். மும்மாத இதழாக எட்டு இதழ்கள் வெளிவந்தது. அட்சரம் அமைப்பு சார்பில் இலக்கிய முகாம்களும் நடத்தியிருக்கிறார்..<br />
== இலக்கிய இடம் ==<br />
[[File:Image-2.jpg|thumb|எஸ். ராமகிருஷ்ணன்]]<br />
எஸ்.ராமகிருஷ்ணன் பலவகையிலும் ஜெயகாந்தனுக்கு அணுக்கமான பார்வை கொண்டவர். அடிப்படையில் இடதுசாரி அரசியல்கோணம் கொண்டவரானாலும் காந்தியை முழுமையாக ஏற்றுக்கொண்டவர், இந்திய மரபின் மீதும் தமிழ்த்தொல்மரபின் மேலும் இணையான பற்று கொண்டவர். அவருடைய எழுத்துக்களில் உறுதியாக இந்தப்பார்வை வெளிப்படுகிறது. <br />
<br />
எஸ். ராமகிருஷ்ணன் அடிப்படையில் வறண்ட நெல்லையின் கதையாசிரியர். தொடக்கத்தில் மாயாயதார்த்தவாத தன்மை கொண்ட கதைகளை எழுதியவர் பின்னாளில் நேரடியான யதார்த்தவாத எழுத்தை முன்வைத்தார். அவை வாசகனுடன் நேரடியாக உரையாடும் தன்மை கொண்டவை. ‘என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம்." என்னும் அவருடைய வரிகளே அவருடைய இவ்வகையான கதைகளின் கூறுமுறை. <br />
<br />
எஸ்.ராமகிருஷ்ணன் வறண்ட தெற்குத்தமிழ் நிலத்தின் துயர்நிறைந்த வாழ்க்கையைச் சித்தரிப்பவராகவும், இன்னொரு தளத்தில் ஒட்டுமொத்தமாக வரலாற்றையும் தத்துவத்தையும் இயக்கும் அடிப்படைகளைப் பற்றி ஆராய்பவராகவும் திகழ்கிறார். அவ்விரு தளங்களின் முரணியக்கம் வழியாக அவருடைய இலக்கியச்செயல்பாடுகள் நிகழ்கின்றன என்று ஜெயமோகன் வரையறை செய்கிறா[https://www.jeyamohan.in/116365/ ர்]<br />
<br />
எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி, யாமம் ஆகிய இருநாவல்களிலும் கதைசொல்லலில் தொடர்ச்சியறு தன்மை நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது’ என்று ந.முருகேசபாண்டியன் குறிப்பிடுகிறார். எஸ்.ராவின் புனைவுகள் தமிழ் புனைகதைப் பரப்பின் எல்லைகளை பெருமளவுக்கு விரிவடையச் செய்தது என்றால் அவரது புனைவு மொழி கவிதைக்கும் உரைநடைக்கும் நடுவே ஆழமான சித்திரங்களையும் படிமங்களையும் உருவாக்குவதாக இருக்கிறது. நிலக்காட்சிகள், பருவ நிலைகளை பற்றிய எஸ்.ராவின் சித்திரங்கள் தமிழ் வாசகனின் நினைவுகளில் என்றும் அழியாத காட்சிகளை படைத்திருக்கின்றன என்று மனுஷ்யபுத்திரன் குறிப்பிடுகி[https://web.archive.org/web/20150625070407/http://www.manushyaputhiran.com/articles/s-ramakrishnan/ றார்.]<br />
== விருதுகள் ==<br />
====== முதன்மை விருதுகள் ======<br />
*தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த நாவல் விருது (2001)<br />
* ஞானவாணி விருது - நெடுங்குருதி நாவல் - பழனி வாழிய உலகநல நற்பணி மன்றம் (2003)<br />
* தமிழ் வளர்ச்சித் துறை விருது - அரவான் நாடகம் (2006)<br />
* சிறந்த புனைவு இலக்கிய விருது - யாமம் நாவல் - கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் (2007)<br />
* சிகேகே இலக்கிய விருது - ஈரோடு சிகேகே அறக்கட்டளை (2008)<br />
* தாகூர் இலக்கிய விருது - யாமம் நாவல் - சாம்சங் இந்தியா நிறுவனமும் சாகித்திய அகாதமியும் இணைந்து வழங்கும் விருது (2010)<br />
* இயல் விருது - வாழ்நாள் சாதனையாளர் விருது - கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் (2011)<br />
* சாகித்ய அகாதமி விருது - சஞ்சாரம் நாவல் (2018)<br />
*கோவை கண்ணதாசன் கழகம் வழங்கிய இலக்கிய விருது (2011)<br />
====== பிற விருதுகள் ======<br />
* மாக்சிம்கார்க்கி விருது<br />
* நல்லி திசை எட்டும் விருது<br />
* விஸ்டம் விருது<br />
* பெரியார் விருது<br />
* துருவா விருது<br />
* எஸ்.ஆர்.வி. இலக்கிய விருது<br />
* சேலம் தமிழ் சங்க விருது<br />
* விகடன் விருது<br />
* கொடீசியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது<br />
* இயற்றமிழ் வித்தகர் விருது<br />
* இலக்கியச்சிந்தனை விருது<br />
* கலைஞர் பொற்கிழி விருது<br />
== படைப்புகள் ==<br />
===== நாவல்கள் =====<br />
* உப பாண்டவம் (2000)<br />
* நெடுங்குருதி (2003)<br />
* உறுபசி (2005)<br />
* யாமம் (2007)<br />
* துயில் (2010)<br />
* நிமித்தம் (2013)<br />
* சஞ்சாரம் (2014) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் - 2018)<br />
* இடக்கை (2016)<br />
* பதின் (2017)<br />
* ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை (2019)<br />
*மண்டியிடுங்கள் தந்தையே (2021)<br />
===== சிறுகதைத் தொகுப்புகள் =====<br />
* வெளியில் ஒருவன், சென்னை புக்ஸ்<br />
* காட்டின் உருவம், அன்னம்<br />
* எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் பாகம் 1, 2 மற்றும் 3 (2014)<br />
* நடந்துசெல்லும் நீரூற்று (2006)<br />
* பதினெட்டாம் நூற்றாண்டின் மழை (2008)<br />
* அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது (2010)<br />
* நகுலன் வீட்டில் யாருமில்லை (2009)<br />
* புத்தனாவது சுலபம் (2011)<br />
* தாவரங்களின் உரையாடல் (2007)<br />
* வெயிலை கொண்டு வாருங்கள் (2001)<br />
* பால்ய நதி (2003)<br />
* மழைமான் (2012)<br />
* குதிரைகள் பேச மறுக்கின்றன (2013)<br />
* காந்தியோடு பேசுவேன் (2013)<br />
* என்ன சொல்கிறாய் சுடரே (2015)<br />
*ஐந்து வருட மௌனம் (2021)<br />
===== கட்டுரைத் தொகுப்புகள் =====<br />
* விழித்திருப்பவனின் இரவு (2005)<br />
* இலைகளை வியக்கும் மரம் (2007)<br />
* என்றார் போர்ஹே (2009)<br />
* கதாவிலாசம் (2005)<br />
* தேசாந்திரி (2006)<br />
* கேள்விக்குறி (2007)<br />
* துணையெழுத்து (2004)<br />
* ஆதலினால் (2008)<br />
* வாக்கியங்களின் சாலை (2002)<br />
* சித்திரங்களின் விசித்திரங்கள் (2008)<br />
* நம் காலத்து நாவல்கள் (2008)<br />
* காற்றில் யாரோ நடக்கிறார்கள் (2008)<br />
* கோடுகள் இல்லாத வரைபடம் - உலகம் சுற்றிய பயணிகளைப் பற்றிய கட்டுரைகள் (2008)<br />
* மலைகள் சப்தமிடுவதில்லை (2009)<br />
* வாசகபர்வம் (2009)<br />
* சிறிது வெளிச்சம் (2010)<br />
* காண் என்றது இயற்கை (2010)<br />
* செகாவின்மீது பனி பெய்கிறது (2010)<br />
* குறத்தி முடுக்கின் கனவுகள் (2010)<br />
* என்றும் சுஜாதா (2011)<br />
* கலிலியோ மண்டியிடவில்லை (2011)<br />
* சாப்ளினுடன் பேசுங்கள் (2011)<br />
* கூழாங்கற்கள் பாடுகின்றன (2011)<br />
* எனதருமை டால்ஸ்டாய் (2011)<br />
* ரயிலேறிய கிராமம் (2012)<br />
* ஆயிரம் வண்ணங்கள் (2016)<br />
* பிகாசோவின் கோடுகள் (2012)<br />
* இலக்கற்ற பயணி (2013)<br />
*காந்தியின் நிழலில் (2021)<br />
*நூலக மனிதர்கள் (2021)<br />
*காலத்தின் சிற்றலை (2021)<br />
*நேற்றின் நினைவுகள் (2021)<br />
===== திரைப்படம் குறித்த நூல்கள் =====<br />
* பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள் (2006)<br />
* அயல் சினிமா (2007)<br />
* உலக சினிமா (2008)<br />
* பேசத்தெரிந்த நிழல்கள் (2009)<br />
* சாப்ளினோடு பேசுங்கள் (2011)<br />
* இருள் இனிது ஒளி இனிது (2014)<br />
* பறவைக் கோணம் (2012)<br />
* சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் (2013)<br />
* நான்காவது சினிமா (2014)<br />
* குற்றத்தின் கண்கள் (2016)<br />
* காட்சிகளுக்கு அப்பால் (2017)<br />
===== குழந்தைகள் நூல்கள் =====<br />
* ஏழு தலைநகரம் கதைகள் (2005)<br />
* கிறு கிறு வானம் (2006)<br />
* கால் முளைத்த கதைகள் (2006)<br />
* நீள நாக்கு (2011)<br />
* பம்பழாபம் (2011)<br />
* எழுத தெரிந்த புலி (2011)<br />
* காசு கள்ளன் (2011)<br />
* தலையில்லாத பையன் (2011)<br />
* எனக்கு ஏன் கனவு வருது (2011)<br />
* வானம்<br />
* லாலிபாலே<br />
* நீளநாக்கு<br />
* லாலீப்பலே (2011)<br />
* அக்காடா (2013)<br />
* சிரிக்கும் வகுப்பறை (2013)<br />
* வெள்ளை ராணி (2014)<br />
* அண்டசராசம் (2014)<br />
* சாக்கிரடீஸின் சிவப்பு நூலகம் (2014)<br />
* கார்ப்பனை குதிரை (2014)<br />
* படிக்க தெரிந்த சிங்கம் (2016)<br />
* மீசை இல்லாத ஆப்பிள் (2016)<br />
* பூனையின் மனைவி (2016)<br />
* இறக்கை விரிக்கும் மரம் (2016)<br />
* உலகின் மிகச்சிறிய தவளை (2016)<br />
* எலியின் பாஸ்வோர்ட் (2017)<br />
*டான்டூனின் கேமிரா(2021)<br />
===== உலக இலக்கியப் பேருரைகள் =====<br />
* ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் (2013)<br />
* ஹோமரின் இலியட் (2013)<br />
* ஷேக்ஸ்பியரின் மெக்பெத் (2013)<br />
* ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் (2013)<br />
* தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் (2013)<br />
* லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா (2013)<br />
* பாஷோவின் ஜென் கவிதைகள் (2013)<br />
===== வரலாறு =====<br />
* எனது இந்தியா (2012)<br />
* மறைக்கப்பட்ட இந்தியா (2013)<br />
===== நாடகத் தொகுப்புகள் =====<br />
* அரவான் (2006)<br />
* சிந்துபாத்தின் மனைவி (2013)<br />
* சூரியனை சுற்றும் பூமி (2013)<br />
===== நேர்காணல் தொகுப்புகள் =====<br />
* எப்போதுமிருக்கும் கதை<br />
* பேசிக்கடந்த தூரம்<br />
===== மொழிபெயர்ப்புகள் =====<br />
* நம்பிக்கையின் பரிமாணங்கள் (1994)<br />
* ஆலீஸின் அற்புத உலகம் (1993)<br />
* பயணப்படாத பாதைகள் (2003)<br />
===== தொகை நூல்கள் =====<br />
* அதே இரவு, அதே வரிகள் (அட்சரம் இதழ்களின் தொகுப்பு)<br />
* வானெங்கும் பறவைகள்<br />
===== ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் =====<br />
* Nothing but water<br />
* Whirling swirling sky<br />
== உசாத்துணை ==<br />
* [https://www.sramakrishnan.com/ எஸ். ராமகிருஷ்ணன் – Welcome to S Ramakrishnan]<br />
* [https://www.jeyamohan.in/116365/ எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும் - ஜெயமோகன்]<br />
* [https://web.archive.org/web/20150415234511/http://www.manushyaputhiran.com/articles/s-ramakrishnan/ எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 50 வயது, மனுஷ்யபுத்திரன்]<br />
*[https://eluthu.com/kavithai/347492.html எஸ் ராமகிருஷ்ணன்---------------தற்காலத் தமிழ்ப் படைப்புலக எழுத்தாளர் - கட்டுரை]<br />
*[https://aroo.space/2021/05/10/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/ எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்] அரூ இணையதளம்<br />
*[https://aroo.space/2021/05/10/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/ எனது எழுத்தாளர் கணேஷ்பாபு]<br />
*[https://aroo.space/2021/05/10/%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa/ எஸ்.ரா என்னும் வரலாற்றுப் பேராசிரியன்]<br />
*[https://aroo.space/2021/05/10/%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%95/ எஸ்.ராவின் பயணங்கள்]<br />
*[https://aroo.space/2021/05/10/%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d/ எஸ்ரா என் அறிவுலக ஜன்னல்]<br />
*[https://aroo.space/2021/05/10/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be/ எஸ்.ரா பிருந்தா சாரதி]<br />
*[https://web.archive.org/web/20160304222929/http://www.kalachuvadu.com/issue-121/page67.asp ந.முருகேசபாண்டியன் நாவல்கள் பற்றி]<br />
*[https://web.archive.org/web/20150625070407/http://www.manushyaputhiran.com/articles/s-ramakrishnan/ மனுஷ்யபுத்திரன் எஸ்.ரா 50]<br />
*[https://youtu.be/b5gsvl0bvWo எஸ் ராமகிருஷ்ணன் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா - YouTube]<br />
*[https://youtu.be/vAmXhnsDd_E பால்யத்தை எழுதுதல் - எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை | S. Ramakrishnan Speech - YouTube]<br />
*[https://tamil.news18.com/news/tamil-nadu/s-ramakrishnan-received-sahitya-academy-award-101925.html சாகித்ய அகாடமி விருது பெற்றார் எஸ்.ராமகிருஷ்ணன்! |S.Ramakrishnan received Sahitya academy award – News18 Tamil]<br />
*[https://azhiyasudargal.blogspot.com/2010/02/blog-post_1256.html எஸ்.ராமகிருஷ்ணன் பழைய பேட்டி]<br />
[[Category: Tamil Content]]<br />
[[Category:நாவலாசிரியர்கள்]]<br />
{{finalised}}<br />
[[Category:Tamil Content]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&diff=36094இந்திரா பார்த்தசாரதி2022-05-04T12:56:05Z<p>Thangapandiyan: /* நாடகங்கள் */</p>
<hr />
<div>[[File:இந்திரா பார்த்தசாரதி.jpg|thumb]]<br />
இந்திரா பார்த்தசாரதி (இ.பா.) (ஜூலை 10, 1930) தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நாவல், சிறுகதைகள், நாடகம் என பல துறைகளிலும் சாதனை புரிந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். குருதிப்புனல் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். சாகித்ய அகாதமியின் ஃபெல்லோவாக இருக்கிறார். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழ்ப் பேராசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். <br />
<br />
இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுத்தர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. அங்கதம் நிறைந்தவை. அலுவலக (அரசு) வேலை பார்க்கும் கதை மாந்தர்களைக் கொண்டு பெருநகர வாழ்வினை சித்தரிப்பவை.<br />
== பிறப்பு, இளமை ==<br />
இயற்பெயர் பார்த்தசாரதி. ஜூலை 10, 1930-ல் சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, [[தி.ஜானகிராமன்]], [[கரிச்சான் குஞ்சு]] போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. தி.ஜானகிராமன் இவருக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். <br />
== தனி வாழ்க்கை ==<br />
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952-ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். சில ஆண்டுகள் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஸா பல்கலைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக (visiting professor) பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.<br />
====== குடும்பம் ======<br />
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இ. பா.வின் தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்துதான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கை கூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைபெயரின் முதல் பகுதியான இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
===== சிறுகதைகள் =====<br />
தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை அது.<br />
<br />
முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. 1964-ல் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.<br />
<br />
"சிறுகதையின் வடிவம் அந்தந்த படைப்பாளியின் உள்மனத் தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளை பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.<br />
===== நாவல்கள் =====<br />
இவருடைய முதல் நாவல் 'காலவெள்ளம்' 1968-ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடையே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். <br />
[[File:Kuruthipunal.jpg|thumb|குருதிப்புனல்]]<br />
இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா.வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை. <br />
<br />
கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பண்புகளை வெறும் புறவய காரணியான பொருளாதாரம் மட்டுமே நிர்ணயிப்பதில்லை; பண்பாடு, தொன்மம் போன்ற அகவயக் காரணிகளும் முக்கியப் பங்கு வகிப்பதை இந்நாவல் மிக நுட்பமாகச் சுட்டியிருக்கும்.<br />
===== நாடகங்கள் =====<br />
நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர் இ.பா. இ.பா.வின் முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார்.<br />
<br />
மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இவருடைய பெரும்பாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதை விட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மற்றும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.<br />
<br />
டில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் நாடகப் பேராசிரியராக மட்டும்தான் நான் பணியாற்ற விரும்புகிறேன் என்று அப்பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை ஒன்று உருவாகக் காரணமாக இருந்தார்.<br />
<br />
ஆழ்வார்கள் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்காக டில்லி பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவான ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருதும் வழங்கப்பட்டது.<br />
== இலக்கிய முக்கியத்துவம் ==<br />
பெருநகர் வாழ்க்கையின் அடையாளமாக உள்ள அதிகாரச் சிடுக்குகள், ஆடம்பரங்களின் விளையாட்டுகள், அறிவார்ந்த சிக்கல்கள் போன்றவற்றை தமிழில் முன் வைத்தவர் இந்திரா பார்த்தசாரதி. அதிகாரத்தை நேரடியாகக் கையாளும் உயர் அதிகாரிகளும் அரசியல்வாதிகள் மற்றும் அவ்வதிகாரத்தின் பகுதியாகவும் அதே சமயம் அடிமையாகவும் இருந்து அதை ஒவ்வொரு நாளும் பார்த்து வரும் குமாஸ்தா வர்க்கம் என்ற இரு சாராரின் மனத்திரிபுகளையும் நுட்பமான கிண்டல் வழியாக சித்தரிப்பவை இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகள். ஆரம்ப கட்ட நாவல்களான தந்திரபூமி, சுதந்திரபூமி போன்றவை மிகச் சிறந்த உதாரணங்கள். <br />
<br />
மனிதர்களின் பாவனைகளை அதிகமாகச் சொன்னவர் இந்திரா பார்த்தசாரதி. உணர்ச்சியற்ற அறிவார்ந்த ஆய்வு நோக்கு கொண்ட பார்வை அது. ஆகவே அவரது புனைவுகள் ஃப்ராய்டிய உளவியலுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தன. கதை மாந்தரின் உளவியலை கதைக்குள்ளேயே அலசிச் செல்லும் எழுத்துமுறை.<br />
<br />
எழுபதுகளில் மெல்ல இந்திரா பார்த்தசாரதி இருத்தலியல் சிந்தனைகளை நோக்கிச் சென்றார். அறிவார்ந்த அங்கதம் மெல்ல அர்த்தமின்மை என்னும் தரிசனம் நோக்கிச் சென்றது. இந்திரா பார்த்தசாரதி இந்தக் காலகட்டத்தில் இதற்கான சிறந்த வடிவமாக நாடகம் நோக்கிச் சென்றார். தமிழ் நவீன நாடகத்தின் மூலவர்களில் ஒருவராக இந்திரா பார்த்தசாரதி கருதப்படுவது இந்நாடகங்கள் வழியாகவே. குறிப்பாக போர்வை போர்த்திய உடல்கள் தமிழின் மிகச் சிறந்த யதார்த்த நாடகம் என அன்றும் இன்றும் கருதப்படுகிறது.<br />
<br />
இந்திரா பார்த்தசாரதியின் பிற்கால நாவல்கள் நம் அரசியலின் அறவீழ்ச்சியை நோக்கிய அங்கதம் கொண்டவை. மாயமான் வேட்டை, வேதபுரத்து வியாபாரிகள் போன்றவை அவாது அங்கத தரிசனத்தின் உதாரணங்கள்.<br />
<br />
பெருநகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என முரண்களின் (oxymoron) தொகுப்பு இவர். ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.<br />
== விருதுகள் ==<br />
# [[சாகித்ய அகாடமி விருது]]<br />
# [[சரஸ்வதி சம்மான் விருது]]<br />
# சங்கீத் நாடக அகாடமி விருது<br />
# பாரதிய பாஷா பரிஷத்<br />
# பத்மஸ்ரீ விருது (2010)<br />
# தி இந்து லிட் ஃபார் லைஃப் - வாழ்நாள் சாதனையாளர் விருது<br />
# சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப்<br />
== படைப்புகள் ==<br />
====== சிறுகதைகள் ======<br />
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு பதிப்பகத்தாரால், பல்வேறு தொகுப்புக்களாக இவை வெளியிடப்பட்டுள்ளன.<br />
====== நாவல்கள் ======<br />
# கால வெள்ளம் (1968)<br />
#ஆகாசத் தாமரை<br />
# மாயமான் வேட்டை<br />
# தந்திர பூமி<br />
# திரைகளுக்கு அப்பால்<br />
# சத்திய சோதனை<br />
# குருதிப்புனல் (சாஹித்ய அகாடெமி விருது)<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா<br />
# வேதபுரத்து வியாபாரிகள்<br />
# சுதந்திர பூமி<br />
# ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன<br />
# காலவெள்ளம்<br />
# வேர்ப்பற்று<br />
# வெந்து தணிந்த காடுகள்<br />
# அக்னி<br />
# தீவுகள்<br />
# ஏசுவின் தோழர்கள்<br />
# நிலம் என்னும் நல்லாள் (மழை என்ற நாடகத்தின் மூலக்கதை)<br />
# உச்சி வெயில் (திரைப்படமாகவும் வந்தது)<br />
====== நாடகங்கள் ======<br />
# மழை (மூலக்கதை: நிலம் என்னும் நல்லாள் நாவல்)<br />
# போர்வை போர்த்திய உடல்கள்<br />
# கால யந்திரங்கள்<br />
# நந்தன் கதை<br />
# கொங்கைத் தீ<br />
# ஔரங்கசீப்<br />
# ராமாநுஜர்<br />
# இறுதி ஆட்டம்<br />
# சூறாவளி<br />
# பசி<br />
# கோயில்<br />
# தர்மம்<br />
# நட்டக்கல்<br />
# புனரபி ஜனனம், புனரபி மரணம்<br />
# வீடு<br />
====== மொழிபெயர்ப்புகள் ======<br />
இவருடைய இறுதி ஆட்டம் மற்றும் சூறாவளி எனும் நாடகங்கள் முறையே ஷேக்ஸ்பியரின் King Lear மற்றும் The Tempest எனும் நாடகங்களின் தழுவலாகும்.<br />
====== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ======<br />
இவருடைய பெரும்பாலான நாடகங்கள் டில்லியில் இயங்கி வந்த Enact பத்திரிக்கையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாடகங்களுக்காகவே நடத்தப்பட்ட இப்பத்திரிக்கையை நடத்தியவரின் பெயர் ராஜேந்திரபால். <br />
<br />
பின்வரும் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.<br />
# கிருஷ்ணா கிருஷ்ணா - இ.பா. வே மொழி பெயர்த்திருக்கிறார்.<br />
# குருதிப்புனல் - 'River of Blood' என க.நா.சு<br />
# திரைகளுக்கு அப்பால் - 'Through the veils' என லட்சுமி கண்ணன்<br />
== உசாத்துணை ==<br />
* [https://www.hindutamil.in/news/blogs/226898-10.html இ.பா. பற்றி சில தகவல்கள்]<br />
* [https://www.vikatan.com/arts/literature/131740-life-history-of-tamil-writer-indira-parthasarathy-the-story-of-storytellers-part-32 விகடன் பதிவு]<br />
* [https://www.vikatan.com/news/literature/147971-interview-with-tamil-writer-indira-parthasarathy விகடனுக்கு இ.பா. அளித்த பேட்டி]<br />
* [https://indiraparthasarathy.wordpress.com இ.பா. தளம்]<br />
__FORCETOC__<br />
[[Category:நாவலாசிரியர்கள்]]<br />
{{finalised}}<br />
[[Category:Tamil Content]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&diff=36082ஆதவன்2022-05-04T12:45:04Z<p>Thangapandiyan: /* இலக்கிய இடம் */</p>
<hr />
<div>{{Read English|Aadhavan|Aadhavan|Name of target article=Aadhavan|Title of target article=Aadhavan}}<br />
[[File:Aadhavan.jpg|thumb|எழுத்தாளர் ஆதவன்]]<br />
ஆதவன் (மார்ச் 21, 1942 - ஜூலை 19, 1987) தமிழ் எழுத்தாளர். அறுபதுகளுக்கு பின் எழுதத்துவங்கி, பெருநகர வாழ்வின் நுணுக்கங்களை உளவியல் நோக்கில் எழுதியவர். தேசியப் புத்தக நிறுவனத்தில் பணியாற்றினார்.<br />
== பிறப்பு, கல்வி ==<br />
இயற்பெயர் கே.எஸ். சுந்தரம். மார்ச் 21, 1942 அன்று பிறந்தார். சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சி. டெல்லியில் தன் கல்லூரி படிப்பை முடித்தார்.<br />
== தனிவாழ்க்கை ==<br />
இந்திய ரயில்வேயில் ஏழு ஆண்டுகாலம் வேலை செய்தார். 1975 முதல் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் தமிழ் பிரிவில் துணையாசிரியராக டெல்லியிலும், 1984-க்கு பின் பெங்களூரிலும் பணி புரிந்தார்.<br />
<br />
1976-ல் திருமணம். மனைவி ஹேமா. இவர் ஆதவனின் மறைவுக்கு பின் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் தனக்கு கிடைத்த பணியை தொடர்ந்தார். மகள்கள் சாருமதி, நீரஜா.<br />
== இலக்கிய வாழ்க்கை ==<br />
பள்ளி பருவத்தில் கல்வி, விளையாட்டு என்று எதிலும் தன்னுடைய தனித்தன்மையை வெளிக்காட்ட முடியாமையால் உருவான தனிமையை போக்கிக்கொள்ள ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது நண்பன் ஒருவனோடு இணைந்து 'அணுகுண்டு' என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தினார்.<br />
<br />
‘சிங்கராஜ குமாரி’, ‘கானகத்தின் நடுவே’ ஆகிய சிறுகதை தொகுப்புகள் சிறார் இலக்கிய பங்களிப்பு. 1962-ல் கல்லூரி காலகட்டத்தில் எழுத்தாளராக அறிமுகம் ஆனார். [[ஆனந்த விகடன்]] இதழில் தாஜ்மகாலில் ஒரு பௌர்ணமி இரவு சிறுகதை முத்திரைக்கதையாக வெளிவந்தது. தொடர்ந்து விகடனில் கதைகள் எழுதினார். அதை தொடர்ந்து [[நா. பார்த்தசாரதி]] நடத்திய [[தீபம்]] இதழிலும் கதைகள் வெளிவந்தன. ஆதவனின் முதல் நாவலான 'காகித மலர்கள்' தீபம் இதழில் தொடராக வெளிவந்தது.1977 ல் நூல்வடிவு கொண்டது. <br />
<br />
[[இந்திரா பார்த்தசாரதி]] மற்றும் [[அசோகமித்திரன்]] இவருக்கு அணுக்கமான மூத்த படைப்பாளிகள். டெல்லியில் பணியாற்றும்போது [[தி.ஜானகிராமன்]] நெருக்கமானவராக இருந்தார். ‘காகித மலர்கள்’, ‘என் பெயர் ராமசேஷன்’ ஆகிய முக்கியமான நாவல்கள் இரண்டும் டெல்லியை கதைகளமாக கொண்டவை. ‘ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்’, ‘முதலில் இரவு வரும்’, ‘சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல்', ‘லேடி’ போன்ற சிறுகதைகள் விமர்சகர்களால் முதன்மையாக பரிந்துரைக்கபடும் படைப்புகள்.<br />
<br />
இந்திய பெருநகர வாழ்க்கை சூழலை கதைக்களமாக கொண்ட இவரது படைப்புகள் உயர்குடிப் பண்பாட்டில் உள்ள அபத்தங்களை உளவியல்பார்வையில் நேரடியாகச் சித்தரிப்பவை. வாழ்க்கையில் மனித அகம் செய்யும் பாவனைகள் சுயஏமாற்றுகளை பகுத்தாயும் விதத்தில் உளவியல் அணுகுமுறையோடு விவரித்து காட்டிய படைப்பாளி. நகர் வாழ்க்கையின் நவீனத்திற்குள் தங்களை முழுவதும் பொருத்திகொள்ளமுடியாமல் மரபின் ஆசாரத்துக்குள்ளும் இருந்துவிடமுடியாத மத்தியதர இளைஞர்கள் மற்றும் மனிதர்களின் உள்முரண்கள் பதிவானது இவருடைய படைப்புலகம். <br />
== மறைவு ==<br />
ஜூலை 19, 1987 அன்று சிருங்கேரியில் துங்க (பத்ரா) நதியின் சுழலில் சிக்கி உயிர் இழந்தார்.<br />
== விருது ==<br />
* மறைவுக்கு பின், 1987-ஆம் ஆண்டு 'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.<br />
== இலக்கிய இடம் ==<br />
”1967-ஆம் ஆண்டு. மிகக் குறுகிய இடைவெளியில் 'இண்டர்வியூ', 'அப்பர் பெர்த்' என அவருடைய இரு பக்குவமிக்க சிறுகதைகளைப் படித்து, இவ்வளவு துல்லியமாகவும், சத்தியம் தொனிக்கவும் தற்கால இந்தியாவின் படித்த இளைஞர் மனத்தைச் சித்தரிக்க முடியுமா என்று வியந்திருக்கிறேன். அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு இந்த இருபது ஆண்டுகளில் அவர் மனிதனாகவும், எழுத்தாளனாகவும் ஒருமுறைகூட என் வியப்பையும் மதிப்பையும் பெறாமலிருந்ததில்லை.” என்று அசோகமித்திரன் குறிப்பிடுகிறார். <br />
<br />
ஆதவன் அவருடைய இரு நாவல்களுக்காகவே பொதுவாக நினைவுகூரப்படுகிறார். காகிதமலர்கள், என் பெயர் ராமசேஷன் என்னும் இரு நாவல்களும் வெளிப்படையான உளவியல் அலசலும் பகடிப்பார்வையும் கொண்டவை. நகர்ப்புற நடுத்தரவர்க்கத்து படித்த பிராமணர்களின் உளவியல் தருணங்கள் அவற்றில் இருப்பதனால் அவை இலக்கியத்தன்மை அடைகின்றன. <br />
== படைப்புகள்/நூல்கள் ==<br />
====== சிறுகதை தொகுப்பு ======<br />
* கனவுக்குமிழிகள் - 1975<br />
* கால் வலி - 1975<br />
* ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - 1980<br />
* புதுமைப்பித்தனின் துரோகம் - 1981<br />
* முதலில் இரவு வரும் - 1985<br />
* நிழல்கள்<br />
* ஆதவன் சிறுகதைகள் - முழுதொகுப்பு<br />
====== நாடகம் ======<br />
* புழுதியில் வீணை<br />
====== குறுநாவல் ======<br />
* இரவுக்கு முன்பு வருவது மாலை <br />
* சிறகுககள்<br />
* மீட்சியைத் தேடி<br />
* கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்<br />
* நதியும் மலையும்<br />
* பெண், தோழி, தலைவி<br />
====== நாவல் ======<br />
* காகித மலர்கள் - 1977<br />
* என் பெயர் ராமசேஷன் - 1980<br />
====== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ======<br />
* என் பெயர் ராமசேஷன்- ரஷ்ய மொழி, Vitaliy Furnika<br />
== உசாத்துணை ==<br />
* நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - எழுத்தாளர் ஜெயமோகன்<br />
* [https://santhoshguru.blogspot.com/2005/09/blog-post.html காகித மலர்கள் - ஒரு மதிப்பீடு தி.க.சிவசங்கரன்]<br />
* [https://santhoshguru.blogspot.com/2005/09/blog-post_19.html தவிர்க்க முடியவில்லை -ஆதவன் & ஆதவன் - அசோகமித்திரன்]<br />
*[http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2951 Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - ஆதவன்]<br />
<br />
*[https://solvanam.com/2012/07/19/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/ ஆதவனின் புனைவுலகம், வெ.சுரேஷ், சொல்வனம்.காம், ஜூலை 2012]<br />
* [https://santhoshguru.blogspot.com/2005/09/blog-post_112714420206142566.html அகவுலக ஆய்வாளன் - பா. ராகவன்]<br />
*[https://www.hindutamil.in/news/literature/694926-writer-athavan-the-one-who-spreads-a-smile-on-human-nature-3.html ஆதவன் இந்து கட்டுரை]<br />
*[https://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF சுந்தர ராமசாமி கலைகள் கதைகள் சிறுகதைகள்]<br />
[[Category:நாவலாசிரியர்கள்]]<br />
{{finalised}}<br />
[[Category:Tamil Content]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE&diff=36067அமிர்தம் சூர்யா2022-05-04T12:32:49Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>[[File:Amirtham-surya.png|thumb|அமிர்தம் சூர்யா]]<br />
அமிர்தம் சூர்யா (டிசம்பர் 16,1966) தமிழ் எழுத்தாளர், இலக்கிய மேடைப்பேச்சாளர், கவிஞர், இதழாளர். <br />
== பிறப்பு, கல்வி ==<br />
அமிர்தம் சூர்யாவின் இயற்பெயர் இரா.ந.கதிரவன். கதிரவன் என்ற பெயரில் இருக்கும் –ன் – விகுதி பிடிக்காததால் சூர்யா என மாற்றிக்கொண்டார். நூறாண்டு வாழ்ந்த தன் பாட்டி அமிர்தம்மாள் பெயரில் உள்ள அமிர்தம் என்ற பெயரில் சிற்றிதழ் நடத்தியதால் அதை இணைத்துக்கொண்டு அமிர்தம் சூர்யாவாக ஆனார்.<br />
<br />
காஞ்சிபுரம் மூதாதையரின் ஊரானாலும் பெற்றோர் சென்னையில் குடியேறியவர்கள். டிசம்பர் 16, 1966-ல் நடராஜன் – சரோஜா இணையருக்குப் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை சென்னை தங்கசாலை சாரதா வித்யாலயாவிலும் எட்டு முதல் பத்து வரை தங்கசாலை அரசு உயர்நிலைப் பள்ளியிலும் மேல்நிலைக்கல்வியை சென்னை கன்னிகா புரத்தில் ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியிலும் முடித்தார். சென்னை தியாகராஜா கல்லூரி வேதியியல் பிரிவில் பாதியில் படிப்பை நிறுத்திக்கொண்டார். சென்னை தங்கசாலையில் (மிண்ட்) மெஷினிஸ்ட் என்று சொல்லப்படும் இயந்திரபணியாளர் என்ற பிரிவில் தொழிற்கல்வி முடித்தார்.<br />
== தனிவாழ்க்கை ==<br />
அமிர்தம் சூர்யா லதாவை அக்டோபர் 29, 1990- அன்று வடபழனி கோவிலில் திருமணம் செய்துகொண்டார். L. K. காவ்ய ப்ரிய தர்ஷன், L. K. ஆகாஷ் அக்னி மித்ரன் என இரு மகன்கள். <br />
<br />
அமிர்தம் சூர்யா அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயந்திரப்பணியாளராகவும் , அண்ணா நகரில் வங்கி ஒன்றில் தற்காலிக பணியாளராகவும் , கூடுவாஞ்சேரியில் ஒரு நிறுவன மேலாளராகவும் , வியாசர்பாடி ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் மேலாளராகவும் பல்வேறு பணிகளுக்கு பின் கல்கி வார இதழில் 13- ஆண்டுகள் தலைமை துணை ஆசிரியராக பணியாற்றி பணிநிறைவு பெற்றார். முழுநேர எழுத்து பணியுடன் கருமாண்டி ஜங்ஷன் என்னும் யூ டியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.<br />
== இலக்கிய வாழ்க்கை ==<br />
அமிர்தம் சூர்யாவின் முதல் படைப்பு கவிதை. தொடர்ந்து கவிதாசரண், நவீன விருட்சம், சுந்தர சுகன், கணையாழி,கோடு, கோடாங்கி என சிற்றிதழ்களில் எழுதினார். 2000-ல் ஜெயமோகன் முன்னுரையோடு உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை என்ற கவிதை தொகுப்பு வெளிவந்தது. கவிதைகளில் தேவ தேவன், தேவதச்சன், ரமேஷ் பிரேம், புனைகதையில் ஜெயமோகன், கட்டுரைகளில் சாரு நிவேதிதா , எஸ் ராமகிருஷ்ணன் என தன் முன்னோடிகளை கூறும் அமிர்தம் சூர்யா ஓவியங்களில் சந்துரு மாஸ்டரையும் நாடகங்களில் முருகபூபதியையும் பெரிதும் விரும்புபவர்.<br />
<br />
தீவிரமான கடவுள் நம்பிக்கை கொண்ட அமிர்தம் சூர்யா சித்தர் வழிபபாட்டில் ஈடுபாடு கொண்டவர் .சென்னையில் உள்ள சித்தர்களின் ஜீவ சமாதியை தேடி கண்டுபிடித்து அது குறித்து ''ஆசி பெறலாம் வாங்க'' என்ற தொடரை தீபம் இதழில் எழுதினார். பெண் சித்தர்கள் பற்றிய தொடரையும் கல்கியில் எழுதினார்.<br />
== விருதுகள் ==<br />
* திருப்பூர் தமிழ் சங்க விருது <br />
* தினகரன் பரிசு<br />
* ஸ்டேட் பாங்க் அவார்ட் விருது<br />
* எழுச்சி அறக்கட்டளை விருது (சிறந்த நாடக ப்ரதிக்காக)<br />
*சி.கனகசபாபதி விருது<br />
* அன்னம் விருது<br />
* செளமா விருது <br />
== நூல்கள் ==<br />
* உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை (2000) கவிதை - ஜெயமோகன் முன்னுரையுடன்<br />
* பகுதி நேர கடவுளின் நாட்குறிப்பேடு (2006) கவிதை - சந்துரு முன்னுரையுடன்<br />
* வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் (2012) கவிதை<br />
* ஓவிய ஃபிரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் - கவிதை - மனுஷ்ய புத்ரன் முன்னுரை <br />
* முக்கோணத்தின் நாலாவது பக்கம் (2001) கட்டுரை வெங்கட்சாமிநாதன் முன்னுரை<br />
* கடவுளை கண்டுபிடிப்பவன் 14-சிறுகதைகளின் தொகுப்பு - இந்திரா பார்த்த சாரதி முன்னுரை<br />
* மிளகு கொடியில் படரும் கவிதை – கவிதைகள் குறித்து முக்கிய கவிஞர்களின் கட்டுரைகளை தொகுத்தது <br />
* எறவானம் (நாவல்) <br />
== உசாத்துணை ==<br />
* [https://amirthamsurya.blogspot.com/ அமிர்தம் சூர்யா-வலைத்தளம்]<br />
* [https://tamil.indianexpress.com/literature/writer-amirtham-suryas-karumaandi-junction-youtube-channel-introducing-tamil-literature-324991/ கருமாண்டி ஜங்ஷன் 7 - தமிழ் இந்தியன் எக்ஸ்பி]<br />
* [https://youtu.be/bPMlztwM-q4 ஒரு வணக்கத்தால் அழிந்த மதுரை- அமிர்தம் சூர்யா காணொலி]<br />
{{finalised}}<br />
[[Category:Tamil Content]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE&diff=36065அமிர்தம் சூர்யா2022-05-04T12:31:21Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>[[File:Amirtham-surya.png|thumb|அமிர்தம் சூர்யா]]<br />
அமிர்தம் சூர்யா (டிசம்பர் 16,1966) தமிழ் எழுத்தாளர், இலக்கிய மேடைப்பேச்சாளர், கவிஞர், இதழாளர். <br />
== பிறப்பு, கல்வி ==<br />
அமிர்தம் சூர்யாவின் இயற்பெயர் இரா.ந.கதிரவன். கதிரவன் என்ற பெயரில் இருக்கும் –ன் – விகுதி பிடிக்காததால் சூர்யா என மாற்றிக்கொண்டார். நூறாண்டு வாழ்ந்த தன் பாட்டி அமிர்தம்மாள் பெயரில் உள்ள அமிர்தம் என்ற பெயரில் சிற்றிதழ் நடத்தியதால் அதை இணைத்துக்கொண்டு அமிர்தம் சூர்யாவாக ஆனார்.<br />
<br />
காஞ்சிபுரம் மூதாதையரின் ஊரானாலும் பெற்றோர் சென்னையில் குடியேறியவர்கள். டிசம்பர் 16, 1966-ல் நடராஜன் – சரோஜா இணையருக்குப் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை சென்னை தங்கசாலை சாரதா வித்யாலயாவிலும் எட்டு முதல் பத்து வரை தங்கசாலை அரசு உயர்நிலைப் பள்ளியிலும் மேல்நிலைக்கல்வியை சென்னை கன்னிகா புரத்தில் ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியிலும் முடித்தார். சென்னை தியாகராஜா கல்லூரி வேதியியல் பிரிவில் பாதியில் படிப்பை நிறுத்திக்கொண்டார்.சென்னை தங்கசாலையில் (மிண்ட்_) மெஷினிஸ்ட் என்று சொல்லப்படும் இயந்திரபணியாளர் என்ற பிரிவில் தொழிற்கல்வி முடித்தார்.<br />
== தனிவாழ்க்கை ==<br />
அமிர்தம் சூர்யா லதாவை அக்டோபர் 29, 1990- அன்று வடபழனி கோவிலில் திருமணம் செய்துகொண்டார். L. K. காவ்ய ப்ரிய தர்ஷன், L. K. ஆகாஷ் அக்னி மித்ரன் என இரு மகன்கள். <br />
<br />
அமிர்தம் சூர்யா அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயந்திரப்பணியாளராகவும் , அண்ணா நகரில் வங்கி ஒன்றில் தற்காலிக பணியாளராகவும் , கூடுவாஞ்சேரியில் ஒரு நிறுவன மேலாளராகவும் , வியாசர்பாடி ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் மேலாளராகவும் பல்வேறு பணிகளுக்கு பின் கல்கி வார இதழில் 13- ஆண்டுகள் தலைமை துணை ஆசிரியராக பணியாற்றி பணிநிறைவு பெற்றார். முழுநேர எழுத்து பணியுடன் கருமாண்டி ஜங்ஷன் என்னும் யூ டியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.<br />
== இலக்கிய வாழ்க்கை ==<br />
அமிர்தம் சூர்யாவின் முதல் படைப்பு கவிதை. தொடர்ந்து கவிதாசரண், நவீன விருட்சம், சுந்தர சுகன், கணையாழி,கோடு, கோடாங்கி என சிற்றிதழ்களில் எழுதினார். 2000-ல் ஜெயமோகன் முன்னுரையோடு உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை என்ற கவிதை தொகுப்பு வெளிவந்தது. கவிதைகளில் தேவ தேவன், தேவதச்சன், ரமேஷ் பிரேம், புனைகதையில் ஜெயமோகன், கட்டுரைகளில் சாரு நிவேதிதா , எஸ் ராமகிருஷ்ணன் என தன் முன்னோடிகளை கூறும் அமிர்தம் சூர்யா ஓவியங்களில் சந்துரு மாஸ்டரையும் நாடகங்களில் முருகபூபதியையும் பெரிதும் விரும்புபவர்.<br />
<br />
தீவிரமான கடவுள் நம்பிக்கை கொண்ட அமிர்தம் சூர்யா சித்தர் வழிபபாட்டில் ஈடுபாடு கொண்டவர் .சென்னையில் உள்ள சித்தர்களின் ஜீவ சமாதியை தேடி கண்டுபிடித்து அது குறித்து ''ஆசி பெறலாம் வாங்க'' என்ற தொடரை தீபம் இதழில் எழுதினார். பெண் சித்தர்கள் பற்றிய தொடரையும் கல்கியில் எழுதினார்.<br />
== விருதுகள் ==<br />
* திருப்பூர் தமிழ் சங்க விருது <br />
* தினகரன் பரிசு<br />
* ஸ்டேட் பாங்க் அவார்ட் விருது<br />
* எழுச்சி அறக்கட்டளை விருது (சிறந்த நாடக ப்ரதிக்காக)<br />
*சி.கனகசபாபதி விருது<br />
* அன்னம் விருது<br />
* செளமா விருது <br />
== நூல்கள் ==<br />
* உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை (2000) கவிதை - ஜெயமோகன் முன்னுரையுடன்<br />
* பகுதி நேர கடவுளின் நாட்குறிப்பேடு (2006) கவிதை - சந்துரு முன்னுரையுடன்<br />
* வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் (2012) கவிதை<br />
* ஓவிய ஃபிரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் - கவிதை - மனுஷ்ய புத்ரன் முன்னுரை <br />
* முக்கோணத்தின் நாலாவது பக்கம் (2001) கட்டுரை வெங்கட்சாமிநாதன் முன்னுரை<br />
* கடவுளை கண்டுபிடிப்பவன் 14-சிறுகதைகளின் தொகுப்பு - இந்திரா பார்த்த சாரதி முன்னுரை<br />
* மிளகு கொடியில் படரும் கவிதை – கவிதைகள் குறித்து முக்கிய கவிஞர்களின் கட்டுரைகளை தொகுத்தது <br />
* எறவானம் (நாவல்) <br />
== உசாத்துணை ==<br />
* [https://amirthamsurya.blogspot.com/ அமிர்தம் சூர்யா-வலைத்தளம்]<br />
* [https://tamil.indianexpress.com/literature/writer-amirtham-suryas-karumaandi-junction-youtube-channel-introducing-tamil-literature-324991/ கருமாண்டி ஜங்ஷன் 7 - தமிழ் இந்தியன் எக்ஸ்பி]<br />
* [https://youtu.be/bPMlztwM-q4 ஒரு வணக்கத்தால் அழிந்த மதுரை- அமிர்தம் சூர்யா காணொலி]<br />
{{finalised}}<br />
[[Category:Tamil Content]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=User:Thangapandiyan&diff=36048User:Thangapandiyan2022-05-04T11:01:27Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>[[File:Thangapandiyan.png|thumb|தங்கபாண்டியன்]]<br />
தங்கபாண்டியன் (09 ஜூலை 1975) தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் பங்களிப்பாளர்.<br />
== பிறப்பு, கல்வி, தொழில் ==<br />
தங்கபாண்டியன் (09 ஜூலை 1975) கள்ளக்குறிச்சி மாவட்டம், பெத்தாசமுத்திரம் கிராமத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியை சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் இளங்கலை கால்நடை மருத்துவமும், கால்நடை நோய்க்குறியியல் துறையில் முதுகலையும் முனைவர் படிப்பும் முடித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவமனை மேலாண்மையில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை உதவி மருத்துவராக (2001-2007) பணிபுரிந்தார். 2007 முதல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=User:Thangapandiyan&diff=36022User:Thangapandiyan2022-05-04T07:19:15Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>[[File:Thangapandiyan.png|thumb]]<br />
தங்கபாண்டியன் (09 ஜூலை 1975) தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் பங்களிப்பாளர்.<br />
<br />
== பிறப்பு, கல்வி, தொழில் ==<br />
தங்கபாண்டியன் (09 ஜூலை 1975) கள்ளக்குறிச்சி மாவட்டம், பெத்தாசமுத்திரம் கிராமத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியை சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் இளங்கலை கால்நடை மருத்துவமும், கால்நடை நோய்க்குறியியல் துறையில் முதுகலையும் முனைவர் படிப்பும் முடித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவமனை மேலாண்மையில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை உதவி மருத்துவராக (2001-2007) பணிபுரிந்தார். 2007 முதல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=File:Thangapandiyan.png&diff=36020File:Thangapandiyan.png2022-05-04T05:46:37Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=File:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,_1995.png&diff=21255File:கவிதைத்தொகுப்பு, 1995.png2022-03-25T05:42:06Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=File:%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D,_2021.png&diff=21254File:சி.குமார் நினைவுச் சிறப்பிதழ், 2021.png2022-03-25T05:30:37Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=File:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_2020.png&diff=21251File:சிறுகதைத்தொகுப்பு 2020.png2022-03-25T05:09:05Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=File:%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.jpg&diff=21250File:ஓவியப்பணியில் சி.குமார்.jpg2022-03-25T05:07:34Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=File:%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D.jpg&diff=21249File:சி.குமார் மனைவி சரோஜாவுடன்.jpg2022-03-25T05:06:25Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=File:%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(1944_-_2020)_.jpg&diff=21247File:மல்லிகை சி. குமார் (1944 - 2020) .jpg2022-03-25T05:05:13Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%95%E0%AF%8B._%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&diff=21047கோ. நடேசய்யர்2022-03-24T04:50:38Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>[[File:கோ. நடேசய்யர் (1887 - 1947) .png|thumb|194x194px|கோ. நடேசய்யர் (1887 - 1947) ]]<br />
கோ. நடேசய்யர் (ஜனவரி 14, 1887 - நவம்பர் 7, 1947) தமிழகத்தில் பிறந்து இலங்கை மலையகத்தில் வாழ்ந்த தமிழறிஞர், பதிப்பாளர், அரசியல்வாதி, இதழாசிரியர், எழுத்தாளர். இலங்கை தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி.<br />
<br />
== பிறப்பு, கல்வி ==<br />
கோதண்டராம நடேசய்யர் தமிழ்நாடு விழுப்புரம் (அப்போதைய தென்னாற்காடு) மாவட்டம் வளவனூரில் கோதண்டராம ஐயர் - பகீரதம்மாள் தம்பதியருக்கு மகனாக ஜனவரி 14, 1887 -ல் பிறந்தார். அரசுப்பள்ளியில் ஆங்கில பொதுக்கல்வி கற்றவர், 1907 -ல் வங்கப்பிரிவினை காலத்தில் ஏற்பட்ட தேசிய உணர்வால் ஆங்கில படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டார். சென்னை அரசுப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து கைத்தொழில் பயிற்சி பெற்றார். சிலகாலம் நெசவுத்தொழில் மேற்கொண்டார். பின் வியாபாரம் குறித்த படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார். தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் தொழில்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் நல்ல தேர்ச்சியுடையவர்.<br />
[[File:நடேசய்யர் மனைவி மீனாட்சியுடன்.png|thumb|240x240px|நடேசய்யர் மனைவி மீனாட்சியுடன்]]<br />
<br />
== தனிவாழ்க்கை ==<br />
நடேசய்யரின் முயற்சியால் 1914, 1915 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் தென்னிந்திய வியாபாரிகள் சங்கம், தென்னிந்திய மில்காரர்களின் சங்கம், தஞ்சை மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் போன்றவை ஆரம்பிக்கப்பட்டன. ‘வர்த்தக மித்திரன்’ பத்திரிகைக்காக இலங்கையிலும் சந்தா சேர்த்தார். தென்னிந்திய வர்த்தகர்களின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள 1919 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்தார் நடேசய்யர். மீண்டும் 1920 ஆம் ஆண்டு இலங்கைக்கு தனது மனைவி மீனாட்சி அம்மையாருடன் வந்த நடேசய்யர் மலையகத் தொழிலாளரின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அறிந்து இலங்கையிலேயே நிரந்தரமாகத் தங்கி மலையகத்தமிழர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டார். தனது முதல் மனைவி இறந்த பின் மீனாட்சி அம்மையை மனைவியாக ஏற்றுக்கொண்டிருந்தார். மனைவி மீனாட்சியம்மாள், மலையகத் தமிழ் கவிஞர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். குறிப்பாக இலங்கை பெண்களின் வாக்குரிமைக்காக செயல்பட்டவர்.<br />
<br />
1930-ல் மலையகத்தின் தோட்ட அடிவாரத்தில், ஹட்டன் நகரில் குடியேறிய நடேசய்யர் தொடர்ந்து தோட்டங்கள் தோறும் சென்று மக்களிடையே உரையாற்றினார். நடேசய்யருடன் அவர் மனைவி மீனாட்சி அம்மையாரும் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக செயலாற்றினார். தொழிலாளர்களுக்காக இருவரும் பாடிய "தொழிலாளர் சட்டக்கும்மி' பாடல்கள் புகழ்பெற்றவை.<br />
<br />
== அரசியல் வாழ்க்கை ==<br />
நடேசய்யர் காங்கிரஸ் பின்னணி கொண்டவர். 1924-ஆம் ஆண்டு நடேசய்யர் இலங்கை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றாலும் பின்னர் இலங்கை அரசாங்க சபைக்கு 1936ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அட்டன் தொகுதியில் வெற்றிபெற்று 1947-ஆம் ஆண்டு வரை இலங்கை இந்தியக் காங்கிரசின் சார்பில் அங்கம் வகித்தார். 1947 ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.<br />
[[File:தேசபக்தன் இதழ்.png|thumb|162x162px|தேசபக்தன் இதழ்]]<br />
<br />
== பத்திரிகை பணி ==<br />
ஆங்கிலேயரின் வணிக ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர்கள் எழவேண்டுமென்ற நோக்கில் 1914-ல் வணிகர்களுக்காக ’[[வர்த்தகமித்திரன்]]’ என்ற பத்திரிகையைத் தொடங்கி, நடத்தினார். 1921-ல் நடேசய்யர் ஆரம்பித்த ’[[தேசநேசன்]]’ இலங்கையின் முதல் தமிழ் நாளிதழ். ’தேசபக்தன்' இதழின் முகப்பில் புதிய மலையக ஆத்திசூடிப் பாக்களை வெளியிட்டார். பாரதியாரின் பாடல்களை இலங்கை முழுவதும் பரவச் செய்தார்.<br />
<br />
இந்தியத் தொழிலாளர்களின் துயரத்தை முதன்முதலாக ஆய்வு செய்து வெளியிட்து தேசநேசன் இதழ். நடேசய்யர், கொழும்பு நகரில் வாழ்ந்த இந்தியத் தமிழர்களின் வேதனைகளை விவரிப்பதற்காக, தி சிட்டிசன் என்ற ஆங்கில வார இதழைத் தொடங்கினார். ஹட்டனில் அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் 1931 ஆம் ஆண்டு நடேசய்யரால் ஆரம்பிக்கப்பட்டது.<br />
<br />
== இலக்கியப் பணி ==<br />
மலையக இலக்கியத்தின் பிதா என்று கோ. நடேசய்யர் குறிப்பிடப்படுகிறார் என ஜெயமோகன் கூறுகிறார்<ref>[https://www.jeyamohan.in/41452/ 'உதிர்ந்த ரத்தத்துளிகளின் கதை', ஜெயமோகன், தெளிவத்தை ஜோசப்பின் மீன்கள் சிறுகதைத் தொகுதியின் முன்னுரை, jeyamohan.in]</ref>. நடேசய்யர் ''இன்சூரன்ஸ்'', ''ஆயில் இன்ஜின்கள்'', ''வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் முறைகளும்'' ஆகிய துறை நூல்களையும் ''ஒற்றன்'' என்ற நாவலையும் எழுதியுள்ளார். ஹட்டன் நகரில் சகோதரி என்ற அச்சகத்தை நடத்தினார். இதன் மூலம் தொடர்ந்து தன்னுடைய நூல்களையும் மனைவியின் நூல்களையும் வெளியிட்டுவந்தார்.<br />
<br />
இந்தியாவின் பாட்டியாலா மகாராஜாவின் செயல்களை ஆவணப்படுத்தும் ''புபேந்திரசிங்கள் அல்லது நரேந்திரபதியின் நரக வாழ்க்கை'' எனும் நூலை இரண்டு பாகங்களாக 1933-ல் வெளியிட்டார். இந்நூல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.<br />
<br />
==மறைவு==<br />
கோ. நடேசய்யர் நவம்பர் 7, 1947 -ல் மாரடைப்பால் இலங்கையில் காலமானார்.<br />
<br />
==இலக்கிய பங்களிப்பு==<br />
[[File:வெளியீடு 1941.png|thumb|201x201px|வெளியீடு 1941]]<br />
<br />
=====இதழ்கள்=====<br />
<br />
*வர்த்தகமித்திரன் (1914)<br />
*தேசநேசன் (1922-23)<br />
*தேசபக்தன் (1924-29)<br />
*தொழிலாளி (1929)<br />
*தோட்டத்தொழிலாளி (1947)<br />
*உரிமைப்போர்<br />
*சுதந்திரப்போர்<br />
*வீரன் சுதந்திரன்<br />
*சிட்டிசன் (1922)<br />
*ஃபார்வர்ட் (1926)<br />
*இந்தியன் ஒப்பினியன் (1936)<br />
*இந்தியன் எஸ்டேட் லேபர் (1929)<br />
<br />
[[File:கோ.நடேசய்யர் வாழ்க்கை வரலாறு (1988).png|thumb|கோ.நடேசய்யர் வாழ்க்கை வரலாறு (1988)]]<br />
<br />
=====நூல்கள்=====<br />
<br />
*இன்சூரன்ஸ் (1910)<br />
*ஆயில் இன்ஜின்கள் (1910)<br />
*வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் முறைகளும் (1910)<br />
*கணக்குப்பதிவு நூல் (1914, தஞ்சாவூர்)<br />
*ஒற்றன் (நாவல், 1914)<br />
*வெற்றியுனதே<br />
*நீ மயங்குவதேன் (கட்டுரைத் தொகுப்பு, 1931)<br />
*இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம் (1941, இரண்டாம் பதிப்பு: 2018)<br />
*இந்தியா இலங்கை ஒப்பந்தம் (1941)<br />
*தொழிலாளர் சட்டப் புத்தகம் (1942)<br />
*அழகிய இலங்கை (1944)<br />
*Indo Ceylon Crisis (1941)<br />
*கதிர்காமம் (1946)<br />
<br />
=====பதிப்பித்த நூல்கள்=====<br />
<br />
*இந்தியத் தொழிலாளர் துயரங்கள் - பாடல் தொகுப்பு (1933). மீனாட்சி அம்மையார்<br />
*இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை (1940) - மீனாட்சி அம்மையார்<br />
==உசாத்துணை==<br />
*[https://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/31692-2016-10-21-01-32-57 ‘தேசபக்தன்’ கோ.நடேசய்யர் - கீற்று]<br />
*[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B._%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D தேசபக்தன் கோ. நடேசய்யர் - வாழ்க்கை வரலாறு நூல் (1988) - ஆசிரியர் சாரல்நாடன்]<br />
*[https://inioru.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/ நடேசய்யரின் சமூக வாழ்வியல் – ஒரு பார்வை : சட்டத்தரணி இ. தம்பையா]<br />
<br />
==குறிப்புகள்==<br />
<references /><br />
<br />
{{being created}}<br />
[[Category: Tamil Content]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%95%E0%AF%8B._%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&diff=20440கோ. நடேசய்யர்2022-03-21T12:40:32Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>[[File:கோ. நடேசய்யர் (1887 - 1947) .png|thumb|194x194px|கோ. நடேசய்யர் (1887 - 1947) ]]<br />
கோ. நடேசய்யர் (ஜனவரி 14, 1887 - நவம்பர் 7, 1947) தமிழகத்தில் பிறந்து இலங்கை மலையகத்தில் வாழ்ந்த தமிழறிஞர், பதிப்பாளர், அரசியல்வாதி, இதழாசிரியர், எழுத்தாளர். இலங்கை தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி.<br />
<br />
== பிறப்பு, கல்வி ==<br />
கோதண்டராம நடேசய்யர் தமிழ்நாடு விழுப்புரம் (அப்போதைய தென்னாற்காடு) மாவட்டம் வளவனூரில் கோதண்டராம ஐயர் - பகீரதம்மாள் தம்பதியருக்கு மகனாக ஜனவரி 14, 1887 -ல் பிறந்தார். அரசுப்பள்ளியில் ஆங்கில பொதுக்கல்வி கற்றவர், 1907 -ல் வங்கப்பிரிவினை காலத்தில் ஏற்பட்ட தேசிய உணர்வால் ஆங்கில படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டார். சென்னை அரசுப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து கைத்தொழில் பயிற்சி பெற்றார். சிலகாலம் நெசவுத்தொழில் மேற்கொண்டார். பின் வியாபாரம் குறித்த படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார். தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் தொழில்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் நல்ல தேர்ச்சியுடையவர்.<br />
[[File:நடேசய்யர் மனைவி மீனாட்சியுடன்.png|thumb|240x240px|நடேசய்யர் மனைவி மீனாட்சியுடன்]]<br />
<br />
== தனிவாழ்க்கை ==<br />
நடேசய்யரின் முயற்சியால் 1914, 1915 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் தென்னிந்திய வியாபாரிகள் சங்கம், தென்னிந்திய மில்காரர்களின் சங்கம், தஞ்சை மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் போன்றவை ஆரம்பிக்கப்பட்டன. ‘வர்த்தக மித்திரன்’ பத்திரிகைக்காக இலங்கையிலும் சந்தா சேர்த்தார். தென்னிந்திய வர்த்தகர்களின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள 1919 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்தார் நடேசய்யர். மீண்டும் 1920 ஆம் ஆண்டு இலங்கைக்கு தனது மனைவி மீனாட்சி அம்மையாருடன் வந்த நடேசய்யர் மலையகத் தொழிலாளரின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அறிந்து இலங்கையிலேயே நிரந்தரமாகத் தங்கி மலையகத்தமிழர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டார். தனது முதல் மனைவி இறந்த பின் மீனாட்சி அம்மையை மனைவியாக ஏற்றுக்கொண்டிருந்தார். மனைவி மீனாட்சியம்மாள், மலையகத் தமிழ் கவிஞர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். குறிப்பாக இலங்கை பெண்களின் வாக்குரிமைக்காக செயல்பட்டவர்.<br />
<br />
1930-ல் மலையகத்தின் தோட்ட அடிவாரத்தில், ஹட்டன் நகரில் குடியேறிய நடேசய்யர் தொடர்ந்து தோட்டங்கள் தோறும் சென்று மக்களிடையே உரையாற்றினார். நடேசய்யருடன் அவர் மனைவி மீனாட்சி அம்மையாரும் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக செயலாற்றினார். தொழிலாளர்களுக்காக இருவரும் பாடிய "தொழிலாளர் சட்டக்கும்மி' பாடல்கள் புகழ்பெற்றவை.<br />
<br />
== அரசியல் வாழ்க்கை ==<br />
நடேசய்யர் காங்கிரஸ் பின்னணி கொண்டவர். 1924-ஆம் ஆண்டு நடேசய்யர் இலங்கை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றாலும் பின்னர் இலங்கை அரசாங்க சபைக்கு 1936ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அட்டன் தொகுதியில் வெற்றிபெற்று 1947-ஆம் ஆண்டு வரை இலங்கை இந்தியக் காங்கிரசின் சார்பில் அங்கம் வகித்தார். 1947 ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.<br />
[[File:தேசபக்தன் இதழ்.png|thumb|162x162px|தேசபக்தன் இதழ்]]<br />
<br />
== பத்திரிகை பணி ==<br />
ஆங்கிலேயரின் வணிக ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர்கள் எழவேண்டுமென்ற நோக்கில் 1914-ல் வணிகர்களுக்காக ’[[வர்த்தகமித்திரன்]]’ என்ற பத்திரிகையைத் தொடங்கி, நடத்தினார். 1921-ல் நடேசய்யர் ஆரம்பித்த ’[[தேசநேசன்]]’ இலங்கையின் முதல் தமிழ் நாளிதழ். ’தேசபக்தன்' இதழின் முகப்பில் புதிய மலையக ஆத்திசூடிப் பாக்களை வெளியிட்டார். பாரதியாரின் பாடல்களை இலங்கை முழுவதும் பரவச் செய்தார்.<br />
<br />
இந்தியத் தொழிலாளர்களின் துயரத்தை முதன்முதலாக ஆய்வு செய்து வெளியிட்து தேசநேசன் இதழ். நடேசய்யர், கொழும்பு நகரில் வாழ்ந்த இந்தியத் தமிழர்களின் வேதனைகளை விவரிப்பதற்காக, தி சிட்டிசன் என்ற ஆங்கில வார இதழைத் தொடங்கினார். ஹட்டனில் அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் 1931 ஆம் ஆண்டு நடேசய்யரால் ஆரம்பிக்கப்பட்டது.<br />
<br />
== இலக்கியபணி ==<br />
மலையக இலக்கியத்தின் பிதா என்று கோ. நடேசய்யர் குறிப்பிடப்படுகிறார் என ஜெயமோகன் கூறுகிறார் [https://www.jeyamohan.in/41452/]. நடேசய்யர் இன்சூரன்ஸ், ஆயில் இன்ஜின்கள், வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் முறைகளும் ஆகிய துறை நூல்களையும் ஒற்றன் என்ற நாவலையும் எழுதியுள்ளார். ஹட்டன் நகரில் சகோதரி என்ற அச்சகத்தை நடத்தினார். இதன் மூலம் தொடர்ந்து தன்னுடைய நூல்களையும் மனைவியின் நூல்களையும் வெளியிட்டுவந்தார்.<br />
<br />
இந்தியாவின் பாட்டியாலா மகாராஜாவின் செயல்களை ஆவணப்படுத்தும் புபேந்திரசிங்கள் அல்லது நரேந்திரபதியின் நரக வாழ்க்கை எனும் நூலை இரண்டு பாகங்களாக 1933-ல் வெளியிட்டார். இந்நூல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.<br />
<br />
== மறைவு ==<br />
கோ. நடேசய்யர் நவம்பர் 7, 1947 -ல் மாரடைப்பால் இலங்கையில் காலமானார்.<br />
<br />
== இலக்கிய பங்களிப்பு ==<br />
[[File:வெளியீடு 1941.png|thumb|201x201px|வெளியீடு 1941]]<br />
<br />
===== இதழ்கள் =====<br />
<br />
* வர்த்தகமித்திரன் (1914)<br />
* தேசநேசன் (1922-23)<br />
* தேசபக்தன் (1924-29)<br />
* தொழிலாளி (1929)<br />
* தோட்டத்தொழிலாளி (1947)<br />
* உரிமைப்போர்<br />
* சுதந்திரப்போர்<br />
* வீரன் சுதந்திரன்<br />
* சிட்டிசன் (1922)<br />
* ஃபார்வர்ட் (1926)<br />
* இந்தியன் ஒப்பினியன் (1936)<br />
* இந்தியன் எஸ்டேட் லேபர் (1929)<br />
<br />
[[File:கோ.நடேசய்யர் வாழ்க்கை வரலாறு (1988).png|thumb|கோ.நடேசய்யர் வாழ்க்கை வரலாறு (1988)]]<br />
<br />
===== நூல்கள் =====<br />
<br />
* கணக்குப்பதிவு நூல் (1914, தஞ்சாவூர்)<br />
* வெற்றியுனதே<br />
* நீ மயங்குவதேன் (கட்டுரைத் தொகுப்பு, 1931)<br />
* இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம் (1941, இரண்டாம் பதிப்பு: 2018)<br />
* இந்தியா இலங்கை ஒப்பந்தம் (1941)<br />
* தொழிலாளர் சட்டப் புத்தகம் (1942)<br />
* அழகிய இலங்கை (1944)<br />
* Indo Ceylon Crisis (1941)<br />
* கதிர்காமம் (1946)<br />
<br />
===== பதிப்பித்த நூல்கள் =====<br />
<br />
* இந்தியத் தொழிலாளர் துயரங்கள் - பாடல் தொகுப்பு (1933). மீனாட்சி அம்மையார்<br />
* இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை (1940) - மீனாட்சி அம்மையார் <br />
<br />
== குறிப்புகள் ==<br />
[https://www.jeyamohan.in/41452/ உதிர்ந்த ரத்தத்துளிகளின் கதை - ஜெயமோகன்]<br />
<br />
== உசாத்துணை ==<br />
[https://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/31692-2016-10-21-01-32-57 ‘தேசபக்தன்’ கோ.நடேசய்யர் - கீற்று]<br />
<br />
[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B._%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D தேசபக்தன் கோ. நடேசய்யர் - வாழ்க்கை வரலாறு நூல் (1988) - ஆசிரியர் சாரல்நாடன்]<br />
<br />
[https://inioru.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/ நடேசய்யரின் சமூக வாழ்வியல் – ஒரு பார்வை : சட்டத்தரணி இ. தம்பையா]<br />
<br />
<br />
<br />
{{being created}}<br />
[[Category: Tamil Content]]</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=File:%E0%AE%95%E0%AF%8B.%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_(1988).png&diff=20438File:கோ.நடேசய்யர் வாழ்க்கை வரலாறு (1988).png2022-03-21T12:38:42Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>.</div>Thangapandiyanhttps://tamil.wiki/index.php?title=%E0%AE%95%E0%AF%8B._%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&diff=19475கோ. நடேசய்யர்2022-03-15T07:55:49Z<p>Thangapandiyan: </p>
<hr />
<div>[[File:கோ. நடேசய்யர் (1887 - 1947) .png|thumb|194x194px|கோ. நடேசய்யர் (1887 - 1947) ]]<br />
under progress Thangapandiyan<br />
<br />
கோதண்டராம நடேசய்யர் (ஜனவரி 14, 1887 - நவம்பர் 7, 1947) தமிழகத்தில் பிறந்து இலங்கையின் மலையத்தில் வாழ்ந்த தமிழறிஞர், பதிப்பாளர், அரசியல்வாதி, இதழாசிரியர், எழுத்தாளர்.<br />
<br />
பிறப்பு, கல்வி<br />
<br />
நடேசய்யர் தமிழ்நாடு விழுப்புரம் (அப்போதைய தென்னாற்காடு) மாவட்டம் வளவனூரில் கோதண்டராம ஐயர் - பகீரதம்மாள் தம்பதியருக்கு மகனாக ஜனவரி 14, 1887 -ல் பிறந்தார். அரசுப்பள்ளியில் ஆங்கில பொதுக்கல்வி கற்றவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டார். சென்னை அரசுப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து கைத்தொழில் பயிற்சி பெற்றார். வியாபாரம் குறித்த படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார். தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் தொழில்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல தேர்ச்சியுடையவர்.<br />
[[File:நடேசய்யர் மனைவி மீனாட்சியுடன்.png|thumb|240x240px|நடேசய்யர் மனைவி மீனாட்சியுடன்]]<br />
தனிவாழ்க்கை<br />
<br />
நடேசய்யரின் முயற்சியால் 1914, 1915 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் தென்னிந்திய வியாபாரிகள் சங்கம், தென்னிந்திய மில்காரர்களின் சங்கம், தஞ்சை மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் போன்றவை ஆரம்பிக்கப்பட்டன. ‘வர்த்தக மித்திரன்’ பத்திரிகைக்காக இலங்கையிலும் சந்தா சேர்த்தார். தென்னிந்திய வர்த்தகர்களின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள 1919 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்தார் நடேசய்யர். மீண்டும் 1920 ஆம் ஆண்டு இலங்கைக்கு தனது மனைவி மீனாட்சி அம்மையாருடன் வந்த நடேசய்யர் மலையகத் தொழிலாளரின் அடிமைவாழ்க்கையைப் பற்றி அறிந்து இலங்கையிலேயே நிரந்தரமாகத் தங்கி மலையகத்தமிழர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டார். தனது முதல் மனைவி இறந்த பின் மீனாட்சி அம்மையை மனைவியாக ஏற்றுக்கொண்டிருந்தார். மனைவி மீனாட்சியம்மாள், மலையகத் தமிழ் கவிஞர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். குறிப்பாக இலங்கை பெண்களின் வாக்குரிமைக்காக செயல்பட்டவர்.<br />
<br />
1930-ல் மலையகத்தின் தோட்ட அடிவாரத்தில், ஹட்டன் நகரில் குடியேறிய நடேசய்யர் தொடர்ந்து தோட்டங்கள் தோறும் சென்று மக்களிடையே உரையாற்றினார். நடேசய்யருடன் அவர் மனைவி மீனாட்சி அம்மையாரும் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக செயலாற்றினார். தொழிலாளர்களுக்காக இருவரும் பாடிய "தொழிலாளர் சட்டக்கும்மி' பாடல்கள் புகழ்பெற்றவை.<br />
<br />
<br />
அரசியல் வாழ்க்கை<br />
<br />
நடேசய்யர் காங்கிரஸ் பின்னணி கொண்டவர். 1924-ஆம் ஆண்டு நடேசய்யர் இலங்கை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றாலும் பின்னர் இலங்கை அரசாங்க சபைக்கு 1936ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அட்டன் தொகுதியில் வெற்றிபெற்று 1947-ஆம் ஆண்டு வரை இலங்கை இந்தியக் காங்கிரசின் சார்பில் அங்கம் வகித்தார். 1947 ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.<br />
[[File:தேசபக்தன் இதழ்.png|thumb|162x162px|தேசபக்தன் இதழ்]]<br />
பத்திரிகை பணி<br />
<br />
ஆங்கிலேயரின் வணிக ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர்கள் எழவேண்டுமென்ற நோக்கில் 1914-ல் வணிகர்களுக்காக வர்த்தகமித்திரன் என்ற பத்திரிகையைத் தொடங்கி, நடத்தினார். 1921-ல் நடேசய்யர் ஆரம்பித்த தேசநேசன் இலங்கையின் முதல் தமிழ் நாளிதழ். "தேசபக்தன்' இதழின் முகப்பில் புதிய மலையக ஆத்திசூடிப் பாக்களை வெளியிட்டார். மகாகவி பாரதியின் பாடல்களை இலங்கை முழுவதும் பரவச் செய்தார்.<br />
<br />
இந்தியத் தொழிலாளர்களின் துயரத்தை முதன்முதலாக ஆய்வு செய்து வெளியிட்து தேசநேசன் இதழ். நடேசய்யர், கொழும்பு நகரில் வாழ்ந்த இந்தியத் தமிழர்களின் வேதனைகளை விவரிப்பதற்காக, தி சிட்டிசன் என்ற ஆங்கில வார இதழைத் தொடங்கினார். ஹட்டனில் அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் 1931 ஆம் ஆண்டு நடேசய்யரால் ஆரம்பிக்கப்பட்டது.<br />
<br />
இலக்கியபணி<br />
<br />
மலையக இலக்கியத்தின் பிதா என்று நடேசய்யர் குறிப்பிடப்படுகிறார் என ஜெயமோகன் கூறுகிறார். <nowiki>https://www.jeyamohan.in/41452/</nowiki>. நடேசய்யர் இன்சூரன்ஸ், ஆயில் இன்ஜின்கள், வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் முறைகளும் ஆகிய துறை நூல்களையும் ஒற்றன் என்ற நாவலையும் எழுதியுள்ளார். ஹட்டன் நகரில் சகோதரி என்ற அச்சகத்தை நடத்தினார். இதன் மூலம் தொடர்ந்து தன்னுடைய நூல்களையும் மனைவியின் நூல்களையும் வெளியிட்டுவந்தார்.<br />
<br />
இந்தியாவின் பாட்டியாலா மகாராஜாவின் செயல்களை ஆவணப்படுத்தும் புபேந்திரசிங்கள் அல்லது நரேந்திரபதியின் நரக வாழ்க்கை எனும் நூலை இரண்டு பாகங்களாக 1933-ல் வெளியிட்டார். இந்நூல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.<br />
<br />
மறைவு<br />
<br />
கோ. நடேசய்யர் நவம்பர் 7, 1947 -ல் மாரடைப்பால் காலமானார்.<br />
<br />
இலக்கிய பங்களிப்பு<br />
[[File:வெளியீடு 1941.png|thumb|201x201px|வெளியீடு 1941]]<br />
இதழ்கள்<br />
<br />
வர்த்தகமித்திரன் (1914)<br />
<br />
தேசநேசன் (1922-23)<br />
<br />
தேசபக்தன் (1924-29)<br />
<br />
தொழிலாளி (1929)<br />
<br />
தோட்டத்தொழிலாளி (1947)<br />
<br />
உரிமைப்போர்<br />
<br />
சுதந்திரப்போர்<br />
<br />
வீரன் சுதந்திரன்<br />
<br />
சிட்டிசன் (1922)<br />
<br />
ஃபார்வர்ட் (1926)<br />
<br />
இந்தியன் ஒப்பினியன் (1936)<br />
<br />
இந்தியன் எஸ்டேட் லேபர் (1929)<br />
<br />
நூல்கள்<br />
<br />
கணக்குப்பதிவு நூல் (1914, தஞ்சாவூர்)<br />
<br />
வெற்றியுனதே<br />
<br />
நீ மயங்குவதேன் (கட்டுரைத் தொகுப்பு, 1931)<br />
<br />
இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம் (1941, இரண்டாம் பதிப்பு: 2018)<br />
<br />
இந்தியா இலங்கை ஒப்பந்தம் (1941)<br />
<br />
தொழிலாளர் சட்டப் புத்தகம் (1942)<br />
<br />
அழகிய இலங்கை (1944)<br />
<br />
Indo Ceylon Crisis (1941)<br />
<br />
கதிர்காமம் (1946)<br />
<br />
பதிப்பித்த நூல்கள்<br />
<br />
இந்தியத் தொழிலாளர் துயரங்கள் - பாடல் தொகுப்பு (1933). மீனாட்சி அம்மையார்<br />
<br />
இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை (1940) - மீனாட்சி அம்மையார் <br />
<br />
<br />
{{being created}}<br />
[[Category: Tamil Content]]</div>Thangapandiyan